January 07, 2010

ஆமீரும் கமலும் ஒரு புள்ளியில்

பின்தொடரும் 75 நண்பர்களுக்கு நன்றி

ஆமிர் கான் பாலிவுட்டின் கமல்ஹாசன்.
கமல்ஹாசன் தமிழ்நாட்டின்(கோலிவுட்னா திட்டுவாருங்க..) ஆமிர்கன்..


இரண்டில் எது சரி ?? முதலாவதுதான் சரி.. வயதாகட்டும் .. செய்யும் பாத்திரங்களாகட்டும்.. ஆமிரைவிட கமல் மேல்தான்.. இருவருன் முயற்சிகளும் பாராட்டுக்குறியன..

முதலில் கமலை எடுத்துக் கொள்வோம்..16 வயதினிலே,, சிகப்பு ரோஜாக்கள்.. வறுமையின் நிறம் சிவப்பு இந்த மாதிரி இயக்குனர்களின் படங்களில் கலக்கினாலும்... நாயகனுக்குப் பிறகு கமலுக்கு தீனி போடும் அளவுக்கு தமிழ் சினிமா உயரவில்லை..

நாயகனுக்கு பிறகு அபூர்வ சகோதரர்கள்,தேவர்மகன் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு கமல்தான் கதை திரைக்கதை.. இதுவே இவருடைய தேடலுக்கு ஒரு உதாரணம்..

இந்தப் பக்கம் ஆமிர் கானை எடுத்துக் கொண்டால் க்”கயாமத் ஸே கயாமத் தக்” படத்தில் துவங்கி..பல வழக்கமான பாலிவுட் மசாலாக்களில் நடித்து வெற்றி கண்டார்.. சில தோல்விகளும்.. ஆனால் வழக்கம்போல் மரத்தை சுற்றி டுயட் பாடுவதே வேலை.. ரங்கீலா.. மண் எல்லாமே அப்படிதான்..

கமலுக்கு நாயகன்.. ஆமிருக்கு லகான்.. ஆஸ்கர் நாமினேசன் வரை சென்றது வரலாறு.. அந்தப் புள்ளிக்கு பிறகு கமலுடையதைப் போல் இவரின் கலைதாகமும் அதிகமானது.. வழக்கமான படங்களில் நடிக்க முடியாத நிலை.. கமல் போல் தானாக கதை திரைக்கதை அமைக்கவில்லை.. (தாரே சமீன் பர் டைரக்ட் பண்ணி இருந்தாலும்..) இவர் புது டைரக்டர்களை தேடினார்.. கண்டறிந்தார்.. வெற்றி கண்டார்..

ஒவ்வொரு படமும்.. ஒவ்வொரு அனுபவம்.. ரங் தே பசந்தி டிஜேவாகவும் கலக்குறார்.. தாரெ சமீன் பரும் நடிக்கிறார்.. தில் சஹதஹேயும் தில்லாக நடிக்கிறார்.. சமீபத்தில் 3 இடியட்ஸ்..

இருவரும் தன்னை உணர்ந்து கொண்டது ஒரு படத்திற்க்கு பிறகுதான்,,. ஆனால் அதற்கு பிறகு இருவரின் முடிவும் வெவ்வேறானவை.. யோசிக்க செய்பவை.. ஹிந்தி போல் உலக அளவில் மார்க்கெட் இல்லாட்டியும்.. உலக நாயகனின் மார்கெட் பெரிதுதானே..

இருவரும் இணைவது ஒரு புள்ளியாய் இருந்தாலும்.. இருவரில் ஒருவர் முந்துவது போல தோன்றுவதற்க்கு காரணம்??


3 இட்டியட்ஸ்க்கு இம்மி அளவும் குறைந்தது இல்லை அன்பே சிவம்.. 3 இ, இளைஞர்கள்..படிப்பு.. கல்வி பற்றி மட்டுமே பேசுகிறது.. ஆனால் அன்பே சிவம் மனிதனைப் பற்றி பேசுகிறது.. மனிதத்தை பற்றி பேசுகிறது..

3இ. விட .அ.சி சிறந்தது..ஆனால் ஓடல.. ஏன்?? இந்த மதிரி இன்னும் பல படங்கள் சொல்லலாம்..

கமல் தவறும் புள்ளி.. ஆமிர் ஜெயிக்கும் புள்ளி என்று நான் கருதுவது.. கமல் படங்களில் கமல் மட்டுமே தெரிகிறார்.. அவருடைய அறிவுஜீவித்தனம் மட்டுமே தெரிகிறது.. இந்தியன் படம்போல்.. டைரக்டரின் திறனுடன் இவரின் திறன் இணைந்து இயைந்து மாயாஜாலம் புரிவதில்லை..

(அன்பே சிவத்தின் இயக்குனர் சுந்தர்.சி... தசாவதாரம் கே.எஸ்...)


ஆனால் ஆமிரின் கதை வேறு.. 3 இடியட்ஸ் படத்தில் ஆமீரின் கேள்விகள் இருந்தாலும் அவரை விட மூளையான ஒருவரின் தாக்கம் தெரியும்.. அது டைரக்டர்..

அப்போ கமல் தலையீடு ஜாஸ்தியா ?? அப்டீன்னு கேட்டா..
என் பதில்.
கமல் என்னும் யானையை கட்டித் தீனி போட தமிழ் சினிமா டைரக்டர்களே தயாராகுக.. அவருக்கு இவர் சளச்சவரில்லை என்பதை உலகுக்கு உணர்த்துக,..


டிஸ்கி:
இப்போல்லாம் பதிவு எழுதும் நாள்களைவிட எழுதாத நாட்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறது... ஏன்?

எப்படி எழுதுனாலும் ஓட்டு சேர மாட்டேங்குதே .. ஏன்??? :-) தெரிந்தவர்காள் மெயிலவும்..


சூர்யா டான்ஸ் ஆட வேணாம்!!



நேருக்கு நேர் முடிஞ்சு.. காதலே நிம்மதியும் ஓவர்.. படம் சுத்தமாக படுத்து விட்டது.. அடுத்து கண்டிப்பாக ஹிட் தேவை.. அப்பா சிவக்குமார் கதை கேட்டு.. கொஞ்சம் பாட்டு. , ஃபைட்டு.. ஜனரஞ்சகமா இருக்குப்பா நாடின்னு சொல்லி ஆரம்பித்த படம்
சந்திப்போமா...

டைரக்டர் லண்டன் போய் படித்து வந்தவர்.. “ஷாட்ல வலப்பக்கமா உள்ள வர்றீங்க. நிமிர்ந்து பாக்குறீங்க..’ன்னு ஒவ்வொரு ஷாட்டையும் ஸ்டோரி போர்டில் சொன்னார்.. மவனே கண்டிப்பா ஹிட் டான்னு எறங்கியாச்சு..

என்னதான் ஆக்ஸ்போர்ட்ல படிச்சாலும் ரெண்டும் ஒன்னும் மூனுதானே.. நாலில்லல.. அந்த மாதிரி அடிப்படைல ஒரு தப்பு..

சவுண் ட்,ஸ்டார்ட் கேமரா அப்டீன்னு சொன்னதுக்கு அப்புறந்தான் ஆக்‌ஷன் சொல்ல வேண்டும்.. ஆனால் இந்த லண்டன் டைரக்டர் எடுத்த உடனே ஆக்‌ஷன் சொல்லி விட்டாரு.. அட என்னப்பா இது.. மொத்த யூனிட்டும் ஸ்தம்பித்தது..

இன்று வீட்டிற்க்கு போனதும் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன்பா என்று இவர் சொல்லிப் பார்த்து இருக்கிறார்.. ஆனால் அட்வான்ஸ் வாங்கியாச்சு.. நடிச்சு முடிச்சுடு.. படம் நல்லபடியா ஓடும் பாருன்னு கலையுலக மார்க்கண்டேயரும் நம்பிக்கை குடுத்து இருக்கிறார்...

இன்னும் எக்ஸ்ப்ரஷன் தாங்கன்னு கேட்டாலும் சொல்லிக் குடுத்து வாங்குற அளவுக்கு டைரக்டருக்குத் தெரியல.. சொல்லாமலே நடிக்க சூர்யாவுக்கும் தெரியல.. அடுத்த தோல்விக்கு ரெடி..

இதுக்கு நடுவுல ஜெய்ப்பூர்ல ஷூட்டிங்..ஜோத்பூர்ல முகாம்.. பத்து நாள் ஷூட்டிங் ஓவரு.. ஆனா ஹோட்டல்ல மவனே வீட்டுக்கு போவாதீங்கன்னு கேட்ட பூட்டியாச்சு. என்ன ஏதுன்னு விசாரிச்சா.. 10 நாள் காசு பாக்கி.. ஹோட்டல் பில்லே தரல.. தயாரிப்பாளர் புதுசு...

சூர்யாவ மட்டும் கெளெம்பி போயிடுங்கன்னு அங்க இருந்தவங்க சொன்னாலும்.. இவரும் வந்துட்டா அந்த யூனிட்டுக்கு யாரும் உதவ முடியாத நிலைமை...ஒரு வழியாக சூர்யாவும் சிவக்குமாருக்கு ஃபோன் போட்டு விவரம் சொல்ல.. பணம் புரட்டி இவர் அனுப்ப ..அதுக்கு அப்புறம் எல்லாரும் ஊருக்கு வந்து சேர்ந்தார்கள்..

இப்படி பல சாகச பராக்கிரமங்களுக்கு நடுவில் நடித்த “சந்திப்போமா” படுதோல்வி.. என்னதான் சிவகுமாரின் மகனாக இருந்தாலும் யாரும் முகம் கொடுத்து பேசவில்லை.. நல்லா இருக்குன்னு சொன்ன எல்லாரும் மொகத்துக்காக சொன்னாங்க.. பின்னாடி நிறைய ஏச்சு.. கேலிகள்..

சூர்யா டான்ஸ் ஆடுவதை தவிர்த்து விடுவது நல்லது “ என்று கல்கியில் விமர்சனம் செய்தார்கள்..
இப்படி முச்சந்தியில் வந்து அசிங்கப்படனுமா சூர்யா ??

சும்மா இருந்த சரவணனை சூர்யாவா மாத்திவுட்டானுங்க...

சூர்யான்ற முகமூடியிம் செட்டாகல..

சரவணனையும் தொலச்சாச்சு..

அந்த சரவணன் அப்பிடி என்னதான்பா பண்ணிக்கிட்டு இருந்தாப்ல??

வரும் பதிவுகளில்...
(பழச படிக்க இங்கு க்ளிக்கவும் :-)

January 05, 2010

எஞ்ஞினியா வா! -- 3



பழச படிக்க இங்க க்ளிக்குங்க..

கம்யூட்டர் பொட்டி அறிமுகமாகி.. அது மக்கள் பயன்பாட்டுக்கு வந்து பல பண முதலைகள் (ஏங்க கெட்ட பணக்காரங்கள பண மொதலனு சொல்றாங்க??) அதன் வீரியத்தை உணர்ந்து உடனே தனியார் காலேஜ்கள் தொடங்க வில்லை..

அதுக்கு கொஞ்சம் காலமாச்சு.. ஆனால் அது அதன் பீக்கில் இருந்தது 95-2000 வரை.. அந்தக் கால கட்டத்தில் எஞ்ஞினியர் என்றாலே தனி மதிப்பு..

அந்த காலகட்டத்தில் பள்ளி படித்து கொண்டிருந்த (என் போன்ற) பிள்ளைகளுக்கெல்லாம் அப்போ வெளிநாடு போனா அண்ணங்களும் அக்காளும்தான் பெரிய இன்ஸ்ரேஷன்.. அத மனசுல வெச்சுதான் பெத்தவங்களும் அடுத்தடுத்து பிள்ளைகளை செர்க்க எஞ்ஞ்னியரிங் கல்லூரிகளைத் தேடி அலைந்தனர்..

ஒரு ரெண்டு தலைமுறைக்கு முன்னாடி எந்த வெள்ளக்காரன அனுப்பினோமோ அவங்கிட்ட சேவகம் செய்ய பிள்ளைகளை தயார் பண்ணியது சமூகம்.. இளைஞ்ர்களின் முகம் மாறிப் போனது..

மிக அதிகமான பணம் விளையாடியது.. இளைஞர்கள் படித்து முடித்ததும் வெளிநாடு சென்றனர்.. பிள்ளைகளைப் பார்க்க பெத்தவங்களும்..

ஆனா என்னதான் கண்டிப்பாக இருந்த காலேஜ்களை இந்த மாதிரி கெளப்பி விட்டாலும்.. எண்ணிக்கை அதிகரித்தாலும்.. நமக்கு இன்னும் உலகக மார்க்கெட்டுல டிமாண்ட் இருக்குங்க...


இவ்ளோ பேர எஞ்ஞினியரா மாத்துறது தப்பில்ல இந்த சமூகத்துல.. ஆனா நாட்டுக்கு இது நல்லதில்லை.. சொல்வதை செய்யும் கிளிப்பிளைகள் தயாரிக்கப் படுகிறார்கள்..

அப்புறம் எப்புடிதான்பா படிக்கிறது?? அதுக்குன்னு எதுனா வழி இருக்கான்னு கேட்டா கண்டிப்பா இருக்கு.. 2000 ல உடனே கெடச்ச அந்த பணமும் சமுதாய மதிப்பும் கெடைக்கும்னு நெனக்காம உண்மையாக படிக்கும் எஞ்ஞினியருக்கு தன் தனிதன்மையை காக்கும் எஞ்ஞினியருக்கு காலம் வாய்ப்பளிக்கும்..

எப்பூடி...???


--தொடரும்..

( ஆணி அதிகம்.. எனவே அதிகமாக எழுத முடியவில்லை.. .. பின்னூட்டமிடுங்கள்.. விவாதிக்கலாம்.. )

January 04, 2010

காதலே நிம்மதி ஓடி இருந்தால் ????


சரவணன் முதல் சூர்யா வரை தொடரின் அடுத்த அத்தியாயம் இது.. ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க (யார் அதுன்னு கேக்கக் குடாது.. :-) என்னதான் வகை வகையா மொக்க போட்டாலும்.. இந்த தொடருக்குத்தான்ஹிட்ஸ் கெடக்கிது,.. அதான் திரும்பவும் எறங்கிட்டேன்...

‘நேருக்கு நேர்’ முடிச்சு அது 100 நாளும் ஓடியாச்சு.. அடுத்து என்ன.. ?? ‘காதல் கோட்டை’ ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ போன்ற படங்கள்ன் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனின் தயாரிப்பில் ’காதலே நிம்மதி ‘ படமும் துவங்கியாச்சு..

படத்தின் கதையை டைரக்டர் 20 நிமிடந்தான் சொல்லி இருக்கார்.. “எல்லாமே ட்ரீட்மெண்ட் ஸார்.. ஸ்பாட்ல பத்துக்கலாம்னு ” சொல்லிடாப்ல.. ஷூட்டிங் ஸ்பாட்ல போனா டயலாக் பேப்பர குடுத்து நடிங்கன்னு சொல்லிட்டாங்க.,, சூர்யாவ இப்பிடி நடிக்க சொன்னா எப்பூடி?? அவர் சரவணனா இருக்கிராறே.. என்னதான் சினிமாவுக்காக பெயரை மாற்றிக் கொண்டாலும் கூடவே பொறந்த கூச்சமும் ,தாழ்வு மனப்பான்மையும் துரத்த அவை இரண்டோடும் சண்டை போடவே நேரம் சரியாக இருந்தது..

மனிதருக்கு நடிக்கத் தெரியவில்லை.. டயலாக் சொல்லத் தெரியவில்லை.. சண்டைக் காட்சிகளில் அழுத்தமாக குத்து விட முடியவில்லை.. டான்ஸ் பிடிபடவில்லை.. இப்படி நிறைய இல்லைகள்.. (இந்த இல்லைகளை நீங்கள் தற்போது அந்தப் படத்தை பார்த்தால் உணர முடியும்..)



சரியான உடையும் தேர்வு செய்யத் தெரியவில்லை.. அந்த நேரத்தில் கை குடுத்து உதவுயது நாசர் மட்டுமே.. அவருடைய வழிகாட்டுதலில் நடித்தும் முடித்தாகிவிட்டது..




படம் பொங்கல் ரிலீஸ் என்று நினைவு.. மரண மொக்கை.. ஹீரோயினோட அண்ணன்கிட்ட அடிவாங்கும் ஹீரோவினை நம் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.. அதும் லவ் பண்ணாமலேயே வருகிற சந்தேகத்தால் போட்டு பிரித்து மேய்வார்.. கொடுமடா சாமீய்ய்ய்ய்...

முதல் தோல்வி..
இந்த மாதிரி எதிர்பாராத தோல்விகளே சூர்யாவை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.. நான் இந்த தொடரை எழுத ஆரம்பித்த போது இருந்ததை விட தற்போது மாஸ் கணிசமாக உயர்ந்துள்ளது.. விஜய் டி.வி.யில் மனிதர் ஒரு பேட்டியின் போது.. கதை இலாகா ஆரம்பிக்கணும்னு சொல்றார்.. அதாவது வெறும் கதை மட்டும் எழுதி அவற்றை நூலகம் போல சேர்த்து வைத்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்று சொன்னார்..


நல்ல விஷயம்தான்.. ஆனால் காதலே நிம்மதி போன்ற மொக்கைகள் ஓடி இருந்தால் சூர்யாவின் நிலையை யோசிக்க முடியவில்லை..

தோல்வியும் நல்லது போல..

சூர்யாவின் அடுத்தடுத்த வாழ்க்கை பயணம் .. வரும் பதிவுகளில்.. பழச படிக்க இங்கு க்ளிக்குக...

January 02, 2010

ங்ஙே!!


வாழ்க்கைல "ங்ஙே!!"ன்னு நாம முழிக்கிற தருணங்கள் ரொம்ப சங்கடமானவை...
என்ன பண்றதுன்னே தெரியாது.. ஆனா நெனச்சு பார்த்தா காமெடியா இருக்கும்.. அவற்றில் சில..

எச்சரிக்கை.. இவை அனைத்தும் உண்மை சம்பவங்கள்

*********

ராஜேஷ் : “மச்சி ”paa” பாக்கலட இன்னும்”
ராஜா : “இன்னும் paa பாக்கல??
ராஜேஷ் :அட ஆமாடா...
ராஜா : அட என்னடா... இங்க வா..
(”பா”ன்னு கைல எழுதுனான்.) தோ பாரு மச்சி..

ராஜேஷ் : ங்ஙே!!!

********



அந்த லாப்டாப் சரி செய்யும் அதிகாரி வேலை நிமித்தமாக ஒருவரின் வீட்டிற்கு சென்றார்.. அதே லாப்டாப்பை சரி செய்யுறது 4வது தடவ..
அடிக்கடி போனலும் உடனே சரி பண்ணிடுவாரு.. இந்த முறையும் சரி பண்ணியாச்சு..
அந்த வீட்ல இருந்த ஒரு பாட்டி..

பாட்டி : தம்பி
அதிகாரி : சொல்லுங்க பாட்டி
பாட்டி: அடிக்கடி என் புள்ள் தொல்ல குடுக்குறானா தம்பி..
அதிகாரி; அட பரவாயில்ல பாட்டி.. இது என் வேலதானே..
பாட்டி: இல்ல.. அது வந்து
(தன் வேலையை இன்னும் புகழப் போறாங்கன்னு நெனச்சாரு அந்த அதிகாரி..)
பாட்டி: வாஷிங் மெஷின் 3 நாளா வேல பாக்கல.. அத சரி செய்வியாப்பா ????

அதிகாரி : ங்ஙே!!!

(அட பிச்சைக்கு பொறந்த பிச்ச
என்னை ஏண்டா இஞ்ஞனியரிங் படிக்க வெச்ச???)

*************

50+ அரசு உயரதிகாரி அவரு..
நம்மாளு 20 வயசு சாஃப்ட்வேர் பட்டாசு..
எப்புடியாவது தான் வேல பாக்குற பகுதிய கணினிமயமாக்கிடனும்னு ராப்பகலா ஒழச்சு ஒரு சாப்ட்வேர் உருவாக்கி இருந்தான்..
அத அந்த அதிகாரி கிட்ட காட்ட போனான்,,

பையன் : ஸார்
அதிகாரி : சொல்லுங்க ...
பையன்: ஒரு விஷயம்..
அதிகாரி : சொல்லுப்பா...
பையன்: ஸார் ஒரு சாஃப்ட்வேர் செஞ்சு இருக்கேன்,, பாக்குறீங்களா??
அதிகாரி : நான் ஏற்கனவே சாப்டேன்பா...

பையன் : ங்ஙே !!

*****
வருடத்தை சிரிப்போடு ஆரம்பிப்போம்!!
சிறப்பாக வாழ்ந்து வைப்போம்.. !! :-)
அனைவருக்கும் 2010 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...