December 30, 2009

முடிந்தது சூர்யாவின் கதை 2010ல்...



2008 கடைசில பதிவுகள் எழுத ஆரம்பிச்சு கிழிச்சது பெருசா ஒன்னுமில்ல.. 2009 முழுசும் வெட்டியாவே போச்சு... அதுக்கு காரணம் ரெண்டு..

1* என் மனத் தயக்கங்கள்..
2* முதலாவதாக சொன்னதேதான்...

மனத் தயக்கங்கள பட்டியலிடுறேன்... மனசுவிட்டு பேசுனா குறையுதான்னு பாப்போம் மனத்தயக்கம்....

** பின்னுட்ட மேனியா **

எந்த பின்னூட்டத்துக்கு நன்றி சொல்றதுன்னே தெரியலீங்க.. நம்ம பதிவ பிரிச்சு மேயுற.. புதுசா யோசிக்க வைக்குற பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லலாம்.. படிக்காமலேயே பின்னூட்டம் போட்டா அதுக்கும் நன்றி சொல்லி நேரத்த வீணாக்கனுமா???

என்னுடைய தயக்கம் இதுதான்.. பின்னூட்டம் இடுற எல்லாருக்கும் நன்றி சொல்லனுமா?? இது சம்பந்தமா பதிவுலக சட்டம் என்ன சொல்லுது..

*** பதிவுகள் இடைவெளி ***

ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் குறைந்த பட்ச கால இடைவெளி எவ்ளோங்க??? என்னைப் பொருத்த வரைக்கும் ஏதாவது ஒரு திரட்டில நம்ம பதிவு மொத பக்கத்துல வந்துட்டா.. அப்பா.. ஒலகமே நம்ம இடுகைய படிச்சுடுச்சுடா மக்கான்னு ஒரு சந்தோசம்..

அதாவது என்னுடைய கணக்குப்படி ஓட்டுகள்தான் அடுத்த பதிவ தீர்மானிக்குது..
யாரும் படிச்ச என்ன படிக்காடி என்னன்னு மவனே 2 ,3 தோணுனாலும் அடிச்சு ஆடிடலாமா???

*** தமிழ் மணம் **

நானெல்லாம் தமிழிஷ்ன்னு ஒன்னு ஒருக்குறதாலதான் கொஞ்சமாவது எழுதுறேன்.. டாக்டர் சுரேஷ்கிட்ட கடந்த ஆண்டு முதலே பொலம்பிக்கிட்டுத்தான் இருக்கேன்.. அதுல எப்புடி சேக்குறதுன்னு தெரியலன்னு..

கஷ்டப்பட்டு சேத்தாலும்.. ஒரு ஓட்டு கூட விழல.. ஏன்???
தமிழ்மணத்துல விருதுகள்ளாம் தர்றாங்க.. ஓட்டெல்லாம் போட்டாச்சு.. ஆனா அடுத்த வருஷம் நாமளும் வரணும்ல.. என்ன பண்றது..

***வயது***

இதுதாங்க ரொமப பெரிய தடை.. முக்கியமா பதிவர் சந்திப்புகள்னாலே பயமா இருக்கு.. அதுல இருக்குற எல்லார் மொகத்த பாத்தாலும்.. என்னதான் எழுத்துல கலாய்ச்சாலும்.. சில பேர் நாங்கள்ளாம் யூத்துன்னு சொல்லிக்கிட்டாலும்..

நாம ரொம்ப சின்ன பயலா இருப்போமோ,.. யாரும் மதிக்க மாட்டாங்களோன்னு ஒரு பயம்.. (வயசு 21 ஆனாலும்.. எது அந்த 20க்கு அப்புறம் வருமே அந்த 21ஆ கேட்டுடக் கூடாதில்ல..)அதான் சென்னைலயே இருந்தாலும் பதிவர்களிடம் போனில் கூட பேசியது இல்லை.. சந்திப்புகளுக்கும் போனதில்லை,.,. (ஜெட்லிகூட ஒட்டிக்கிட்டே போய் 2010ல எல்லாரையும் பாக்கலாம்ன்னு ஒரு திட்டம்.. என்ன ஜெட்லி போலாமா???)

**மேட்டர்**

பதிவுக்கானா மேட்டர்.. ரொம்ப ஆழமா ஒரே கருத்தா இருக்கனும்னு நெனப்பேன்.. நேரமிருந்தாலும் சில சமயம் இதெல்லாமா எழுதுவதுன்னு எழுதுவது இல்லை.. (சினிமாவ தவிர மிச்சதெல்லாம் கவனிக்கப் படுவதில்லையோன்ற ஒரு பயம்..)
ஆனா இப்போத்தான் குவியல்,அவியல்,காரச்சட்னின்னு எல்லா அண்ணன்மார்களும் ஏன் எழுதுறாங்கண்னு புரியுது..

நாமளும் அடுத்த வருஷம் முதல் தாக்கிடுவோம்.. ( நல்ல பெயர் சொல்பவர்களுக்கு “ஹண்டர்” பட யூட்யூப் லிங்க் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்...)

மனசுல உள்ளதெல்லாம் கொட்டியாச்சுங்க.. தேறுவேனான்னு சொல்லுங்க..


பின் குறிப்பு :
-
ரொம்ப ஆசைப்பட்டு துவங்கிய இரண்டு தொடர்கள் “சரவணன் முதல் சூர்யா வரை” மற்றும் ”எஞ்ஞனியா வா” .. 2010க்குள்ள அந்த சூர்யா கதையையும் .. இந்தத் தொடரையும் முடிச்சுர்றேங்க...

December 29, 2009

மௌலி


திடீர்ன்னு தோணுனதுதான் மௌலி பத்தி எழுதலாம்னு.. ”அசத்த போவது யாரு” நிகழ்ச்சிக்கு ஒரு தடவ இவர் வந்து இருந்தாரு.. (அதெல்லாம் பாக்குறியாடானு திட்டக் கூடாது..) இவருடைய பேச்சும் அட்வைஸ்களும் ரொம்ப மெச்சூட்டா இருந்தது..

“சினிமாக்காரன் வெளிநாடு போய் ஷூட்டிங் பெர்மிஷன் வாங்கிட்டா இந்த ஊரே எங்க்ள்துன்னு பாட்டு போட்டு லூசு மாதிரி ஆடிட்டு இருப்பாங்க.. “ அப்டீன்னார்.. உண்ம அதானே.. அத அதானே ரசிக்கிறோம் நாமளும்.. சினிமால இருக்குற இவரே எப்டிடா இப்டி சொல்றாரு.. இவருடைய படம்னு எனக்கு (என் வயதொத்ட தலைமுறைக்கு) தெரிஞ்சது “பம்மல் கே சம்பந்தம்” மட்டுமே.. இன்னும் கொஞ்சம் யோசிச்சு பாத்தா “அபூர்வ சகோதரர்கள் ”படத்துல வர்ற்து நியாபகம் வருது..

ரொம்ப நாளாக வீட்டில் இருந்து பாக்காம இருந்த “ஃப்லைட் 172 “ நினைவு வந்து அதைப் பார்த்தேன்.. வாவ்வ்வ்.. (அட ஆஆஆவ்வ் இல்லீங்க..) மனுசனுக்குள்ள என்ன டேலண்ட்.. இது டி.டி.ல வந்ததா?? பழைய நினைவ யாராவது பகிர்ந்துக்கங்க.. எங்க டி.வி.டி தலைமுறைக்கு புரியட்டும்..


“ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது” படம் நினைவுக்கு வந்து அதையும் பார்த்தேன்.. சமுதாய செய்திகளோட.. அலட்டிக்காத காமெடி.. அருமை.,,

மேடை நாடகங்களின் சாயல் ஒருப்பதாக உணர்ந்தேன்.. கடைசியாக இன்று காலை கூகிள் செய்ததின் விளைவு.. அவருடைய பழைய பேட்டிகளையும்.. வரலாறையும் தெரிந்து கொள்ள முடிந்தது,,


4000க்கும் மேற்பட்ட தடவை மேடையேறிய அனுபவமும்... 21 தமிழ் படங்கள் 24 தெலுங்கு படங்கள் இயக்கிய கலைப் பணியும்.. ஆந்திராவின் சிறந்த விருதான நந்தி விருதை 5 முறையும்.. 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான பி.சந்திரமௌலி..


பாத்தா அந்த மாதிரி இல்லீங்க. மனுசன் அடக்கமானவர் போல..

அவரைப் பற்றிய நினைவுகள் இருந்தால் பகிருமாரும்.. தெரியாத இளைய தலைமுறை “ஃப்ளைட் 172 “ 2010 முடியுறதுக்குள்ள ஏதாவது நண்பணிடம் சுட்டு பார்ர்குமாறும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்..

(அவர் இரும்புக்கோடை முரட்டு சிங்கம்.. காதல் டூ கல்யாணம் போன்ற படஙக்ளில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்..)

December 28, 2009

3 idiots :-)


படத்துக்கு விமர்சனக் குத்து எழுதுறதுக்கு மொத்தம் இரண்டு காரணங்கள் இருக்கு பதிவுலகுல..
1* போட்ட காசு போச்சேன்னு பொலம்பும் பதிவுகள்..( இந்த சீசனுக்கு வேட்டைக்காரன்...)
2*ஹே நானும் ஒரு நல்ல சினிமா பாத்துட்டேன்பான்னு ஸீன் போடுற பதிவுகள்..

இது இரண்டாம் வகை...

தங்கள் கல்லூரியில் படித்த ராஞ்சூ (ஆமிர்கான்) என்னும் நண்பனைத் தேடி செல்லும் மற்ற இரு நண்பர்களின் (மாதவன்,ஷர்மான்) பார்வையில் அவர்களின் கல்லூரிக் காலம் கதையாக விரிந்து.. கரீனாவும் சேர்ந்து.. அவர்களின் கல்லூரிக் காலம் முடிந்து (ப்ளாஷ்பேக்).. பின் ராஞ்சூவைத் தேடிப் போகும் இடத்தில்வேறொருவன் இருந்து..

காதலியும் நண்பர்களும் ஆமிரைக் கண்டுபிடித்தார்களா.. உண்மையில் அவர் யார்...அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்... அத்தோடு சுபம்..

5 points someone சேத்தன் பகத்தின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு.. அந்தப் புத்தகத்தைவிட அழகான திரைக்கதை அமைத்து காமெடி தூவி... ஹிட்.. :-)

ஆமிர் கான் சொல்லி அடிக்கிற கில்லிங்க,.கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக மனிதரின் மெனக்கெடல் தெரிகிறது.. கல்லூரி மாணவனாக 40+ ஆமீர் நடித்துள்ளார்.. ஒரு அறிவு தாகம் மிகுந்த மாணவராக அசால்டாக செய்துள்ளார்.. லூசாக ஒரு பாடி லாங்குவேஜ்.. அற்புதம்..

மாதவன்.. தமிழ்ல காணோமேன்னு பாத்த..மனுஷன் இங்க கலக்கி வெச்சுருக்கார்.. அடக்கி வாசிக்க வேண்டிய இடங்கள் நெறயா.. நல்லா செஞ்சு இருக்கிறார்.. ஷர்மான் கலக்கல்.. அதுவும் அவருடைய வீடு வரும் காட்சிகளில் பழைய படங்களை போல்.. அருமை,,

கரீனா கதைக்கும் தேவையில்லை.. காணவும் சகிக்கவில்லை..


ஆமீர்கானுடன் ஒரு மண்ணாங்கட்டி கெமிஸ்ட்ரியும் வேகவில்லை.. (விமர்சனத்தில் ஹீரோயினை திட்டிய முதல் பதிவர் என்னும் பெருமை கிடைக்குமா???)

போமன் ஹிரானி கலக்கல்.. திரைக்கதை அருமை,.. இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கு.. ஆனா..

அட்டுகள்..

*படத்தின் இரண்டாம் பாகத்தில் சில இடங்களில் லைட்டாக தொய்வு.. கரீனா கல்யான மேடையிலிருந்து அனைவரும் பார்க்க ஓடுவது.. அடப்போங்கப்பா...

*இசை மகா மட்டம்.. ஆல் ஈச் வெல் பாடல் பிழைக்கிறது.. பின்னனி எல்லாம் ஒரே பாடலின் ஹம்மிங்.. எஸ் ஏ ராஜ் தோத்தார் போங்க..

ஹிட்டுகள்

*ckமுரளிதரனின் ஒளிப்பதிவு .. வாவ்.. கண்ணுக்குஅவ்ளோ குளுமை,, (தமிழரா??)

*வசனங்களும் காட்சி அமைப்பும் அருமை..

*படத்தில் வைக்கப்படும் நல்லதே நடக்கும் என்னும் உணர்வு.. அதாவது வசூல் ராஜாவின் கட்டிப்பிடி வைத்தியம் போல... (அதன் பிதாமகரின் படைப்பே இது என்பது தெரியாதவர்களுக்காக சொல்வது..) “ALL IZZZ WELL" என்னும் வரியை உபயோகித்து “நடக்கப் போவது நல்லதுக்கே..” என்னும் உணர்வை மெலோங்க செய்து.. ஒரு விதமான திருப்தியாக தியேட்டரை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்,,
(வேலை கிடைக்காமல் ஒரு விதமான மன இருக்கத்தில் இருக்கும் என் நண்பனை இந்தப் படத்தைபார்க்க சொன்னேன்.. படம் பார்த்து விட்டு.. ‘மச்சா..al IZZwelll :-)' ன்னு மெசேஜ் அனுப்பி இருந்தான்... நீங்களும் ட்ரை பண்ணுங்க,,)

*படத்தின் இறுதியில் ஆமீர்கான் பிரசவம் பார்ப்பார்.. அதாவது அவரும் அவரது நண்பர்களும் எதிர்பாராத விதமாக இந்த நிலமைக்கு வந்து விடுவார்கள்.. யப்பா.. அந்தக் காட்சியின் விறுவிறுப்பு.. பத்து புலி உறுமுது பாடலுக்கு சமம்...

இந்த இடுகையை ஏன் எழுதுகிறேன் ???



படிப்பது என்னும் பெரும் சுமையாக இருக்கிறது.. நம்முடைய கல்விக்கூடங்கள் மதிப்பெண்கள் நிறம்பிக் கிடக்கும் குப்பைக்கூளங்கள்... இங்கு புதிதாக சிந்தனைகளுக்கு இடமில்லை.. புத்தகத்தில் இல்லாத வரிகளை எழுதினால் மார்க் இல்லை... மார்க் எடுக்காட்டி மரியாதை இல்லை..

குழந்தைகளின் படிப்புசுமைக்கு எதிராக ”தாரே சமீன் பர்” என்னும் படத்தை எடுத்த ஆமீர்.. அதே கருத்தை இன்னும் வலுவாக இதில் சேர்த்துள்ளார்..

6 வயதுக்கு குறைந்து பென்சிலால் எழுத வைக்கக் கூடாது அப்படி எழுத வைத்தால் பிள்ளைகளின் மனநன்லன் பாதிக்கப்படும் என்பது ஒரு ஆய்வின் முடிவு.. ஆனா இன்றைய நிலையை நினைத்தால்..

நெஞ்சு பொறுக்குதில்லையே..

“சச்சினின் அப்பா நீ பாடகராகு என்று சொல்லி இருந்தால்.. லதாமங்கேஷகரின் அப்பா நீ கிரிக்கெட் விளையாடு என்று சொல்லி இருந்தால்...” -->நச் வசனம்..


“ஜோ பசந்த்.. வோ கரோ.. “--> பிடித்ததை செய்க..


உங்களுக்கு ஹிந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை.. ஆமீரைப் பிடிக்க வேண்டும் என்று கட்டயமில்லை..

“ஏதாவது செய்யனும் பாஸ்” என்று நினைக்கும் கூட்டத்தில் இருந்தால் கண்டிப்பாக 3 இடியட்ஸ் பார்க்கவும் ..:-)

November 27, 2009

(அ)-யோகி

முன் குறிப்பு
***
கதையைப் படிக்க வேறு கடைகளுக்கு செல்லவும்.. இது சும்மா நச்சுன்னு நாலு பத்தில...
****

முதல் நாள் படம் பார்ப்பது ரொம்ப கம்மியாயிடுச்சு இப்பல்லாம்... ஏன்னா பதிவர்கள் விமர்சனம் படிக்காம எதையும் பாக்குறது இல்ல..

இன்னைக்கு வேலைல இருந்து நேரடியா போய்ட்டேன் தியேட்டருக்கு.. படத்த பத்தியும் ஒன்னும் தெரியாது,.. எந்த எதிர்பார்ப்பும் இல்ல...

மனசுக்குள் ஒருகதை இருந்தது.. ஆரம்பமும் அதே மாதிரித்தான் இருந்தது.. ஆனா எப்போ காருக்குள்ள குழந்தை இருந்ததோ அப்பத்தான் நிமிர்த்து உக்காந்தேன்.. டைரக்டர் மேல ஒரு மரியாத வந்தது..

மவனே அதுக்கப்புறம் சும்மா வளச்சு வளச்சு தூங்க வெச்சுட்டானுங்க...

குழந்தை பருவத்தை தொலைத்த முன்னாள்” குழந்தையிடம் இந்நாள் குழந்தை மாட்டிக்கொண்டு அதன் பின் நாமும் அந்தக் குழந்தையும் படும் அவஸ்தை படம்.

அமீர்பாய் பாக்குறாதுக்கு நந்தா சூர்யா மாதிரி இருக்காரு.. நல்ல கதையில கலக்குங்க.

ஸ்னேகன் எனக்கு புடிக்கலீங்க.. ஹீரோயின் .. யாரும் இமேஜ் பார்த்து செய்யத் தயங்கும் வேடம்.. நன்று..

அந்தக் குழந்தைதான் டாப்பு படத்துல..

ஒளிப்பதிவு சூப்பர்.. பின்னணி இசைன்ற பேர்ல ஒரே வயலின் பீட் கடைசி வரைக்கும்.. “புடிச்ச” பாட்டையே புடிக்காத பாட்டா ஆக்கிட்டாய்ங்கடா சாமீ...

சு.சிவா அவர்களே.. இங்க்லிபிஸ் படமோ எந்த அடாசு படமோ.. சுடுங்க.. சுட்டபின் எங்களுக்கு புரியுற மாதிரி எடுங்க.. better luck next time

(அ)-யோகி :-) (போச்சே.. போச்சே.. எங்கைக்காசு போச்சே...)

November 25, 2009

தமன்னாவும்.. சில ஹெச்.ஆர்.களும்...


சில ஹெச்.ஆர்கள்தான் பதிவுக்கான மேட்டர்.. போலாமா??

நான் இதுவரைக்கும் பெரிய CMM 5லெவல் ஹெச்.ஆர். எல்லாம் பார்த்தது இல்லீங்க.. அட்டெண்ட் பண்ணது எல்லாம் சில சுமாரான ஹெச்.ஆர்கள்...

உதாரணமா ஒன்னு சொல்லலாம்.. கெல்லீஸ்ல.. அபிராமிகிட்ட.. ஒரு கம்பேபேபேனி இருக்கு.. அங்கயும் வேல தேடி போனோம் நண்பர்கள் சகிதம்..
கம்பேனி அட்ரெஸ் கண்டுபுடிச்சு போனா அங்க ஒருமளிகை கடை இருக்கு,,, அரே பாபாஜி இது என்ன சோதனைன்னு வானத்த நிமிர்ந்தா...

மூணாவது மாடில கம்பெனிக்கான போர்டு இருக்கு.. பாபா டபுள் க்ரேட்ன்னு சொல்லிட்டு நடைய கட்டினோம்.. மாடி ஏறு வழியில்..

நான் :” மச்சான்... கம்பேபேபேனி அட்டகாசமான எடத்துல இருக்கு

நண்பன்: “ஆமா மச்சான்..”

நான்: இங்கெல்லாம் என்னடா சம்பளம் தரப் போறாங்க.. தம்பி மாச கடைசில உப்பு புளி கீழ கடைல வாங்கிக்கங்கப்பான்னு சொல்வாங்கடா

நண்: அந்த மாமி மெஸ்ல இட்லி சொல்லிட்டு சில்ற நீ கொடுத்துடு ராஜான்னு சொல்வாய்ங்களே அந்த மாதிரியா..

நான்: போற வர்றதுக்கு பஸ்பாஸ் தருவாங்கடா.. அதுக்கு மேல என்ன கேக்குறது..

சிரிப்பை அடக்க முடியவில்லை.. பழைய பாழடைந்த பங்களா மாதிரி.. மோகினி இருக்குமோ அது இதுன்னு கலாய்த்தவாறே 3வது மாடியை அடைந்தோம்..

அங்க போனா அதுக்கு மேல காமெடி.. ஒருத்தன் வெய்டிங்கி இண்டர்வியூக்கு.. நாங்களும் அவனுக்கடுத்து அமர்ந்தோம்.. ஒரு தடுப்பு மாதிரி போட்டிருந்தாங்க.. அதுக்கு உள்ள இருந்து வெளிப்பட்ட பெண் அந்தப் பையனை உள்ளெ அழைத்தது.. ஆனால் அந்தப் பெண்தான் ஹெச்.ஆர்.. கூப்பிடக்கூட அளில்லை.. அட என்னட இதுன்னு நொந்துட்டோம்..

அடுத்து எங்கள் முறை.. நான் உள்ளே போனேன்... செம திமிரா என்னதான் நடக்கும் நடக்கட்டுமேன்னு.. உள்ளே போய் 15 நிமிஷம் கதரகதர கேள்வி கேட்டாங்க.. ஒரு மண்ணுக்கும் பதில் தெரியல.. சமாளிக்க கூட முடியல..

எனக்கடுத்து என் நண்பன் முறை.. செத்துட்டான்.. உட்டா போதும்னு ஓடி வந்தோம் அங்கருந்து..

இத ஏன் சொல்றேன்னா.. ஹெச்.ஆர்ங்கிறவங்க எங்க இருந்தாலும் இப்பிடிதான்.. சில பேர் இங்க்லீஷ் பேசுறேன்னு நம்மளவிடமட்டமா பேசி மானத்த வாங்கிக்குவாங்க..

ஒரு கம்பேபேபேனி ஹெச்.ஆர். என் குடும்பத்தை பற்றி மட்டும் கேட்டு விட்டு நல்லா மொக்க போட்டு அனுப்சாங்க... nothin els...

நான் பாத்தவங்கள்ளயே செம கெத்துகளும் உண்டு.. இந்த மாதிரி குடுசைகளில் பார்த்த கெத்துகள் காலத்துக்கும் மறக்காது..

ஹெச்.ஆரை சமாளிக்க என்ன வழி குறிப்பாக புதியவர்கள்..
1* உண்மைய பேசுங்க..
2*நெறயா பேர மீட் பண்ணுங்க.. இன்பர்மேசன் ஸ் வெல்த் தலைவா.. நிறயா அனுபவத்தை சேத்துக்கங்க .. க ல க் க லா ம்.:-)
********************************************************



சரி தமன்னாவுக்கு என்னன்னு கண்ணும் ஜொள்ளுமா கேக்கும் நண்பர்களுக்காக.. இது சீரியஸ் மேட்டர். பகிர்ந்து கொள்ள தோணியது..போன ஞாயித்துக்கிழமை.. சன் டி.வி.யில தமன்னா பேட்டி..

பேட்டி எடுப்பவர் : “நீங்க படத்துல பேசுர டயலாக் எல்லாம் சூப்பர் மேடம்..
தமன்னா ; ஓ.தாங்க் யூ..
பே எ: அதுவும் பரத் உங்கள நீ ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமான்னுகேப்பாரே அதுதான் கலக்கல்..
தம: ஹோ.. ஸோ நைஸ் ஆஃப் யூ..
பே எ : அந்த எடத்துல ஏங்க பீஸ்ன்ற வார்த்த வந்துச்சு..
தம:ஹி ஹி..
பே..எ: நீங்க ஒரிஜினல் பீஸா ??
தம: ஹி ஹி
பே.எ: சொல்லுங்க நீங்க ஒரிஜினல் பீஸா ??
தம: ஆமா.. நான் ஒரு ஒரிஜினல்பீஸ்..
பே.எ: சிரித்தவாறே.. ஏன் அங்க பீஸுன்னு சொல்றாங்க மேடம்..
த்ம. அப்போத் தான் ஒர்ரு கிக்கூ.. no substitute for me .. ha ha...

என்ன கருமம் புடிச்ச பேட்டி இது.. எனக்கு சுத்தமா புடிக்கலைங்க.. மொழி தெரியாத பொண்ணுன்னா என்ன வேணா பேசிட்றதா???

அரே ஹோ பாபாஜிஜிஜிஜி.... :-)

November 21, 2009

நாங்கள்ளாம் அந்தக் காலத்துல...

இந்த வார்த்தைய கேக்காம வளர்ந்த தலைமுறை இருக்க முடியாது.. எப்படிப்பட்ட தலைமுறையினரிடமும் முந்திய தலைமுறை சொல்லும் ஸ்லோகன் இது...

இதே ஸ்லோகன இந்த தலைமுறை வயசானதும் எப்படி உபயோகிக்கும்...??

******************
டீச்சர் : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல காலெஜ் போயித்தான் கட் அடிப்போம்..
இந்தக் காலத்து பசங்க “வெப் கேம” ஆஃப் பண்ணியே எங்கள கட்
பண்றாய்ங்களே...
******************

அப்பா : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல WWF,RAW அப்டி டி.வி. கேம்ஸ்தான்
ஆடுவோம்... நீ அந்த ரோஸிய விட்டு நகர மாட்றியேடா.. (ரோஸி
அவர்கள் வளர்க்கும் செல்ல ரோபோ..)
******************

2049 டிசம்பரில் ...

பேரன் : பாட்டி சோறுன்னா என்ன பாட்டி ???
பாட்டி : நான் குழந்தையா இருக்கரச்சே அதான் கண்ணா சாப்டேன்,,,
பேரன் : ஓ.. சோறுன்றது சாப்புட்ற பண்டமா ???

******************

கீக்கீங்....கீக்கீங்.... --- “message received "
"i gt married 2 years bak.. sry ya.. no time.. forgt 2 say..hop u r aliv ..tc bye"

மகன் தந்தைக்காற்றும் மெசேஜ்...

*******************

மிஸ்டர்.பொதுஜனம் : அந்தக் காலத்துல நாங்கள்லாம் தியேட்டர் போயித்தான்
படம் பாப்போம்.. இப்ப என்னடான்னா அவனவனுக்கு
புடிச்ச நேரத்துல அவனவன் வீட்லயே படம் ரிலீஸ்
ஆகுது...
********************

2055 தாத்தாக்கள் : நாங்கள்ளாம் அந்தக் காலத்துல ஒரு “பொண்ணத்தான்” சைட்
அடிப்போம் .. கல்யாணம் பண்ணிப்போம்.. .. இப்ப
என்னடான்னா ...,,,

*********************

(இதோடு பதிவு முடிந்தது.. டிஸ்கி மொக்கைகளை வெட்டிகள் மட்டும் படிக்கவும்..)

டிஸ்கி
இது ஒரு “சரியான” நாள்ங்க..
ஏன்னு கேக்குறவங்க மேலும் படிக்க...

வழக்கத்துக்கு மாறா இன்னைக்கு ஆபீஸ் .. சரின்னு போனா ஒருத்தரும் வரல.. வழக்கத்துக்கு மாறா சரி இன்னைக்கு வேலைதான இல்லா.. சரி.. ஆபிஸ்லயே எதாவது படிக்கலாம்னு நெனச்ச்சா.. என்னோட சிஸ்டம் பூட் ஆகல.. அந்த சிஸ்டத்த சரி பண்லாம்னு உக்காந்தா.. ஒ.எஸ். (இயங்குதளம்) காலி.. அதுக்கு சி.டி. இல்ல..

செம காண்டாயிடுச்சு.. சரின்னு சாப்ட கேண்டீன் போனா சாப்பாடு காலி... சோறில்ல.. வெளில போய் சாப்டுட்டு.. வேற சிஸ்டம்ல சரி இன்னைக்கி பதிவாவது போடுவோம்னு பாத்தா.. NHM இல்ல... அத download ன்னு அமுக்கம்போது கரெண்ட் காலி.. upsலயும் பவர் இல்ல.....

காண்டாயி வீட்டுக்குவந்து .. அடப் போங்கடா. பதிவாவது ஒன்னாவதுன்னு.. புக் படிச்சேன்.. அதுல பருத்தி வீரன் படம் கலைஞர்லன்னு போட்டு இருந்தது.. சரி பாப்போம்ன்னு போட்டா.. டி.வி. எல்லாம் புள்ளி புள்ளியா வந்துச்சு... என்னடான்னு இன்னோரு ரூம்ல இருக்குற டி.விய போட்டா அங்கயும் அதே கதை... கேபிள் டி.விக்கு போன் போட்டா.. போன் போகல.. போன்ல காசில்ல.. சரின்னு கீழ ஓடிபோய் போன்ல காசு போட்டா.. போன் ஆஃப் அயிடுச்சு.. காலைலேர்ந்து சும்மா சுத்திக்கிட்டு இருக்குறதால... சார்ஜ் இல்ல..

சரி பாதி தூரம் வந்துட்டோம்.. முழுதூரமும் போய் கேபிள் ஆபரேட்டர்டயே சொல்லிடலாம்ன்னு போய் சொன்னா.. அவர் ஏதோ கனெக்‌ஷன் இல்லன்னு சொல்லி தேடிட்டு இருக்குறாரு.. டி.வி. நாளைக்குத்தான்...

இவ்ளோ கொடுமைக்கு அப்புறமும்.. சரின்னு கம்ப்யூட்டர் போட்டேன்.. (போடும் போதே உள்ள ஒரே அல்லு...) ஒழுங்கா பூட் ஆயிடுச்சு.. கரெண்டும் போகல... கிபோர்ட் மவுஸ் எல்லாம் ஒர்க் ஆச்சு...

ஹையா ... சரி.. எல்லாம் சரியாயிடுச்சுன்னு சுறுசுறுப்பா bloger உள்ள வந்து.. திருப்பியும் கரெண்ட் போகுதான்னு பாத்து.. ஒன்னும் போகல.. சரின்னு டைப் பண்ண நெனச்சா...

அடப்பாவிகளா... என்ன பதிவுக்கான மேட்டர்னே மறந்து போச்சு இந்த
நொள்ளைல.... :-)

சத்தியமா செம காண்டாயிடுச்சு.. ஏதாவது எழுதியே ஆகனும்டா மவனேன்னு உண்மைலேயே உக்காந்து யோசிச்சு எழுதுனேன்...

வடிவேலு பாணில சொன்னா..
”எல்லாமே கடுப்பேத்துது மை லார்ட்...”

November 12, 2009

எஞ்ஞினியா வா! -- 2

முதல் பகுதி படிக்க இங்கு க்ளிக்கவும்...

எம்.ஜிஆர். அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த எஞ்ஞினியரிங் மேளா ரொம்ப ஜோராக நடக்க ஆரம்பித்தது 90 களின் மத்தியில்.. (இப்பவும்தான்..)

அதுக்கு முன்னாடி கம்யூட்டர் வந்த காலம் குறித்து கொஞ்சம் பார்ப்போம்...

நம்ம ஊரில் கணினி கால் பதித்த காலம் :

சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒருத்தர சந்திக்க நேர்ந்தது.. (தெரியாதவர்களுக்கு சுய தம்பட்டம் -- நான் இங்கதன் வேலை பார்க்கிறேன்) 50 வயதைக் கடந்தவர் என்பது அவரைப் பார்த்ததும் தெரிந்தது.. ம்னுஷன் மொக்க போட போறாருடான்னு நெனச்ச போதே அவர் ஆ”ரம்”பிச்சுட்டாரு...FOX space நல்ல மென் பொருள் அது இதுன்னு.. தெரியாத பழைய மென்பொருள்களின் பேரா சொல்லிக்கிட்டு சும்மா ஸீன் போட்டாரு.. சரின்னு நான் சும்மா சார் அதல்லாம் .net ல நீங்க சொன்ன எல்லாமே இருக்கு ஸார்னு சொன்னேன்... மனுஷன் உடனே தொழில்நுட்ப ரீதியா.net ல ஒரு டவுட்டு கேட்டாரு.. மிரண்டு போய்ட்டேன்.. நேத்து காலெஜ் முடிச்ச ஒருத்தன் வந்துதான் பதில் சொல்லனும்.. சர்வர்ஸ் பத்தி அவருடைய பார்வை.. அவர் தெரிந்து வைத்திருக்கும் வேகம்... அவ்ளோ இளமையா இருந்தது அவரோட கேள்விகள்..

“தலைவா நீங்க யாரு..? பழைய கதையும் சொல்றீங்க.. இன்னைக்கு நடக்குறத பத்தியும் சொல்றீங்க.. எப்பிடி??” நான் கேட்டேன்..

அவர் சிரித்துக் கொண்டே.. “தம்பி நான் 1982 ல வேலக்கி சேந்து 5 வருஷம் ஆயிடுச்சுபா.. அந்த நேரத்துல கம்யூட்டர்னு ஒன்னு வந்துருக்குன்னு சொன்னாங்க.. அதல ஒரு டிப்ளோமா கோர்ஸ் இருக்குன்னு சொன்னாங்க. அப்ப நாங்க 12 பேர் தான் படிக்க சேந்தோம்.. (அட என்னங்க வர்ம கலை மாதிரி சொல்றீங்க..-- இது நான்) அப்போ புக் வரவே பல மாசமச்சு.. அந்த வாத்தியாருக்கும் ஒன்னும் தெரியல.. நாங்களே புக்க படிச்சு படிச்சு கத்துக்கிட்டோம்.. எக்ஸாம் எழுதி பாஸும் ஆயிட்டோம்.. “

“அதுக்கு அப்புறம் ஜாலியா வேலையா ஸார் ??“ -- நான்

“அட போப்பா.. ஏண்டா படிச்சோம்னு ஆயிடுச்சு.. கம்யூட்டர் ஒரு ரூம் ஃபுல்லா இருக்கும். செம சூடாயிடும்பா..”

“கதை உடாதீங்க..”

“நெசமாப்பா.. நான் பொய் சொல்லி என்ன ஆக போகுது சொல்லு.. பேஸிக் ப்ரோகிராம் பண்ணுவோம்.. இன்னைக்கு நீங்க யூஸ் பண்ற கம்யூட்டர் மானிட்டர் இங்க புழக்கத்துக்கு வந்ததெல்லாம் 90 களுக்கு அப்புறம்தான்.. ...............”

(இப்பிடி அவர் சொல்லிய கதைகள் ஏராளாம்.. அத பத்தி தனியாவே சொல்றேன்.. )

இதுல கவனிக்க வேண்டியது ரெண்டு விஷயம்தான்..

1* கம்யூட்டர்ன்னு ஒரு பொருள் அறிமுகமாகும் போது என்ன கெடுபிடி பாத்தீங்களா?? இது அந்த அளவுலேவே இருந்திருந்தா அவ்ளோதான்.. இன்னைக்கு நாமெல்லாம் கம்யூட்டர நோண்டுறது எங்க???

திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த கோட்டையை என்ன நோக்கத்தில் உடைத்தாரோ.. ஆனால் அதன் உருப்படியான மிக நல்ல உபயோகம் கம்யூட்டர் எல்லாரையும் போய் சேந்ததுதான்..

2* கம்யூட்டர் துறையில் நீங்கள் வளர வேண்டும் என நினைத்தால்.. உங்கள் அண்ணான்மார்களைவிட,, அக்காளைவிட.. பக்கத்து வீட்டு US அங்கிள விட 10 மடங்கு உழைப்பு போடணும்...

”கணடதையும் கற்று பண்டிதன் ஆகலாம்ன்னு சொல்வாங்க...” அது இந்தத் துறையில் 100% உண்மை.. அந்த தாத்தா -- ஒரு பண்டிதன்.


இனி படிக்கப் போறவங்களுக்கும் அதான் சொல்ப் போறேன்.. “ஆர்வம்..” அத விட்றாதீங்க.. இன்னும் தேடுங்க..
கம்யூட்டர் வந்த காலத்துல, அய்யோ அத படிக்க மாட்டோம்பான்னு சொல்லி வாழ்க்கையின் பொன்வாசலை தவரவிட்டவர்கள் அதிகம்.. இப்போ கூட நீதி துறையில் முழுவது கணினி மயமாவதை மேல் மட்டத்திலே விரும்பவில்லை என்பார்கள்.. (அய்யோ அரசாங்க ரகசியத்த வெளில சொல்லிட்டேனே..)
இந்தக் காலத்துல ஏண்டா சேர்றோம்ன்னு தெரியாமயே சேந்து நொந்து போறவங்க அதிகம்...

காலத்தின் கோலம்...

அதான் எறங்குற கிணறு எவ்ளோ ஆழம்.. அதுல எப்டியெல்லாம் இருக்கலாம்ன்னு நானும் எறங்கிகிட்டே சொல்றேன்.. சேந்து போவோம்.. (அட யாருப்பா கைப்புள்ள மாதிரி படிக்கிறது)

அடுத்த பதிவுல.. மத்திய காலத்தையும்.. இனிமே சேர்றவங்களுக்கு உருப்படியான யோசனைகளும் தொடரும் நீங்கள் விரும்பினால் (விரும்பாட்டியும் கூட.. ஹி ஹி..)

November 03, 2009

எஞ்ஞினியா வா!!!!


இஞ்ஞினியர்களின் வாழ்க்கை வரலாறு..? மற்றும் நல்ல இஞ்ஞினியராக என்ன செய்வது..??

இஞ்ஞினியர்களின் வாழ்க்கை வரலாறு என்று ஒரே ஒரு இன்ஞி. பற்றி எழுதப்போவதல்ல.. எல்லாரும் கல்யாணம் பண்ணி.. ரெசஷன்ல வேலைக்கு போயின்னு மொக்கையும் இல்ல... ”இஞ்ஞினியர்கள்” -- இந்த துறைக்கு ஏன் இத்தனை மவுசு..?? எப்பிடி வந்தது இந்த பவுசு..?? ஆழத்தைத் தேடி..

தமிழ்நாட்டின் ஏதோ ஒர் தெருவுல போய் நின்னு... “யாராவது எஞ்ஞினியர் இருந்தா வாங்க”ன்னு கத்தி பாருங்க.. கண்டிப்பா காக்கா கூட்டமே தோத்துப் போற அளவுக்கு இந்தக் கூட்டம் வந்து மொய்க்கும்... சாரை சாரையா வந்து நானுந்தான் நானுந்தான்னு நிக்கும்..

உங்க வீட்டு புள்ளையும் படிக்கும்..ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி உங்க கண்ணு முன்னாடி ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பத்து புள்ளைகளும் படிக்கும்...

இவ்வளவு ஏன்.?? நீங்கள் இந்தியாவில் வசிக்கும் தமிழர் என்றால்.. உங்கள் ரத்த பந்தமோ.. நெருங்கிய சொந்தமோ.. இல்லாவிட்டால்.. ஏதாவது தெரிந்த வீட்டு பிள்ளையோ.. கண்டிப்பாக இன்ஞினியரிங் படித்துக் கொண்டிருக்கும்..

இல்லையென்றால்.. உங்களால் எந்த ”இஞ்ஞினிய” முகத்தையும் மேற்கூறிய எந்த வரிகளுடனும் தொடர்பு படுத்த முடியவில்லையென்றால்.. நீங்கள் இந்த இடுகையை படிக்காமல் இருப்பது நலம்...

சரி நாம ஃப்லோவ தொடருவோம்...

1982 க்கு முன்னாடி இஞ்ஞினியர் துறையும் டாக்டர் துறை போலத்தான் இருந்ததாம்.. ஏதோ “ரொம்ப” படிச்ச புள்ளைங்க அவங்களுக்குள்ள சண்ட போட்டு இருக்குற 500--1000 சீட்ட புடிச்சுக்குங்க... அவ்ளோதான்..

ரொம்ப கெத்தா இருந்த துறையாம்.. அதுக்கப்புறம் மவராசன் “எம்.ஜி.ஆர்.” தனியார் கல்லுரிகளுக்கு அனுமதி தந்தாராம்.. (இப்போ தெரியுதா ஏன் தலைவர் படம்ன்னு...) அதுக்கும் பெரிய அளவுள டெல்லில லாபி நடந்ததுன்னு நான் இண்டர்வியூ போனப்ப ஒரு மவராசன் சொன்னப்ல... ஆச்சா.. அதுக்கப்புறம் புற்றீசல் போல காலேஜ் ஆரம்பிக்கப் படவில்லை..

ஆனா இது ஒரு லாபம் கொழிக்கும் தொழிலாக தெரிந்ததும்.. சும்மா எல்லா பண முதலை திமிங்கலம் சுறா எல்லாம் இறங்கிடுச்சு... இப்போ இருக்குற நெலமை உடனே வந்துடல.. நாங்களாம் நாய் பாடுபட்டு வேலை தேடுரதுக்கு .. நம்ம அண்ணனங்கெல்லாம் அமெரிக்கால சம்பாதிக்க.. அமெரிக்கால இருந்து ஒருத்தர இந்தியா தொரத்துரதுக்கும்.. இங்க அம்ஜிகரையில ஏதோ ஒரு கம்பெனி காசு புடுங்கி ஏமாத்துறாதுக்கும் தசாவதாரம் கேயாஸ் தியரி மாதிரி ஒரு பட்டம் பூச்சியின் படபடப்பின் தொடர்பு இருக்கு (கன்சல்டன்ஸி என்னும் போலிகள பத்தி வேற சொல்லனும்ங்க.. ஹையோ வேல ஜாஸ்தி ஆகுதே...)

ரொம்ப லென்த்தா போகுதுல்ல.. சரி தொடராக்கிடுவோம்..

“எஞ்ஞினியா வா!!!” பேர் எப்பிடி இருக்கு ?? எத பத்தி எழுத போறேன்னு தெரியுதுல்ல.. நீங்களே ஒரு நல்ல தலைப்பா பின்னூட்டுங்க..

(***இது நான் செவிவழியாக கேட்ட தகவல்களை அச்சேற்றும் முயற்சி.. தவறிருந்தால்.. நான் ஏதையாவது சொல்லாமல் விட்டிருந்தால் நீங்க சொல்லுங்க ..***)

November 01, 2009

உன்னைப் போல் ஒருவன்



”உன்னைப் போல் ஒருவனை “ இரண்டு மாதம் கழித்து போஸ்ட் மார்ட்டம் செய்யும் பதிவல்ல இது..

கிட்டத்தட்ட நான்கு மாதம் கழித்து எழுதுகிறேன்...

ஒன்னுமே தெரியாம பதிவுலகுல வந்து.. கொஞ்சமே கொஞ்சமா சேர்த்தாலும் கெத்தா சில நண்பர்கள் சேர்த்து.. யாருமே படிக்கமாட்றாங்களேன்னு வருந்தி. சூர்யா கதைய எழுதி ரொம்ப கொஞ்சமா (என்ன தமிழ்..)சில நண்பர்கள் பிடிச்சு.. பதிவுலக மார்க்கெட்டிங் கற்றுக்கொண்டு.. யப்பா யப்பா... நெனச்சா ஒரு சினிமா பாடல் போன்ற உணர்வு... :-)

இஞ்ஞினியரிங் காலேஜ் மாணவனாக குப்பை கொட்டிக் கொண்டிருந்த நான்.. படித்து முடித்தது இந்த மே--யில்தான்... 3 மாசம்.. தெனற தெனற வேல தேடி.. கடைசில.. வேல கெடச்சது .. 3i-info tech என்னும் கம்பெனியில... மவனே software எழுதி கலக்க போறோம்டான்னு பாத்தா... என்னுடைய client office "MADRAS HIGH COURT" (சென்னை உயர் நீதி மன்றம்...) (வேலைய பத்தி .. இன்டர்வியூ போன கதைகள அப்புறம் பாப்போம்... எழுதலாமா வேணாமான்னு சொல்லுங்க..)

இப்போ ஆண்டவனோட அருளால வேலைக்கி போய்கிட்டு இருக்கேங்க.. ரெண்டரை மாசமா...

வேல தேடும் போது.. நம்ம தமிழ் நெஞ்சம் அண்ணன்கிட்ட.. சக்கர அண்ணங்கிட்டலாம் சொல்லி வெச்சிருந்தேன்...வேல தேடும் போது வேற எதும் கண்ணுல தெரியல.. காலேஜ் பையனா எத பத்தி கவலையும் இல்லாதப்ப இருந்த கற்பனை ஊற்று.. இந்தக் காலகட்டத்துல வத்திப்போச்சு.. என்னால புதுசா பதிவெல்லாம் எழுத முடியல..

வேலை கெடச்ச அப்புறமும்.. தமிழ் பதிவுலகம் என்னை சில சமயம் தேடும்.. என்னை மெயிலில் தொடர்பு கொண்ட அன்பர்களுக்கு நன்றி.. கடையாக சூர்யா கதைக்கு பின்னூட்டம் போட்ட நண்பருக்கும் இன்ன பிற உள்ளங்களுக்கும் நன்றி...

மாணவனாக இருந்த போது இருந்த வெறி இப்ப இல்ல.. அட என்னப்பா.. 5 மாசத்துக்குள்ள ரொம்ப ஸீன் போட்றன்னு கேட்டா நீங்க பெருசு... இந்த transition பத்தி நம்ம டாக்டர் சுரேஷ் தல விரிவா ஒரு பதிவு எனக்கும் டெடிக்கேட் பண்ணி போடுங்க...

எழுதனும்னு உணர்வு ஒரு மாசமா தோணுனாலும்.. என்ன எழுதறுதுன்னு தோணல... விமர்சனம் எழுதலாம்னு நெனச்சா. .. அவனவன் படம் ரிலிஸாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடியே கலக்குறாய்ங்க.. சரி நடக்கட்டும்ன்னு வெயிட் பண்ணேன்...

பதிவுலகிலும் நிறைய மாற்றம்.. தொழில்நுட்ப ரீதியாக நிறய சந்தேகங்களை இந்த புது உலகம் எனக்கு தீர்த்தது.. ஒரு படம் ரிலீஸானால் அத பாக்குறதா வேணாமான்னு முடிவு பண்ண உதவியது..

நாமெல்லாம் ஏண்டா எழுதறோம்னு தோணவெச்ச பதிவுகள் நிறைய... நான் பின்னூட்டம் இடாம என்னால முடிஞ்ச அளவு எல்லாத்தையும் படித்துக் கொண்டு தான் இருந்தேன்...

அடுத்து ஏதாவது தோணும் போது எழுதுவோம்... (இதுவரை நடந்த சில முக்கியமான நிகழ்வுகளாஇ என் சக பதிவர்கள் யராவது பின்னூட்டமோ அல்லது பதிவோ போட்டு சொல்லவும்...)

என் ப்ளாக்கின் caption மாதிரி.. “யாருமே இல்லாத யாருக்கு நான் இப்ப டீ ஆத்துறேன்???

July 13, 2009

எந்திரனில் கலக்கப் போகும் சந்தானம்.


இது வாமனன் படத்துக்கு நான் எழுதுற லாப நஷ்ட கணக்குங்க,,,

வாமனன்.. தயவு செஞ்சு யாரும் இந்தக் கருமம் புடிச்ச படத்த “வெள்ளிப் பரிசிலோ” இல்லாட்டி.. “இந்தியத் தொலைக்காட்சிகளிலோ” போட்டாக் கூடபாக்காதீங்க..

வேணா.. அவ்ளோதான்.. பழைய படங்களின் கதை மாதிரி இருக்குன்னு சொல்ல விரும்பல.. கதையாய் சொல்லும் போது நல்லா இருக்கும் விஷயத்த திரையில் அதே அளவு தாக்கத்துடன் சொல்வதற்க்கு ஒரு தனித்திறமை வேண்டும்... டைரக்டர் அகமது ஸார்... பாடம் கத்துக்கிட்டீங்க... அடுத்த முற நல்லா பண்ண வாழ்த்துக்கள்.. (கொஞ்சம் காஸ்ட்லியான பாடம்,,)

எனக்கு இந்தப் படம் பாக்கும் போது கண்ணு முன்னாடி வந்தது டைரக்டரோட நெலமதான்.. மொத [படம்.. பாவம் .. இன்னும் ப்ளான் பண்ணி மெனக்கெட்டு எடுத்துறுக்கலாம்,,

சந்தானம்தான் முழு படமும் பாக்க வைக்கிறதுக்கு உதவுறாரு.. ஹீரோயின்ஸ் பத்தி கேக்காதீங்க,,, மொக்க.. நீயா நானா கோபிநாத் ஏண்டா நைனா நடிச்சன்னு கேக்குற மாதிரி அப்பப்போ வந்துட்டு போறாரு...

இந்தப் படத்துலயே சந்தானம் இந்தக் கலக்கு கலக்குறாரே... டைரக்டர் ஷங்கரோட மேஜிக்கோட இவரோட டைமிங்கும் சேந்தா,,, கலக்க வாழ்த்துக்கள் சந்தானம்..

டிஸ்கி

இந்தப் பக்கமே வரமுடியல கொஞ்ச நாளா.. என்னைத் தேடி வந்து ஏண்டா எழுதலன்னு இங்க கேட்ட |தல| டாக்டருக்கும்,,, மெயிலில் வந்த பல நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.. இனிமே அப்பப்போ வந்துட்டு போறேன்...

அன்பிற்க்கு நன்றி..

June 26, 2009

ஷாக் ஷாக் ஷாக்.....

<<<<இது மாதிரிஒன்ன ஏற்கனவே படிச்சு இருந்தா நீங்க ஓட்டோ பின்னூட்டமோ போட வேணா... ஆனா முடிக்கம் போது ஷாக் ஆயிட்டா. கண்டிப்பா செய்வீங்க தானே????>>>>>



.....நடைபிணமாய் நடக்கலானான் மறந்தபடியே ...

.....’திட்டிட்டாளே அவ’ குமுறுயது மனசு ...

.....கார்த்தி சொன்னான் ‘விடு மச்சான்’  .....

..... ”இவள்களுக்குத் தேவை லட்சங்கள் சில... கோடிகள் சில... ” .....

.....இனிமேல் ஏது சந்தோஷம் ???.....

.....  இனிமேல் பணம் எதுக்கு??? .....

..... நெருப்பில் நின்றான் .....

..... வெறுப்பில் செத்தான் .....

...... காதலும் திரும்புமோ ??? .....

..... இனி

.....சாதலும் விரும்புமோ ?? ....

.....நடைபிணமாய் நடக்கலானான் மறந்தபடியே ...

டிஸ்கி

இதுல என்னடா ஷாக்னு கேக்குறீங்களா ???

மேலிருந்து படிச்சாச்சுல்ல.. இப்போ கதையோட கடைசி வார்த்தைலேர்ந்து ஒரு ஒரு வார்த்தையா பின்னாடி படிச்சுட்டுப் போங்க..

// மறந்தபடியே நடக்கலானான் நடைபிணமாய்....
     விரும்புமோ  சாதலும்....................//

மேல நீங்க திருப்பியும் கதைய படிச்சு முடிக்கும் போது.. அதே காட்சி வந்து நிக்குதா கண்ணுல... 

எழுத்துக்கு உரம் சேர்க்க பின்னூக்கங்களும்... ஓட்டும் போடலாமே...

June 25, 2009

வயசாய்டிச்சுல்ல....????

ஒருநாள் .. 3:05 a.m.,

"அப்பா நாங்களும் தலையெடுத்தாச்சு... இதுக்கு அப்புறமும் நீங்க உழைக்கனும்னு என்ன தேவ இருக்கு ??” பஞ்சனதனைப் பார்த்து குறைத்தான் ராக்கி... ராக்கி பஞ்சனதனின் செல்ல மகன்...



“நல்லா சொல்லுப்பா... எத்தன தடவ சொன்னாலும் கேக்காம போய்கிட்டு இருக்காரு.. தெனமும் கை வலிக்குது கால் வலிக்குதுன்னு...62 வயசாய்டிச்சுல்ல.. வீட்ல உக்காராம சும்மா....” இவ்ளோ உரிமையா திட்றது இவர் மனைவி பார்வதின்னு சொல்லனுமா என்ன???

“எனக்கு செய்யனும்னு தோணுது .. உங்களுக்கு என்ன??” என்றபடி வேலைக்கு கிளம்பினார் பஞ்சனதன்.

5:56 p.m.

உடல் சோர்வு வாட்ட.. அதை சொல்லவும் முடியாமல்.. செரி செஞ்சு முடிச்சுடுவோம் இன்னும் அரை மணி நேரம்தானேன்னு அன்றைய வேலையையும் முடித்தார் பஞ்சனதன்



ஆறு மாதம் கழித்து

காலெஜ் கட்டடித்த ராக்கியும் நண்பர்களும்... “ ஆண்டவன் ஆட்டம்” படம் பார்த்துவிட்டு வந்தனர்...

“யப்பா.. என்ன ஃபைட்டு.. செம படம்டா.. “ நண்பர்கள் குதூகலத்துடன்..

ஒவ்வொரு நாள் ஷூட்டிங் முடிந்ததும் தன் தந்தை “ட்விங்கிள் ஸ்டார்” ‘பஞ்சனதன் படும் வேதனையை கண்ணால் பார்த்த இவனால் குதூகலிக்க முடியுமோ???

June 23, 2009

நீங்கள் போங்கு பதிவரா??


நீங்கள் போங்கு பதிவரா ?? கீழேயுள்ள கேள்விகளைப் படிக்கவும்

(ஆம் / இல்லை மட்டுந்தான் அலோவ்டு.. )

1 -- > எல்லோரும் பின்னூட்டம் இடுகிறோம். அதுல இது வரைக்கும் யாரோ ஒருத்தர் பண்ண தப்ப.. “நீங்க தப்பு பண்ணி இருக்கீங்கன்னு “ சொல்லி இருக்கீங்களா??

2--> உங்களுக்கு புடிக்காத விஷயங்களை பதிவிட்டிருந்தா புடிக்கலைன்னு பாலிஷா இல்லாம நேரடியா சொல்லி இருக்கீங்களா??


3--> உங்களுக்கு பிடித்த ஒருவரின் இடுகையை உங்கள் நண்பர்களையும் படிக்க சொல்லி இருக்கிறீர்களா??

4--> அனானி கமெண்டுகளை மதித்து .. அதற்கு பின்னூட்டம் போட்டாக் கூட பரவாயில்லை ஆனா தனி பதிவே போடுவீர்களா??

5--> ஒன்னுமே படிக்காம
அருமை
:-)
மிக நல்ல பதிவு
கலக்குங்க etc etc...

இந்த மாதிரி டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவீங்களா???

6--> மெயிலில் வந்த புகைப்படங்களை நீங்க எடுத்ததுன்னு போஸ்டா போட்டு இருக்கீங்களா???

7--> வேற வேற பேர்ல உங்களுக்கு நீங்களே அனானி கமெண்ட்ஸ்.. திரட்டிகளில் ஓட்டும் போட்டு இருக்கீங்களா???

டிஸ்கி

1.2.3 க்கு இல்லை ந்னும்

4,5,6,7, ஆமான்னும் பதில் சொல்லி இருந்தா நீங்கதான் போங்கு பதிவர் ...

இது யாருக்கும் சொல்றதுக்கு இல்ல.. உங்களுக்கு நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்:-)

இவ்ளோ தூரம் வந்துப்புட்டு.. ஓட்டும் பின்னூட்டமும் போடாம போனா அதவிட பெரிய போங்கு இருக்கா??? :-)

June 22, 2009

வேலை

”என்ன மாமா.. இப்டியே போனா பிச்சைதான் எடுக்கணும்... “  வாயில் புகையுடன் ரங்கன்...

“அய்யே மாமே.. ஒன்னும் கவல படாத..” என்றபடி பாதிப் புகையை வாங்கினான் காளி என்னும் காளிதஸ்...



“இல்ல மச்சா.. பாரு ஒரு வாரமா சோறு தண்ணி இல்லாம கெடக்குறோம்... ஏதாவது நல்ல சேதி வந்து வேல வரும்னு பாத்தா... “...

“செரி செரி .. கடிக்கிற கொசு பத்தாதுன்னு இடையில நீ வேற..”
காளி

”நம்மகிட்ட என்னடா இல்ல..?? நம்மள மாதிரி வேலக்காரன் கெடக்கிறதுக்கு அவனவன் குடுத்து வெச்சு இருக்கனும்.. ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வந்தாக் கூட ஓடாமா கடைசி வரைக்கும் நிப்போமேடா... நமக்கு ஏன் மாமே வேலையே கெடக்க மாட்டேங்குது...???”

”--------------”

“டேய்..காளி----------------------த்தா...  இங்க பொலம்பிட்டு இருக்கேன்... அங்க என்னத்தடா பண்ற...” ரங்கன் டென்சனாய்ட்டான்...

”டோப்படிச்சு எவ்ளோ நாளாய்டுச்சு... நாயே சாவடிக்காத நீ வேற...” காளி பரவச நிலையை அடைந்தான்..

இதுக்கு மேல ரங்கன் பொலம்பியது அவனுக்கு கேட்க வில்லை...  ரங்கனுக்கு இந்தப் பழக்கமில்லை.. ஆனால் காளி வழக்கத்துக்கு மாறாக கண்டமேனிக்கி பரவச நிலையில் இருந்ததை ரங்கன் உணர்ந்தான்.. 

‘நாம வாய் விட்டு பொலம்பிட்றோம்.. அவன் புண் பட்ட மனச இப்பிடி ஆத்திக்கிறான் போலன்னு.. எப்போ தூங்குனான்னு தெரியாமலெயே துங்கிட்டான்..

கதைக்கு சுபமான முடிவு வேனுமில்ல???

அடுத்த நாள்

                      ரங்கனுக்கு வேலை கிடைத்தது :-)

டிஸ்கி :-

நெம்ப நாளா பொணமே கெடக்காம இருந்த “வெட்டியான்” ரெங்கன் நண்பன் காளியின் உடலை புதைக்கும் பணியில் இருந்தான் .

June 14, 2009

ஃபைனல் இயர் புராஜக்டும்.. இஞ்ஜினியரிங் பொதிகழுதைகளும்...

வலையுலகுக்கு தனியாளாக வந்து .. இவ்வாரத் தமிழனாகி.. 50 இடுகைகளையும் கடந்து.. இன்று 50 பின்தொடர்பவர்கள்... நண்பர்களுக்கு நன்றி..

குறிப்பு சட்டகம்
1.முன்னுரை
2.ஃபைனல் இயர் புராஜக்டுனா இன்னா???
3.எப்படி செய்ய வேண்டும்??
4.என்னதான் நடக்குது??
5.என்ன தீர்வு???
6.முடிவுரை..

1.முன்னுரை:-

சமூகத்திற்க்கு ஏதாவது பயனுள்ள தகவலை சொல்ல வேண்டும் .. என் கோவத்தை பதிவு செய்ய வேண்டுமென்று ஒரு ஆசை.. அதான் எனக்கு தெரிஞ்ச ஏரியால இறங்கிட்டேன்.. (ஆங்கிலம் தவிர்க்க முடியாதது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க)



2.ஃபைனல் இயர் புராஜக்டுனா இன்னா???

ஏழு செமஸ்டர் படிச்சு முட்டுப்புட்டு.. வெளியவரப்போற ஒவ்வொரு இஞ்ஜினியரும் தனியாவோ.. அல்லது குழுவாகவோ(2 ,3அல்லது4 நபர்கள் வரை )சேர்ந்து அவர்களுக்கு புடிச்ச பிரிவில் புராஜக்ட் செய்து காமிக்க வேண்டும் என்பது வழக்கம்.. அதுக்கு 200 மார்க் இருக்கு..

3.எப்படி செய்ய வேண்டும்??



தங்களுக்கு புடிச்ச பிரிவில்.. தெரிஞ்ச டெக்னாலஜியில் ( கம்யூட்டர் பிரிவு என்றால் .நெட் அல்லது ஜாவா..) தாங்கள் நினைத்ததை புராஜக்ட்டாக செய்து காட்ட வேண்டும்.. எந்தப் பிரிவில் புராஜக்ட் செய்கிறோமோ அந்தப் பிரிவிலேயே தங்கள் வேலையையும் தேடிக்கொள்ளலாம்.. புடிச்ச பிரிவுல புராஜக்ட் பண்ணி.. அதே துறையில வேலக்கி போனா.. கொஞ்சமாவது வேலைக்கி ஆவற மாதிரி வேல பாக்கலாம்... கரெக்ட் தானே??? ஆனா என்ன நடக்குதுன்னு பாருங்க...


4.என்னதான் நடக்குது??

மூனு வருஷமா புராஜக்ட் பத்தி பேசாத நம்ம லெக்சரர்ஸ் எல்லாம் புதுசா புராஜக்ட்னு ஒன்ன பத்தி சொல்லுவாங்க...செரின்னு நாமளும் .. நம்ம கனவ புராஜக்டா செய்யலாம்னு இறங்கிடுவோம்.. (உதாரணமா.. ஆர்குட்கு போட்டியா ஒரு வெப் சைட்.. பிளக்கருக்கு போட்டியா ஒரு புது கான்செப்ட்... ஒரு புது வகையான எலக்ட்ரானிக் சிப்... மற்றும் பல பல பல... கனவுகளுக்கு ஏது எல்லை??) ஆனா ..

இங்க இறங்கும் முதல் இடி..

IEEE பேப்பர்ஸ் வெச்சுதான் புராஜக்ட் பண்ணனும்னு சொல்லுவாங்க... செரி அதுக்கும் ஓகேன்னு மண்டையாட்டிட்டு.. அதுக்கப்புறம் IEEE பேப்பர்ஸ்னா என்னன்னு நாமளும் தெரிஞ்சுப்போம்...

அங்க இறங்கும் இடி நம்பர் இரண்டு..

IEEE பேப்பர்ஸ் என்பது.. இப்போ.. நம்முடைய துறையில ஒரு பிரச்சைனை இருக்குன்னா.. அத எப்பெடி செரி செய்யுறதுன்னு நாலுஅறிவாளிங்க யோசன சொல்லி இருப்பாங்க... செரிடா.. யோசன தானேன்னு.. படிச்சு புரிஞ்சுக்கலாம்னா...

இடி நம்பர் த்ரீ வில் ப் வய்ட்டிங் ஃபார்யூ ...

அந்த பேப்ப்ர்ஸ நாம தனியா எடுத்து படிக்க முடியாது.. அதுக்கு கொஞ்சம் பணம் கட்டி யார் உறுப்பின ஆகுறாங்களோ அவங்க மட்டும் தான் படிக்க முடியும்.. பல காலேஜ் .. அவங்களே உறுப்பினார் ஆகி இருப்பாங்க.. நாம காலேஜ்ல இருந்தே அந்த பேப்பர்ஸ் தேடலாம்.. ஆனா எங்க காலேஜ் மாதிரி கெத்து காலேஜ்ல படிச்சா.. அதுவும் கெடயாது.. நீங்களே பாத்துக்கங்கன்னு சொல்லிடுவாங்க...
கஷ்டப்பட்டு பேப்ப்ரும் எடுத்துட்டா..

இடி நம்பர் ஃபோர்..

கண்டிப்பா ஒரு சராசரி மாணவனால படிச்சு புரிஞ்ச்சுக்க முடியாது... அவங்க எத பத்தி சொல்ல வர்றாங்கன்னு புரியுறதுக்கே ஒரு மாசம் ஆய்டும்.. ஆனா ஒரு வாரத்துல புராஜக்ட் டைட்டில் கேப்பாங்க... இந்த இடில இருந்து தப்பிக்க.. நண்பர்களோ அல்லது சி(ப)ல காலேஜில் ஆசிரியர்களோ சில புராஜக்ட் செண்டர்ஸ் அல்லது கம்பெனிகளின் அட்ரெஸ் தரப்படும்... யப்பா.. நம்ம மண்டையல உளுந்த இடியெல்லாம் போய்டுச்சுடான்னா.. அதுதான் இல்ல... அடுத்த உள்பிரிவுக்கு நீங்க போறீங்க..

4.1 புராஜக்ட் செண்டர்ஸ்:-
என்னத்த சொல்றது இவங்களப் பத்தி.. பாவப்பட்ட ஜென்மங்கள்.. நீங்க மொதமொத புராஜக்ட் செண்டர் போனீங்கன்னா.. சும்மா ராஜ மரியாத தான்... ஸார்.. நாங்க அப்பிடி பண்ணித் தருவோம்.. இப்பிடி பண்ணித்தருவோம்.. அது முடியும்.. இது முடியும்.. நீங்க என்ன கேட்டலாலும் ஓகே பண்ணிடலாம் அப்படீன்னு சொல்லுவாங்க.. நிலாவுக்கு ராக்கெட் அனுப்பணும்னு சொன்னாக்கூட... நீல் ஆம்ஸ்ட்ராங் யூச் பண்ண கோடிங் நெட்ல கெடக்கும்.. நான் அத தரேன்னு சொல்லுவாங்க..

4.2:-புராஜக்ட் செண்டர்ஸ்-- ஆரம்பம்:-
IEEE பேப்பர் தர்றதுக்கே.. ஆரம்பத்துல நாம பணம் கட்டனும்.. குறைஞ்சது 500...நாமளும்... செரிடா.. கெத்து செண்டர்ல சேந்துட்டோம்.. கலக்கப்போறோம்.. அப்படீன்னு நெனச்சுட்டு இருப்போம்.. கிளஸுக்கெல்லாம் தவராம போவோம்...

4.3:-புராஜக்ட் செண்டர்ஸ்--- முதல் நிலை:-
நம்ம காலேஜ்ல நம்ம புராஜக்ட நோண்டுறதுக்காகவே ஒரு கொஸ்டின் கோயிந்து இருப்பாரு.. அவர் நம்ம புராஜக்ட பிரிச்சு மேஞ்ச்சுட்டு.. அது தப்பு.. இது தப்பு.. இந்த புராஜக்ட் செல்லாது அப்படீன்னு சொல்லுவாரு.. இந்த கொஸ்டின்ஸ புராஜக்ட் செண்டர்ஸ்ல சொன்னா... “அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லப்பா.. சமாளிச்சுக்கலாம்” அப்படீன்னு மட்டும் சொல்லுவாங்க.. நம்ம இண்ட்ரஸ்ட் கொஞ்சமா கொறையும்...

4.4:-புராஜக்ட் செண்டர்ஸ்--- இரண்டாம் நிலை:-

ரிவியூன்னு ஒன்னு வெப்பாங்க நம்ம காலேஜ்ல... அதுக்கு டாக்குமெண்ட் கேட்டு இருப்போம் நாம புராஜக்ட் செண்டர்ஸ்ல.. தர்றோம்.. தர்றோம்ன்னு சொல்லிட்டு.. கடைசி நிமிஷத்துல ஒரு டாக்குமெண்ட் அனுப்புவாங்க.. “அடப்பாவி மக்க.. நாம பண்ணி இருந்தாலே இதவிட நல்லா பண்ணி இருப்போமே. இது என்ன இவ்ளோ கேவலமா இருக்கு”ன்னு கண்டிப்பா ஒவ்வொருத்தனும் நெனப்பான்...

4.5:-புராஜக்ட் செண்டர்ஸ்--- மூன்றாம் நிலை:-

கடைசில புராஜக்ட்ன்ற பேர்ல ஒன்னு தருவாங்க.. ஸார்.. இது இல்ல.. அது இல்லன்னு நாம சொன்னா.. இவ்ளோதாம்பா பண்ண முடியும்னு ஒரு அலட்சியமான பதில்.. முடிஞ்சா நீ பண்ணி பாக்க வேண்டுயதுதானேன்னு நம்ம தெறமய கேவல படுத்துற வார்த்த அடுத்து வரும்... செரி.. புராஜக்ட் தாங்கன்னு கேட்டா.. சுத்தமா தரமாட்டாங்க... நாம கட்ட வேண்டிய 10,000 பணத்துல ஒரு 1,000 ரூபா கட்ட வேண்டியது இருந்தாக்கூட அந்தக் காச வாங்கிட்டுத்தான் தருவாங்க.. புராஜக்ட் வாங்கிட்டு நாம ஓடிடுவோமாம்... (என்னக் கொடும ஆதவா இது??)

இதுக்கப்புரம் நாம எது மாத்த சொன்னாலும் மாத்த மாட்டாங்க.. டாக்குமெண்ட்டும் அவங்க இஷ்டமா பண்ணித் தருவாங்க... (’சோதனை மேல் சோதனை...’ அந்த மாணவர்களின் காலர் டியூன்..)

5:-என்னதான் தீர்வு???:-

பல படிகளில் மாற்றம் வரவேண்டும்
1--> காலேஜுல .. இரண்டாம் ஆண்டு முதலே புராஜக்ட் பத்தி சொல்லித் தரனும்...

2-->இப்போ இருக்குற சிலபஸ் வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறத ஒத்துகிட்டு.. (என்னதான் ஜாவா , .நெட் எலக்டிவ் எடுத்து படித்தாலும்...) தனியா டெக்னாலஜி கத்துக்கணும்..ஆர்வம் இருக்கனும்...

3-->ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டுல நம்ம காலேஜுக்கு பேர் வரனும்கிறதுக்காக... IEEE பேப்பர் தான் செய்யனும்ற ரூல மாத்தனும்

4--> பசங்கள காலேஜ்ல புராஜக்ட் பண்ண வெச்சா நாம பாத்துக்கனுமேன்றதுக்கு சோம்பேறித்தனம் பட்ட்டுக்கிட்டு.. அவங்கள புராஜக்ட் செண்டர் அனுப்புற (பெரும்பாலான)விரிவுரையாளர்களின் மனப்போக்கு மாறனும்......

5-->பசங்க சிக்கிட்டாங்கன்ற ஒரே காரணத்துகாக.. கண்டதெல்லாம் சொல்லலாம்ற கண்மூடித்தனமான பேமானித்தனம் புராஜக்ட் செண்டர்ஸ்ல மாறனும்...

6-->புராஜக்ட் செண்டர்ஸ்ல தெரியாத விஷயத்த தெரியலன்னு சொல்லனும்..

தனியாக புராஜக்ட் பண்ணா அந்த மாணவனுக்கு 5,000... ரெண்டு அல்லது மூனு பேர் சேந்து பண்ணா ஒரு தலைக்கு 4,000... இதுதான் இப்போ மார்க்கெட் ரேட்....

நண்பர்களே!!!

இந்த மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு வெளியேறக்கூடிய இஞ்ஜினியர்களின் எண்ணீக்கை பல லட்சங்களைத் தாண்டும்... ஒரு மாணவன் 4,000 ரூபாய் இழக்கிறான் என்றால்... ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் எவ்ளோ இழப்புன்னு பாருங்க...

இது என் ஜூனியர்ஸ்க்கு

முடுஞ்ச வரைக்கும் தனியா நீங்களே புராஜக்ட் பண்ணப் பாருங்க.. அப்பிடி செண்டர்ஸ் போனாலும் தப்பில்ல.. கத்துக்கப்பாருங்க.. கத்துக்கவும் முடியலன்னா... புராஜக்ட் கைல வாங்காம முழுப் பணத்தையும் கட்டாதீங்க!!!

முடிவுரை:-

இதுக்கு முடிவுரை என் பத்து விரல்கள் மட்டும் எழுத முடியாது...
அவன் செய்த மாதிரி நானும் புராஜக்ட் செண்டர் போறேன்ற பொதி கழுதைத்தனம் மாறனும்..
வேற என்னத்த சொல்ல??????

(இது ஒரு மீள் பதிவு .... )


June 10, 2009

தமிழர்ஸ் ஓனர் யாரு??

அர்ஜூன் அம்மா யாருன்ற மாதிரி...

இப்போவெல்லாம் இந்தத் திரட்டி இவக நடத்துறாக...

அந்தத் திரட்டி அவக நடத்துறாகன்னு கெளப்பிவிடுறதுதான் fashion ...

எல்ல தளத்த பத்தியும் பிரிச்சு மேய்ஞ்சாச்சு.... அதனால என் பங்குக்கு புது தளமான தமிழர்ஸ் மேலுள்ள சந்தேகங்கள சொல்லிட்றேன்...




 சந்தேகம் நெம்பர் ஒன்னு --> டாக்டர் சுரேஷ்




ஒழுங்கா டாக்டர் தொழில் பாத்துட்டுருந்த இவரு .. ஏண்டா பவித்ராவின் காதல்.. சின்ன வீட்டின் பாடம்ன்னு டார்ச்சர பண்றாருன்னு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்,,,,

ஒரு வேள .. அமைதியா பதிவர் மாதிரி நடிச்சுக்கிட்டு.. பாட்ஷா படம் மாதிரி.. “நான் யாருன்னா...” அப்டீன்னு சொல்வாரோன்னு ஒரு சந்தேகம்...
(பாட்ஷா... டாடட்டடாடடன்..)

 சந்தேகம் நெம்பர் ரெண்டு--> சக்கர சுரேஷ்



அண்ணி ஊருக்கு போயிட்டதால பதிவெழுத ஆரம்பிச்சேன்னு இவரு சொன்னப்பியே ஒரு டவுட்டு.... ஏன்யா.. அண்ணி ஊர்ல இல்லாட்டி சும்மா சமைச்சுட்டு தூங்க வேண்டியதுதானே????  இந்த ஒரு காரணமே இவர் மேலுள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறடுது.
(சக்கர இனிக்கிற சக்கர..)


 சந்தேகம் நெம்பர் மூனு -->  லோகு



நல்லா எழுதிட்டு இருந்த பையன்...திடீர்னு காணாமப் போயிட்டான்... அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றி அவனுடைய டக்னிக்கல் நாலேட்ஜும் காமிக்கிறான்... ஒரு வேள இவனா இருக்குமோ ???
(ஜன கன மன..)

 



சந்தேகம் நெம்பர் நாலு--> தமிழ் நெஞ்சம்


யப்பா.. இவரு டெக்னிக்கல் புலி... மொதல்ல இருந்தே இவருடைய பதிவுகள் தமிழர்ஸ்ல வந்துக்கிட்டு இருக்கு,,, ஏன்??? அட யாருமே சேராதப்ப கூட இவருடைய பதிவு இருந்துச்சுங்க... இவர்தான்னு 90% கன்ஃபார்ம் பண்ணிட்டேன்.. ஆனா ஏற்கனவே தமிழிஷ்,தமிழ் 10 இதுக்கெல்லாம் இவர்தான் ஓனரோன்ற சந்தேகம் இருக்குறதால இவர உட்ருவோம்...  (benefit of the doubt always given to the accuset)ஸ்பெல்லிங் தெர்லபா...

 சந்தேகம் நெம்பர் 5--> kricons

இதுவும் ஒரு டெக்னிக்கல் புலி... திடீர்னு வந்து புயல் மாதிரி எழுதிக்கிட்டு இருந்த இந்த புலி., திடீர்ன்னு காணாம போயிடுச்சு.. 

கடந்த 3 வாரமா இவரு எழுதல... நல்லா நோட் பண்ணுங்க.. தமிழர்ஸ் ஆரம்பிச்சு 2 வாரம்தான் ஆகுது..  

இவர்தான்.. இவரேதான்..


 சந்தேகம் நெம்பர் 6--> இராகவன் நைஜிரியா


இருமல் தாத்தா “லொக்கு லொக்கு”ன்னு இருமுற மாதிரி இவர் அடிக்கடி.. எனக்கு டெக்னிகலா எதுவும் தெரியாது ..டெக்னிகலா எதுவும் தெரியாது ..ன்னு சொல்லும் போதே சந்தேகம்...

இவர்தானோ ????






 சந்தேகம் நெம்பர் 7--> பார்த்தது கேட்டதும் சித்து ,ஜெட்லி










திடீரென முழைத்துள்ள டெம்ப்ளேட் மாற்றங்கள்... 

திடீரென முழைத்துள்ள ப்ளாக்குகளின் மேல் இவர்களின் அதீத காதல் ....

இள ரத்தம் வேற... இவங்கதானோ???

(அடப்பாவி.. தொடர் பதிவுன்னாலே என்னன்னு நீதானடா சொல்லி குடுத்தன்னு அவங்க ஃபீல் பண்றது புரியுது.. ஆனா கடமைன்னு வந்துட்டா.. யாருன்னு பாக்க மாட்டான் இந்தக் கடைக்குட்டி)

 சந்தேகம் நெம்பர் 8-->  ப்ரியமுடன் வஸந்த்




இந்தவார தமிழன்னு மொத மொத அறிமுகப் படுத்துவாங்களாம்...

அதுல இப்போதான் எழுத வந்த வஸ்ந்த்த கூப்புடுவாங்களாம்... வஸந்த் அண்ணாவுக்கு பொண்ணு பாக்குறாக... பொண்ணு வீட்டுல நாந்தான் கெத்துன்னு சொல்றதுக்காக எல்லா தளத்துலயும் அவர் படத்த வர வெச்சுட்டாரு.. 

(அண்ணா.. மாட்னீங்களா????)

 சந்தேகம் நெம்பர் 9--> வணங்காமுடி








அக்டோபர்ல எழுத வந்துட்டு திடீர்னு காணாம போயிட்டு.. இப்போ திடீர்ர்னு திரும்பி வந்து இருக்காரு.. இவரோ ???

(’நான் இல்ல’ன்ற மாதிரியே பாக்குறாரு )



 சந்தேகம் நெம்பர் 10--> கடைக்குட்டி


கம்ப்யூட்டர் எஞ்சினியர்.

புதுசா ஏதாவது செய்யுறதுல ஆர்வம்...

காசு பாக்கனும்ன்னு வேற எண்ணம்....

அட நானாக்கூட இருக்கலாமோ ???
(இதுதான உன் ஆசை.. இப்போ சந்தோசமா??)


டிஸ்கி 

வாலு , கார்க்கி, தாமிரா போன்ற மூத்த பதிவர்கள் கோச்சுக்க கூடாது.... 

உண்மையான ஓனரே...

உங்க பேர நான் மறந்து இருந்தா.....

நீங்களே வந்து சரண்டர் ஆயிடுங்க... பின்னூட்டத்துல ... :-)


June 09, 2009

சூர்யா -- ஜோதிகா --> காதல் ஸீன் - 2

சரவணன் முதல் சூர்யா வரை -- 5


(50வது பதிவு)

சூர்யா - ஜோதிகா காதல் ஸீன் -- 2


சண்ட போட்டாச்சா ரெண்டு பேரும்.. அட எப்பயா??  இத படிங்க மொதல்ல....





சூர்யா ‘நந்தா’ ஷூட்டிங்க்ல இருந்த நேரம். டைரக்டர் பாலா இவரை அணுஅணுவாக மாற்றிக் கொண்டிருந்தார். ‘திமிரா நட.. மொறப்பா பாரு’ன்னு வேற ஆளா மாத்திட்டு இருந்தார்.  படமும் முடிந்தது.. ஜோவுக்கு சும்மா எஸ்.எம்.எஸ் அனுப்பவதோடு சரி அந்தக் காலகட்டத்தில். சண்டையெல்லாம் மறந்து போச்சுடோய்...

நந்தா முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வதெனக் கவலை... என்ன மாதிரி படம் செய்யலாம்னு ஒரு குழப்பம்... அப்போ ஜோதிகா கிட்ட இருந்து ஃபோன்

ஜோ :- ஹாய் சூர்யா
சூர் : - சொல்லுங்க...
ஜோ:- கௌதம் ஒரு கதை வெச்சு இருக்காரு... நான் நடிக்கிறேன்.. ஹீரோ செட் ஆகல..நீங்க கதை கேட்டுட்டு சொல்லுங்க
சூர் :- ஓ.கே. :-)



கதை கேட்டு இவருக்கு பிடிச்சா..  தயாரிப்பாளர் கிடைக்கவில்லை... சூர்யாவ வெச்சு இவ்ளோ பெரிய பட்ஜெட்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க... தாணு தயாரிக்க... படம் வளர வளர... இந்தக் காதல் ஜோடியின் காதலும் வளர்ந்தது...
படசெலவு கைமீறிப் போக .. கடைசில கௌதம்,சூர்யா,ஜோ எல்லாரும் கொஞ்சம் கைக்காசப் போட்டு முடுச்சாங்க... படமும் வெற்றி..

சூர்யா அணுஅணுவாக ஜோவை கவனிக்க ஆரம்பிச்சது இந்தக் காலகட்டத்தில்தான்...

அம்மாவும், தங்கையும் சில சொந்தங்களை மட்டும் பார்த்து வளர்ந்த மொக்கை சூர்யாவுக்கு... வரப்போற மனைவியும் இவங்க வரிசைல இருக்கணும்னு ஒரு எண்ணம்...

ஷூட்டிங் ஸ்பாட்ல ..

சூர் :- ஏன் இவ்ளோ அவசர அவசரமா சாப்புட்றீங்க???
ஜோ :- இல்ல .. ப்ரேக் முடியறதுக்குள்ள அசிஸ்டெண்ட்ஸும் சாப்டனுமே..

சூர்யா மெதுவாக சாப்பிடுவார்.. ஒரு நாள் கூட தன் உதவியாளர்களை இப்பிடி கேட்டது கூட இல்லை.. சரி இவங்கள விடுங்க.. அம்மாவக் கூட கேட்டதில்லையேன்னு நெனக்கும் போது , அவமானமா இருந்ததாம்....

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் சூர்யாவின் மனசுக்குள் புகுந்தார் ஜோ.. ஆனா அவர் காட்டிக்கல.. பல நூறு முறை விலகிப் போனாலும் .. புகுந்து புறப்பட்டது காதல்..


எல்லா விஷயங்களிலும் தமிழ் கலாச்சாரம் கலந்து இருக்கும் ஒரு வீட்டில்.. மொழி தெரியாத,வேறு கலாச்சாரத்தில் பிறந்த , சம்பந்தமே இல்லாத சப்பாத்தி பொண்ணு எப்பிடி சேர்ந்தார்..??? 

வீட்டை சூர்யா எப்பிடி அனுகினார்??? எல்லாக் காதலிலுமே , அவர்கள் காதலின் ஆழத்தை , ஆழம் பார்ப்பது எதிர்ப்பு வரும் காலம்தான்.. 

அந்தக் காலம்.... அடுத்தடுத்த பதிவுகளில்....

இதுவரை நான் எழுதிய -->சரவணன் முதல் சூர்யா வரை இங்க போய் படிச்சுக்கங்க...