August 01, 2010

எந்திரன் -- என் எதிர்பார்ப்புகள்!!



“.. இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ... ”கேட்டுட்டே எழுதிட்டு இருக்கேன்...

“சிவாஜி” படம் அறிவிப்பு வந்ததும் எல்லோருக்கும் மனசுல பல விஷயம் தோனி இருக்கும்...


“சிவாஜின்ற பேரு நடிகர்திலகத்தை குறிக்கும்.. (பழைய காலத்து பேரு மதிரி பல பேர் நெனச்சு இருப்பாங்க.. அதுக்கு ஏத்த மாதிரி படம் பேரு போடும் போது பழைய கால ஸ்டைல்லதான் போடுவாங்க..)

”சிவாஜி வாயில ஜிலேபி... ” (இந்த மேட்ட்ரும் நியாபகம் வந்து இருக்கும்.. அதும் இருக்கு படத்துல...)





“ஏண்டா ஃபர்ஸ்ட் ஸீன் எப்பவுமே தலைவர் அறிவுறதான் சொல்லுவாரா?? போலிஸ் கீலீஸ்ல மாட்ட மாட்டாரான்னு தோனும்.. சிவாஜில வித்தியாசம உள்ள வந்து இருப்பாரு.. ( என்னதான் வித்தியாசம வந்தாலும்
அதே கல்வித் தந்தை .. கள்ள.. ச்சே.. நல்ல காதலன் அப்டீன்ற ஹீரோ மெட்டீரியல்ல தான் நடிச்சு இருப்பாரு...)

நான் எதுக்கு இப்ப கொசுவத்தி சுத்திட்டு இருக்கேன்னா... இந்த மாதிரி எந்திரன்ற பேரக் கேட்டதும்.. காதுல விழுற செய்திகளையும் மீறி சில எதிப்பார்ப்பு இருக்கும்.. அது என்னன்னு இப்ப பட்டியல் போடுறேன்..
படம் ரிலீஸ் ஆனதும் சரிபாத்துக்குவோம்..

நாம எதிர்பாக்குற கதை இதுதான..??

தலைவர்(வசீகரன்..) தலைசிறந்த விஞ்ஞானி.. அவர் உருவாக்குற விஞ்ஞானக் குழந்தை (ச்ச்சிட்டி..) .. அது படைப்பின் உச்சக்கட்டம்.. மனிதன் மாதிரியே.. ஆனால்
மனிதனின் குறைகளான உடல்நலக்குறைவு.. மன நலக்குறைவு .. இல்ல.. இந்த மாதிரி ஒரு காதலன் வேணும்னு பொண்ணுங்க ஏங்குற மாதிரி இருக்கும்... வசீக்கும் ஐசுக்கும் காதல்.. அதுக்கு நடுவுல
எதிரி க்ரூப் விஞ்ஞானி கையில சிட்டி மாட்டிக்க அவர் இத மாத்திட்றாரு.. கடைசில வசீ எப்புடி நாட்டையும்.. ச்சிட்டியையும் எப்புடி காப்பாத்துறாருன்னு கதையாக இருக்கலாம்..
நடுவுல ஏ.ஆர்.ஆர் பாட்டு..
பீட்டர் ஹெய்ன் சண்டைகள்..
சந்தானம் அன் ச்சிட்டி ரோபோவின் காமெடிகள்...
இந்த மசாலால இன்னும் டிடெயில்லா என்ன இருக்கலாம்ன்னு யாரோ புக் பண்ண ரூம்ல உக்காந்து யோசிச்சப்ப கெடச்சவை...




கதைலயும் உருவாக்கத்துலயையும் சுஜாதாவோட பங்கு முக்கியமானது.. அதனால படம் துவங்கும் போது அமரர்.சுஜாதாவுக்கு நன்றிகள்ன்னு டைட்டில் போடுவாங்கன்னு எதிர் பார்க்கலாம்..
(சன் பிக்சர்ஸ் அனுமதித்தால் :-)


ஜீன்ஸ் படத்துல அவங்க ரெட்டைப் புள்ளைங்கப்பான்னு சத்தியம் பண்ணாத கொறயா ப்ராசாந்த்தோட அறிமுகம் இருக்கும்.. அதே போன்று... தலைவரோட அறிமுகம் இருக்கலாம்.. அவர் விஞ்ஞானிபான்னு காமிக்க
அவரோட லாபே அவரோட வீடாகவும் இருக்கலாம்... (நியூ படத்தின் மணிவண்னன் நியாபகம் வரக் கூடாது :-)




ச்சிட்டி ரோபோ பிறப்பு கண்டிப்பா எல்லோருக்கும் ஆச்சரியமா இருக்கலாம்.. கற்பனைக்கு எட்டாத வகையில்..



ஐஸுக்கும் ரஜினிக்கும் காதல் வழக்கம்போல காட்டப்படலாம்.. வித் சந்தானம் அண்ட் கருணாஸ் க்ரூப்...




சிவாஜில காட்டுன மாதிரி இதுலையும் வில்லன் இது வரைக்கும் நமக்கு அறிமுகம் இல்லாதவர்.. அதனால அவர் என்ன பண்ணாலும் புதுசாக இருக்கலாம்...


நான் முக்கியமா நெனக்குறது.. ச்சிட்டின்ற பேரு.. ரோபோ.. இந்த மேட்டர் எல்லாம் கொழந்தைகள்ளுக்கு புடிச்ச மேட்டர்.. அதனால கொழந்தைகள கவர்ற காமெடி இருக்கலாம்... (போன வருசம் வாமனன்
படத்தோட விமர்சனமே நான் “எந்திரனில் கலக்கப் போகும் சந்தானம்”ன்னுதான் எழுதுனேன்..”)


சந்தானம் ரோபோ ரஜினிய மானாவாரியா கலாய்க்கலாம்...

தலைவரோட ஆளோட வேற ஒருத்தன் டூயட் பாட முடியாது .. ஆனா அதுவும் பாஸிபிள் இங்க.. ரோபொ ரஜினிக்கு ரெண்டு டூயட்.. ஏன்னா கிட்டத்தட்ட வில்லன் என்பவனும் ரஜினிதானே...


ரோபோ ரஜினி பொறந்ததும் அவர ஹீரோவும் ஐசும் கொழந்த மாதிரி பாத்துக்கலாம்.. அதனால முதப் பாதில ச்சிட்டி நல்லவனா இருக்கலாம்.. ஏதோ நடந்த பொறவு அதுவே ஐச டாவடிக்கலாம் :-)



ரஜினி கட் பண்ணி வெச்சிருந்த உணர்ச்சிகள ரோபோவே ஆக்டிவேட் பண்ணிக்கலாம்.. (சுஜாதாவோட டச் இந்த மாதிரி இருக்கும்னு ஒரு நெனப்பு...)

இதுக்கு மேல உங்களுக்கு என்ன தோனுதுன்னு சொல்லுங்க :-)


ஆடியோ வெளியீடு -- ஓர் பார்வை

நேத்து(31-07-2010) கோலாலம்பூர்ல ஆடியோ லாஞ்ச்.. இண்டர்நெட்ல பாத்தேன்.. விவேக்தான் தொகுத்தாரு.. அவரோட சமீபத்திய காமெடி போல மொக்கையாக..
எல்லோரும் ரஜினி சூப்பர்.. காலாநிதி சூப்பர்ன்னு பேசுனாங்க.. மாறி மாறி முதுகு சொறிஞ்சுக்குறத தவிர வேற என்ன செய்ய முடியும் அங்க..

ஆனாலும் ரஜினி பேசுறப்ப.. ஐசத் தொட கூச்சமா இருந்ததா சொன்னாரு.. அமிதாப்போட மருமக.. என்னடா இப்பிடி நடிக்கிறோமேன்னு தோணுச்சாம்...
என்ன சொல்றதுன்னு தெரியல் .. எதிர்கால இந்தியாவே.. நீ பாத்துக்க இத.. :-)

பாடல்கள் -- ஒரு கேட்வை.. (பார்வை மாதிரி :-)

“இரும்பிலே இருதயம் முழைக்குதோ... “ செம.. அ.ஆ பட “மரங்கொத்தியே..” பாடல் பீட்ல இருந்தாலும் மதன் கார்க்கி ஸ்கோர் செய்யுறாரு...

”கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு... “

வரிகள் ரசித்தேன்...

”என் இன்ஜின் நெஞ்ஞோடு
உன் நெஞ்ஞை அணைப்பேன்..

நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்... “

ஹா ஹா.. கண்டிப்பாக ஒரு ரோபட் பாடலாம் இப்படி...


வைரமுத்து வரிகள் வழக்கம்போல... ஐசுக்கே ஐசு வெக்காதன்னு சோல்லும் வரிகள் வைரமுத்து வழக்கம் போல...

நெறய கொசுவத்தி சுத்தி இருக்கேன்.. கொஞ்சம் பாத்து ஓட்டு போடுங்க சாமீய்..

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் :-)