October 23, 2008

கதை கேக்கலியோ கதை ...

எனக்கு வாழ்த்துக்கள் என்று தட்டச்சு செய்த விரல்களுக்கு நன்றி ......


இன்ன்னிக்கி கதைகளைப் பற்றி காண்போம்.. கடைக்குட்டி என்பதால கதை கேட்டு வளந்து இருப்பேன்னு நீங்க நெனச்சா அங்க தான் தப்பு பண்றீங்க ... நான் அப்படி வளரல ... பின்ன என்ன வென்னைக்குடா இந்த தலைப்புனு கேக்குறீங்களா ??

இறிங்க சொல்றேன்..


எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து (உண்மையில் அது எந்த நாள் ?? யாரவது அன்பர்கள் அது பற்றிய பதிவை காண்பிக்கவும் ) நான் kadhai kettu தூங்கியது கெடையாது.. இருந்தாலும் நல்ல தூக்கம் தான் தூங்கி உள்ளேன் .. எனக்கு தெரிந்து நான் கேட்டு தூங்கிய முதல் கதை என் தந்தையின்டைyaது .. அவர் அவரது தந்தையை பார்த்ததே இல்லையாம் . . அவர் கருவாக இருக்கும் போதே அவரது தந்தை இறந்து பொய் விட்டாராம் .. ஹ்ம்ம் ... கேக்கும் போதே தூக்கம் வரும் .....


இந்த வாழ்கை வரலாறை தவிர நான் கேட்ட கதை என்று எனக்கு எதுவும் நினைவில் இல்லை ... ஆறாம் வகுப்பு படிக்கு podhu ஆசிரியர் தினத்துக்காக ஒரு கதை எழுதி நாடகமாக நடித்தேன் .. அப்பவே வில்லன் ரோல் தான் ..மெட்ராஸ் பத்தி தெரியாம வரும் ஒரு கிராமதான்னிடம் ஒருவன் சென்ட்ல் ஸ்டேஷன் - அயும் லைட் ஹௌசெயும் விதுருவான் .. அந்த கிராமதான் அங்கு போக ......அவன் சொன்னதை கேட்டு அவனை எல்லோரும் பைத்தியம் என்று நெனைக்க .. அவன் சாபம் விட .. அவனை ஏமாற்றிவன் அச்சிதேன்ட் ஆக .... கதை சுபம்.. இதில் அந்த ஏமாற்றும் வில்லன் நான். . நல்ல வரவேற்பு .. அடுத்த ஆண்டு ஒரு மொக்க ஜோக்க காமெடி கதையா மாத்தி போட்டேன் .. வரவேற்பு ..


இப்போ தான் எனக்கு அந்த காலம் கண் munnaadi வந்து நிகிது... பைத்தியம் மாதிரி கதைகளை பற்றி யோசித்து கொண்டு iruppen ... பாக்கியராஜ் படங்களை பார்த்தல் எப்படி இந்த ஆள் இப்படி யோசிகிர்ரார்னு தோணும்.. பல கதைகள்.. பல பல கதைகள்.. என் மனதில் ஓடியது..


அப்படி ஓடும் கதைகளுக்கு ஒரு வடிகாலாக நான் தேடி கொண்டது தான் என் காலேஜ் நோட்ஸ் .. அதில் பின் பக்கம் கதைகள் எழுதுவேன்,,, இது வரை ஐந்து குட்டி கதைகள் எழுதி வைத்துள்ளேன் .. அதை எப்படியாவது ஏதாவது பரிசு போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது என் அவா .. காணமல் போனவன் என்னும் கதை உலகத் தரத்தில் ஒரு உள்ளூர் கதை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன் ... பதிவர்கள் யாரவதுபத்து ரூவா பணமும் படிக்கணும் னு எண்ணமும் இருந்த தொடர்பது கொள்ளவும் .. கடைக்குட்டியின் எழுத்தை ரசிக்கவும்... ( ஹப்பா !! ஒரு வாழியா நெனச்சத சுத்தி வளச்சு சொல்லியாச்சு .. :-))


குழந்தைகளுக்கு கதை சொல்லும் அன்பர்கள் முதலில் நீங்கள் சொல்லும் கதையெய் நீங்கள் கீட்பீர்கள என்று நினைத்துப் பார்த்து பின் சொல்லவும் ... கடைக்குட்டியின் வேண்டுகோள் ... ( ஹப்பா !! தலைப்புக்கு ஏத்த மாறியும் முடிச்சாச்சு ... டாட்டா :-)

October 22, 2008

ரிக்சா-காரேஇங்க

சில நாட்களுக்கு முன் பாரிஸ்சில் உள்ள என் வீட்டிற்கு வந்த என் நண்பர்கள் இருவர் ரொம்ப அதிசியமா பார்த்த விஷயம் இந்த ரிக்சா .....
"டேய் !! இன்னமும் இதெல்லாம் இருக்கா ??"
"ஆமாடா " - நான்
"அடப்பாவி !! இதெல்லாம் எங்க ஏரியா லே பாக்குறதே அதிசயம் .........."
இப்படி இதை பற்றி நிறைய ஊத்துனாங்க .... எத பத்தின்னு நானும் யோசிச்சா நம்ம ரிக்சா பத்தி.... அப்போ தான் அழிஞ்சு வரும் அற்புதம் இதுன்னு புரிஞ்சுது... அதனாலதான் என் முதல் முதல் வலைஎழுத்து ரிக்சாவிற்கு சமர்ப்பணம்...

எனக்கும் ரிக்சாவிற்கும் இருக்கும் தொடர்பு ரொம்ப.. பல பள்ளி குழந்தைகளின் வாழ்க்கையைப் போல என் பள்ளி வாழ்க்கைக்கும் ரிக்சாவிற்கும் தொடர்புகள் நிறைய ... என் அண்ணனுடன் ரிக்சாவில் பள்ளிக்கு போனதில் இருந்து தொடங்குகிறது என் கதை .. என் பள்ளி வாழ்கையும்தான் .5 ரூவா குடுத்து போவோம் நாங்க ரெண்டு பேரும் .. நான் ஒன்னாவது படிக்கும்போது 5 ரூவா இருந்த ரிக்சா காசு .. எங்க வயசு ஒன்னு ஏறும் பொது அதுவும் ஒரு ரூவா ஏறுச்சு... அப்பவே ஏன்மா இப்டி காசு ஏறுதுன்னு கேட்ட அறிவாளி தான் இந்த கடைக்குட்டி .... சரி மேட்டர் கு வருவோம்... இப்டி ஒரு ஒரு ரூவா வா ஏறுன இந்த ரிக்சா காசு ..நான் எட்டாவது படிச்சு முடிச்சு வரும் போது 12 ரூவா ஆச்சு.... ரிக்சால ஸ்கூல் போயிடு வர்றதே ஒரு சந்தோசம் தான் ...

நான் சொல்ல மறந்த ஒன்னு... நான் ஸ்கூல் படிக்கு பொது மாச மாசம் காசு குடுத்து போகல ரிக்சா ல .. தினமும் நாங்களே தான் பேசி வரணும்.. ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு புது அனுபவம் காத்து இருக்கும் .. சில பேரு ரிக்சா நாம உக்காந்து வர்றதுகேய் ரொம்ப நல்ல இருக்கும் .. லோகேஷ் மாமா அப்டியே மயில் இறகு மாதிரி பரந்து வருவார்...சில தாத்தா வண்டி ல ஏறுனா நாம நைட் குள்ள போய்டலாம் ... ரம்பம் ... சில பேரு வண்டி ரம்பம்பம் .....

மழைகாலத்துல ரிக்சால போறதே ஒரு கலை தான் .. ப்ளூ கலர் தார் பாய் ல மூடி வச்சு இருப்பாங்க ரிக்சாவ .. அது குல ஏறி உக்காந்து .. நம்ம போற எடம் வந்ததும் சொல்லணும்.. பச்ச கலர் மசூதி பக்கதுல என்ன வீடு .. அந்த மசூதி வந்துருச்சா இல்லையானு பாக்குதே ஒரு கலை தான்.. சில சமயம் ஏதோ ஒரு பச்ச கலர் வீட்டுகிட்ட எறங்குனதும் ஒரு நியாபகம்..

இப்டி இருந்த ஒரு வாகனம் .. இப்போ அழிஞ்சு வருது .. ஏன்னு தெரியல.. இவ்ளோ பேசுற நானும் ரிக்சாலபொய் ரொம்ப நாள் ஆகுது ... இத படிச்ச பிறகு .. எங்கயாவது ரிக்சா வா பாத்தா ...ரிக்சா-காரேஇங்க daaன்னு போய்டாம ... அந்த ரிக்சா ல போக பாருங்க .. அது தன் இந்த கடைகுட்டிஒட அவா ...

( லேட் ஆ பொய் உங்க காரியம் கேடு போச்சுநா ..... அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லேங்க அண்ணா!!!!)

யார்ரா நீ ??

என்னை பற்றி இப்படி கேட்பவர்களுக்காக எழுதப்படும் இடுகை இது . . . . .
ஒரு அழகான வீட்டின் அம்சமாக கடைக்குட்டியாக வாழ்க்கையை அனுபவித்து வரும் அன்பன் நான்.....

நான் இங்கு செய்யபோவது இந்த உலகில் உள்ளவை பற்றி என்னுடைய கருத்துக்களை பதிவு செய்யப்போகிறேன் .. உலகில் உள்ள பொருட்களுக்கு முடிவில்லை ... இந்த இடுகைக்கும் தான் ...

கணிப்பொறியியல் கடைசி ஆண்டு படிக்கும் மாணவன் என்பது உபரித் தகவல் ..