May 25, 2009

32 கேள்விகள் - ஒரே ஆள் (தொடர் பதிவு)

இது ஒரு சங்கிலித் தொடர் இடுகை.... 

ஸ்டார்டிங் பாயிண்ட் நிலாவும் அம்மாவும்.

அவரின் சங்கிலித் தொடர்கள்.... (எனக்குத் தெரிந்த வரை)

ரவீ.

அத்திரி.

கடையம் ஆனந்த்.

ஹேமா.

கார்த்திகைப் பாண்டியன்.

குமரை நிலாவன்.

சிந்துகா.

தேவா.

வேத்தியன்

என் உயிரே... அபு...

இவர்களுடன் நானும்... (என்னை நம்ம டாக்டர் SuREஷ்  கூப்பிடுவாருன்னு நான் நெனச்சுப் பாக்கல... நன்றி தல..) 32 கேள்விகள்.. கொஞ்சம் பெரிய பதிலகள்தான்.....ஓவர் டூ (நான்) ஓவரா பேசப்போகும் பதிவு

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

       எனக்கு 5 அண்ணன்,2அக்காள்... நான் கடைசி.. கடைக்குட்டி... பதிவுகள் எழுதனும்னு நெனச்சப்போ இந்தப் பேரத் தவிர வேற எதும்தோணல...

       ரொம்பப் பிடிக்கும் இந்தப் பெயரை... ஏன்னா.. பெயரப் பாத்ததும் ஒரு இன்னசன்ஸ் (ஒன்னும் தெரியாத மூஞ்சி) நியாபகம் வரும்.. அது நமக்கு வசதியும் கூட.. (தவறுகள் மன்னிக்கப்படும்.)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

 கிடைத்தது கையை விட்டு நழுவியதால் சமீபத்தில் அழுதேன்.. இனிமேல் அழும் உத்தேசமில்லை..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அம்புட்டு அழகா இருக்குங்கோவ்!!! படிக்காம போனாலும் கையெழுத்தாலேயே பாஸான தேர்வுகள் பல.. ஆனா கணிதம் கொஞ்சம் கஷ்டப்படும்(அங்க நம்ம கையெழுத்து செல்லாதே!!!!)

4.பிடித்த மதிய உணவு என்ன?

இனிமேல் கிடைக்காத ”நண்பர்களின் டிபன்பாக்ஸ்” (இப்போதாங்க காலேஜ் முடிஞ்சுச்சு..) மிச்சபடி அம்மா சமைக்கும் எல்லாமே!!!

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நம்ம வாய் ஒட்டாதுங்க... பேசிட்டே இருக்கும்..  அதனால் புதிதாய் பழகுவது கஷ்டமல்ல...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

நகரத்தில் வளர்ந்த பையன்.. ஆதலால் அருவிலாம் பாத்ததுகூட இல்லை...

கூவம் கலக்கும் மெரினாவில் குளிக்கப் பிடிக்கும் என பொய் சொல்லவும் மனமில்லை... 

(நீ குளிப்பியா மாட்டியா?? போன்ற பின்னூட்டங்கள் தடை செய்யப்படுகிறது)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தோற்றம்.. (கலர் அல்ல...)
அகத்தின்  அழகல்லவா அது...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

எத செஞ்சாலும் ஏதாவது தனித்தன்மையுடன் செய்யனும்னு தோனும்.. அது புடிக்கும்...
புடிக்காததும் அதுதான்.. எப்போ பாத்தாலும் ஏதாவது புதுசா செய்யனும்னு நெனச்சுக்கிட்டே இருந்தா????

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சரிபாதியாக நான் என் நண்பர்களைக் கருதுகிறேன்,,,
புடிச்சது :- என்னை சகித்துக் கொள்வது
புடிக்காதது:- நில் (இது இங்கிலிபீச் ”நில்”லுங்க!!)

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

கல்லூரியில் கிடைத்த  என் தங்கை கல்லூரியுடனே சென்று விட்டதையும்...
கல்லூரி,பள்ளி நண்பர்களும் இல்லாதது வருத்தமே ... 

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளை...
(நல்லவேளை என்ன ஆடைன்னு கேக்கல...)

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

”திமிருக்கு மறுபெயர் நீதானே...
தினந்தினம் உன்னால் இறந்தேனே..”
என்னும் வரிகள் பாடிக்கொண்டிருக்கிறார் யுவன் ... (sms பாடல்)

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?]

கறுப்பு வெள்ளை
(பென்சில் கலரோ ?? ஏதோ சொல்லனுமேன்னு சொன்னது . ஆராய வேணாம்)

14.பிடித்த மணம்? 

குழந்தைகள் மேல் அடிக்கும் கலப்படமில்லாத மணம்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

இது கொஞ்சம் பெரிய பதில் சொல்லியே ஆகனும்

அ) சக்கரை~
www.sakkarai.com  பிரபல பதிவர் வரிசையில் சேர்ந்து விட்டார்.. ஆனாலும் எப்போ கேட்டாலும் உதவிகள் கிடைக்கும்... ஜாலி பேர்வழி..

எங்க இருந்துதான் இப்பிடிலாம் பின்னூட்டம் போடுறாரோ.. வித்தியாசமான பார்வை.. தொடர வாழ்த்துக்கள்.....

என் வயசுப் பையன்... என்னைவிட எழுத்தில் ரௌத்திரம் ஜாஸ்தி.. விஜய் அஜித்னு சண்டைல எறங்குனது புடிக்கல.. நல்லா வருவான் என் மாப்ள..

ஈ)ஜெட்லி(san sriram சித்து natraj)
பார்த்ததும் கேட்டதும்னு கலக்குறாங்க பசங்க.. இருவது வயசு ஆர்வக் கோளாருகள்... ஜாலி கேடிகள் என்னைபோலவே :-)

kricons,சொல்லரசன்,அப்பாவி தமிழன்,புது மாப்பிளைகள் கலையரசன்,தேனி சுந்தர்லாம் கூப்பிடனும்னு தோணுது.. ஆனா ஏற்கனவே 4 பேர கூப்டாச்சு... நீங்க பாத்துக்கங்க மக்கா!!!

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
காலெஜ் பத்தி கலக்குவாரு டாக்டரு... நெம்ப புடிக்கும் அவரொடைய இந்தத் தொடர்...

17. பிடித்த விளையாட்டு?

பதிவெழுதுவதுதான்...

18.கண்ணாடி அணிபவரா?

ஹ்க்கும்.. ஏற்கனவே அழகு இதுல கண்ணாடி வேறயா ?? இல்லங்கப்பா.....

19.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

மனசைத் தொடனும்.. 

(மசாலாவோ,காமெடியோ,சீரியஸோ.... ஏதுவா இருந்தாலும் பரவாயில்லை)

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க - நண்பர்களுடன்
அயன் - டிவிடி
finding nemo - டவுன்லோட் பண்ணி கணினியில்

21.பிடித்த பருவ காலம் எது?

பள்ளி,கல்லூரிக் காலம்... 
(இதுக்கு மேல வேற எந்தக் காலமும் இன்னும் வரலீங்க..)

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஹாய் மதன்
இப்படிக்கு சூர்யா மனப்பாடம் பண்ணும் அளவுக்கு படிச்சிட்டு இருக்கேன்

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாத்தனும்னு தோணும் போதெல்லாம்

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

குழந்தைகளின் குரல் --பிடித்த இசை (சத்தமல்ல)
வாகன இரைச்சல், ஆனந்த் சார் குரல்ன்னு எவ்ளவோ புடிக்காத சத்தமிருக்கு

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

காலேஜ்தான்
(40 கி.மீ வீட்டிலிருந்து தினமும் பஸ் பயணம்)

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இதுதான்னு சொல்ல முடியாது எல்லாத்தையும் அரகுறயா செய்வேன்...
உண்மையான பதில் தெரியலிங்க!!!

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

துரோகம்...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம் வந்தால் வெளிவருவான்

29.உங்களுக்கு பிடித்த (சுற்றுலா) தலம்?

எனக்கே எனக்கான என் ரூம்.  சுற்றுலாவெல்லாம் ஆர்வமில்லீங்க

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

துறையில் உயரங்களையும்.......
தனி மனிதானாக உறவுகளையும் சேர்ப்பவனாக ...

31.மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவியே இல்ல.. இதுல காரியம் வேறயா ???  யாருய்யா இதெல்லாம் சின்ன பசங்கள்ட கேக்குறது ??

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

உங்களுக்கு செரின்னு படுவதை 
அடுத்தவர்களை காயப்படுத்தாமல் 
வாழ்வது
(ஒரு வரிதாங்க கவித கவித மாதிரி..)

படித்ததற்க்கு நன்றி!!! 
எல்லோரையும் படிக்க வைக்க போடுங்கம்மா ஓட்டு.....

42 comments:

Suresh said...

உன்னை பற்றி தெரிந்து கொள்ள ரொம்ப உதவியது....

என்னையும் ஆதவா,
லோகு,ஜெட்லி போன்றவரோடு மதித்து கூப்பிட்டதுக்கு ரொமப் நன்றி நண்பா

அப்புறம் நம்ம பிரபலம் எல்லாம் இல்லை உங்களுக்கு தெரிந்த பதிவர் அவ்வள்வு தான் :-)

வாழ்த்துகள் மற்றவர்களுக்கும்,

உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

Suresh said...

நன்றி நண்பா

இராகவன் நைஜிரியா said...

// ரொம்பப் பிடிக்கும் இந்தப் பெயரை... ஏன்னா.. பெயரப் பாத்ததும் ஒரு இன்னசன்ஸ் (ஒன்னும் தெரியாத மூஞ்சி) நியாபகம் வரும்.. அது நமக்கு வசதியும் கூட.. (தவறுகள் மன்னிக்கப்படும்.)//

யாருப்பா இந்த கடைக்குட்டிக்கு இது மாதிரி எல்லாம் பதில் சொல்லக் கத்துக் கொடுத்தது.

எங்களுக்கெல்லாம் கடைக்குட்டி அப்படின்னா, உடனே ஞாபகம் வருவது விஷமம், விஷமம். எல்லாருக்கும் செல்லம். அதனால் துடுக்குத்தனம் அதிகமா இருக்குங்க.

இராகவன் நைஜிரியா said...

// 4.பிடித்த மதிய உணவு என்ன?

இனிமேல் கிடைக்காத ”நண்பர்களின் டிபன்பாக்ஸ்” //

அவனா நீ...

எத்தனைப் பேரை பட்டினி போட்டு இருக்கீங்க

இராகவன் நைஜிரியா said...

// 3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அம்புட்டு அழகா இருக்குங்கோவ்!!! படிக்காம போனாலும் கையெழுத்தாலேயே பாஸான தேர்வுகள் பல.. ஆனா கணிதம் கொஞ்சம் கஷ்டப்படும்(அங்க நம்ம கையெழுத்து செல்லாதே!!!!)//

ஓ இப்படியெல்லாம் தான் பாஸ் பண்ணீங்களா.

அதனாலத்தான் கணக்குப் பாடத்தில் கணக்கு பண்ண முடியலையா?

இராகவன் நைஜிரியா said...

// 5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நம்ம வாய் ஒட்டாதுங்க... பேசிட்டே இருக்கும்.. அதனால் புதிதாய் பழகுவது கஷ்டமல்ல...//

நான் என்று சொன்னால்தாங்க வாய் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் வாய் ஒட்டும்.

இராகவன் நைஜிரியா said...

// 6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

நகரத்தில் வளர்ந்த பையன்.. //

நகரத்தில் வளர்வது

நரகத்தில் வளர்வதுக்கு சமம்.

இராகவன் நைஜிரியா said...

// 8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

எத செஞ்சாலும் ஏதாவது தனித்தன்மையுடன் செய்யனும்னு தோனும்.. அது புடிக்கும்...புடிக்காததும் அதுதான்.. எப்போ பாத்தாலும் ஏதாவது புதுசா செய்யனும்னு நெனச்சுக்கிட்டே இருந்தா????//

பலம், பலவீனம் இரண்டுமே அதுதானா?

இராகவன் நைஜிரியா said...

// அ) சக்கரை~www.sakkarai.com பிரபல பதிவர் வரிசையில் சேர்ந்து விட்டார்.. ஆனாலும் எப்போ கேட்டாலும் உதவிகள் கிடைக்கும்... ஜாலி பேர்வழி..//

ஆம் இப்போ பிரபலப் பதிவர் வரிசையில் சக்கரை சேர்ந்துவிட்டார். பேர் மாதிரி இனிப்பானவர் என்றுதான் நண்பர்கள் சொல்லுகின்றனர்.

இராகவன் நைஜிரியா said...

// 17. பிடித்த விளையாட்டு?

பதிவெழுதுவதுதான்...//

அப்படி போடு அருவாள... எப்ப இருந்து அப்பு பதிவெழுவதை விளையாட்டுள சேர்த்தாங்க

இராகவன் நைஜிரியா said...

அம்புடுதேன். மீதிய யாராவது தொடருங்கப்பா.........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தல.., 32மே சூப்பர்..,

அடுத்த தசரதன் நீங்கதான்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
முகத்தோற்றம்.. (கலர் அல்ல...)//


கலர் பார்ப்பது பற்றி ஒரு இடுகை போடுங்க தல..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மனைவி(கணவன்) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவியே இல்ல.. இதுல காரியம் வேறயா ??? யாருய்யா இதெல்லாம் சின்ன பசங்கள்ட கேக்குறது ??//


கல்யாணம் பண்ணாம பிளாக் எழுதற பசங்களுக்கு வரிசையா கல்யாணம் ஆகுது. தெரியுமா.., தல...,

ஜெட்லி... said...

//எப்படி இருக்கணும்னு ஆசை?



துறையில் உயரங்களையும்.......
தனி மனிதானாக உறவுகளையும் சேர்ப்பவனாக ...//

சூப்பர்....
டச் பண்ணிட்ட மச்சி....

sakthi said...

என்னமா பதில் சொல்லறீங்க

பதில்களிலேயே தெரிகின்றது உங்களை

பற்றி

வாழ்த்துக்கள்

அழகிய பதிவு

ஆதவா said...

வாழ்த்துக்கள் கடைக்குட்டி.... நல்ல தேர்வுதான்.. நம்ம மச்சானை (சுரேஷ்) தெரிஞ்சுக்க ஒரு வழி பண்ணினீங்க....

ஆதவா said...

ஏற்கனவே நான் கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டேன்.. எனது தளத்தில் இருக்கிறது!!!

10. கல்லூரி நண்பர்கள் இல்லாமல் ஏங்குவது மனதைத் தொட்டது

14. பிடித்த மணம்.... வித்தியாசமான சிந்தனை...

17. அழகு!!!! ரசித்தேன்..

25. என்னங்க... வேறெங்குமே போனதில்லையா??

8. தனித்தன்மையோடு உண்டான உங்கள் பதிவுகள் சில பார்த்திருக்கிறேன்... பசங்க விமர்சனம் அதிலொன்று!!!

வேத்தியன் said...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

துறையில் உயரங்களையும்.......
தனி மனிதானாக உறவுகளையும் சேர்ப்பவனாக ...
//

ஆஹா அருமைய்யா...

கலக்கல் பதில்கள் மாப்ள...

வாழ்த்துகள்...

Suresh said...

உங்களுக்கு செரின்னு படுவதை
அடுத்தவர்களை காயப்படுத்தாமல்
வாழ்வது
(ஒரு வரிதாங்க கவித கவித மாதிரி..)

பிண்ணுறியே ...

அப்புறம் உனக்கு இல்லாத தனி துவமா தண்ணடக்கம் ரொம்ப ஸாச்தி தான்

Suresh said...

ஆதவா சொல்லிடாரு ஏற்கனவே ;)

//வாழ்த்துக்கள் கடைக்குட்டி.... நல்ல தேர்வுதான்.. நம்ம மச்சானை (சுரேஷ்) தெரிஞ்சுக்க ஒரு வழி பண்ணினீங்க....//

அட பாவி மச்சான் ;) இதுல ஏதோ உள் குத்து இருக்கே

Suresh said...

@ இராகவன் நைஜிரியா
# // அ) சக்கரை~www.sakkarai.com பிரபல பதிவர் வரிசையில் சேர்ந்து விட்டார்.. ஆனாலும் எப்போ கேட்டாலும் உதவிகள் கிடைக்கும்... ஜாலி பேர்வழி..//

ஆம் இப்போ பிரபலப் பதிவர் வரிசையில் சக்கரை சேர்ந்துவிட்டார். பேர் மாதிரி இனிப்பானவர் என்றுதான் நண்பர்கள் சொல்லுகின்றனர். #


அன்புக்குரிய இராகவன் அவர்களுக்கு
உங்களோடும் பேச ஆவலாய் தான் உள்ளேன்.. நான் இன்னும் கத்துக்குட்டி தான் நண்பா..

உங்கள் வார்தைக்களுக்கு நன்றி

சுந்தர் said...

(நல்லவேளை என்ன ஆடைன்னு கேக்கல...)
நல்ல வேலை தப்பிச்சோம், இல்லாட்டி சென்சார் ஆகிருக்கும் போல .

லோகு said...

* பதிவு எழுத ஒண்ணுமே இல்லாம இருந்தேன்.. ரொம்ப சந்தோசம்..

* ஆமா, ரௌத்திரம் நா என்னா??

* பெயரை பார்த்ததும் ஒரு இன்னொசன்ஸ் நியாபகம் வரும்.. வரலையே...

* கிடைத்தது கைய விட்டு நழுவியதால் அழுதேன்.. இதுக்கெல்லாம் அழுவாங்களா..

*குளிக்க புடிக்குமா.. (இது தடை செய்ய படவில்லை)

* //எப்போ பாத்தாலும் ஏதாவது புதுசா செய்யனும்னு நெனச்சுக்கிட்டே இருந்தா????// அப்படினா அன்னைக்கு ரோட்டுல தலைகீழா நடந்து போனது நீதானா??

* கருப்பா?? வெள்ளையா?? எதாவது ஒரு கலர் சொல்லு..

* சக்கரை, ஆதவா, ஜெட்லி ஆகியோரோடு என்னையும் சேர்த்து அவர்களை அவமான படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்..

* கண்ணாடியும் அழகுதான்.. கண்ணாடி அணியும் பல அழகர்கள் இருக்கிறார்கள்.

* மனசை தொடணும்???? அப்படினா...

* //மாத்தனும்னு தோணும் போதெல்லாம்// - அதுதா எப்ப தோணும்னு கேக்கறாங்க..


* இது சக்கரைக்கட்டிக்கு : தலைவா உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி..

Anonymous said...

@ தேனீ

//(நல்லவேளை என்ன ஆடைன்னு கேக்கல...)
நல்ல வேலை தப்பிச்சோம், இல்லாட்டி சென்சார் ஆகிருக்கும் போல . //

ஹீ ஹீ நான் நினைத்தேன் நிங்க சொல்லிட்டிங்க

Suresh said...

//* இது சக்கரைக்கட்டிக்கு : தலைவா உங்களுக்கு தன்னடக்கம் ஜாஸ்தி.//

"சக்கரை, ஆதவா, ஜெட்லி ஆகியோரோடு என்னையும் சேர்த்து அவர்களை அவமான படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.. "

இந்த தன்னடக்கத்தை விடவா :-) லோகு

Suresh said...

@ தேனீ

//(நல்லவேளை என்ன ஆடைன்னு கேக்கல...)
நல்ல வேலை தப்பிச்சோம், இல்லாட்டி சென்சார் ஆகிருக்கும் போல . //

நானும் நிணைத்தேன் ;)

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

வெற்றி-[க்]-கதிரவன் said...

//2.கடைசியாக அழுதது எப்பொழுது?



கிடைத்தது கையை விட்டு நழுவியதால் சமீபத்தில் அழுதேன்.. இனிமேல் அழும் உத்தேசமில்லை..//

இனிமேல் வேறு யாரையும் காதலிக்குற எண்ணம் இல்லையா ?

சித்து said...

இப்படி ஒரு பதிவு முறை இருப்பதை அறிமுகம் செய்து எங்களை அழைத்தமைக்கு மிக நன்றி கடைக்குட்டி. ஒரு மூன்று தினம் அவகாசம் தாருங்கள்.

கடைக்குட்டி said...

@சக்கர

தன்னடக்கமான பின்னூட்டத்திற்க்கு நன்றி!!

இராகவன் அண்ணனுடன் நட்”பூ ”
மலர்ந்துருச்சு போல....

கலக்குங்க!!!

கடைக்குட்டி said...

@இராகவன் நைஜிரியா

// எல்லாருக்கும் செல்லம். //

அது போதுங்க...

------------------------------

//எத்தனைப் பேரை பட்டினி போட்டு இருக்கீங்க//

இதெல்லாம் சாதாரணமப்பா!!!

----------------------------------
//
அதனாலத்தான் கணக்குப் பாடத்தில் கணக்கு பண்ண முடியலையா?//

இது நல்லா இருக்கே!!

--------------------------------
//நான் என்று சொன்னால்தாங்க வாய் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் வாய் ஒட்டும்//

பேசிட்டே இருப்பேன்னு சொன்னேண்ணே... அவ்ளோதான்

கடைக்குட்டி said...

@இராகவன் நைஜிரியா

கடக்கி யாரும் வரமாட்டுறாங்களேன்னு ஃபீல் பண்ற காலத்துலயும்.. இப்போ ஒரு ரெண்டு மூனு பேரு வந்துட்டு போற காலத்துலயும் உங்க பின்னூட்டம்

கண்டிப்பா

பின்னூக்கம் தானுங்க!!!!

நன்றி

கடைக்குட்டி said...

@ sureஷ்

//கல்யாணம் பண்ணாம பிளாக் எழுதற பசங்களுக்கு வரிசையா கல்யாணம் ஆகுது. தெரியுமா.., தல...,//

எனக்கு நடந்தா அது குழந்தைத்திருமணம் தல

கடைக்குட்டி said...

@ஜெட்லி

நன்றி-- நீ எப்பிடி டச் பண்றன்னு பாப்போம்...

கடைக்குட்டி said...

@ஆதவா

விரிவான அலசலுக்கு நன்றி...

நீங்க எழுதிட்டீங்கன்னு தெரியாம உங்கள கூப்டுட்டேன்... பரவயில்லா.. உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்ற ஆர்வந்தான்...

கடைக்குட்டி said...

@ வேத்தியன்

நீங்களும் கலக்கு கலக்குன்னு கலக்கி வெச்சுருந்தீங்களே அப்புறமென்ன..

கடைக்குட்டி said...

@ தேனி சுந்தர்

ஆமண்ணே... :-)

கடைக்குட்டி said...

@ லோகு
//
ஆமா, ரௌத்திரம் நா என்னா??
//

இப்பிடி நல்லா இருக்கு நல்லா இல்லன்னு சொல்லாமா... பின்னூட்டப் பெட்டியில் பதிவெழுதிட்டுப் போறதுதான் மாப்ள ரௌத்திரம்..


விரிவான அலசலுக்கு நன்றி !! :-)

கடைக்குட்டி said...

@சக்கர

என்னங்க தம்பிய சுத்தி சுத்தி வர்றீங்க போல!!!1

கடைக்குட்டி said...

@பித்தன்

//இனிமேல் வேறு யாரையும் காதலிக்குற எண்ணம் இல்லையா ?//

அட யாருப்பா இது?? ஏற்கனவே 32 பதில் சொல்லி முடியல... நீங்க வேறயா??? (கண்டிப்பா காதல் ப்ரச்சனை இல்லீங்க!!!)

கடைக்குட்டி said...

@ சித்து..

செரிங்க.. நல்லா எழுதுங்க... :-)