April 30, 2009

யூத்ஃபுல் விகடனில் எனது பதிவு...


பின்னூட்டத்திற்கு முன்னூட்டம்
(நான் புது பதிவு போடுறதுக்குள்ள ஊக்கப்படுத்துறவங்களுக்கு இங்க நன்றி.. கொஞ்சம் லேட்டா வந்தா அங்க நன்றி..
ஆக மொத்தம் நன்றி நன்றிதான்.. பாசம் பாசந்தான்..!!)
....நன்றிகள் பல...



படம் கொஞ்சம் மங்கலா இருக்குல ??? என் கனவுலயும் இப்டிதாங்க வந்துச்சு ... :-)

(இன்னைக்கிதான் முதமுத மெயிலே அனுப்பி இருக்கேன்.. இன்னைக்குதான் நான் இந்த யூத்ஃபுல் விகடன சீரியஸா பாத்தேன்,,,, செரி நாம பாப்போம்... கனுவு பலிக்குதான்னு .. :-)

வந்ததுதான் வந்துட்டிங்க... ஓட்டிட்டு போய்டுங்க.. இவ்ளோ இருக்கு .. எதுல முடியுமோ அதுல போடுங்க.. “யாம் பெற்ற இன்பம் ...”


”இதக் குடிடா சூர்யா !! “ சிவக்குமாரே சூர்யாவிடம் சொன்னது ஏன் ??


பின்னுட்டத்திற்க்கு முன்னூட்டம்
நன்றிகள் பல
இராகவன் நைஜிரியா ,,வேத்தியன்,, ஆதவா  ,, SUREஷ் ,, (வந்துட்டாரு இவரும் .. )
சரவணன் முதல் சூர்யா வரை -->2

சூர்யாவை புடிக்கும்ன்னு ஒருத்தர் சொன்னார்ன... கண்டிப்பா அவருடைய படங்களுக்காகவும்.. தன்னம்பிக்கைகாகவும்னு மட்டும் புடிக்கும்னு சொல்லமுடியாது.. 

தனி மனித ஒழுக்கமும் ஒரு முக்கியமான காரணம்...

இத ஒரு பாய்ண்ட்டா நான் இங்க சொல்லும் போது ... கண்டிப்பா சிவகுமார பத்தி சொல்லாம இருக்க முடியாது..  “கலையுலக மார்க்கண்டேயர்” .. ஒழுக்கம்னா
என்னன்னு ஒழுக்கமே வந்து பாத்துட்டு போகும்.. அவ்ளோ நல்லவர்... அவரைப் பற்றி சூர்யா சொல்லும் போது..

“என் அப்பாவிடம் நேரந்தவராமை என்பது எனக்குப் பிடிச்ச ஒரு நல்ல பழக்கம்.. ‘சிந்து பைரவி’ பட ஷூட்டிங் அப்போ.. ‘உன்னவிட ஒரு நாளாவது சீக்கிரம் 
வந்து காட்டுறேன் பாருன்னு சவால் விட்டு .. பின் ‘உன்கூட இந்த விஷயத்துல மோத முடியாதுப்பான்னு’ விலகிக் கொண்டாராம் பாலச்சந்தர் ..  அதே மாதிரி  
சினிமாக்காரன் வீடுன்னா.. 555 சிகரெட்.. ஆடம்பர செலவுகள்ன்னு .. இருக்கும்றத மாத்தி .. எங்க வீட்டுல செகரெட் ஆஷ்ட்ரே கூட இருக்காது.. படிக்கிற காலத்துல
5 ஸ்டார் ஓட்டல் கூட போனதில்ல... கல்லூரி காலம் வரை அப்பா அம்மா ரூம்லேயே தூங்குனோம்... மிச்ச எல்லா சினிமாகாரங்க வீட்டுல கெடக்காத விட எங்க 

வீட்டுல பாசம் கொஞ்சம் ஜாஸ்தியாவே கெடச்சுதுண்ணு அடிச்சு சொல்லுவேன் ...”


செரி இப்பிடி இருக்குற சிவக்குமார்.. சூர்யாவ ஏன் குடிக்க சொன்னார்.. ஒரு முறை பிஸினஸ் கிளாஸ் பயணம்.. மலேசியாவிற்க்கு.. கிரிஸ்டல் கிளியர் மினரல் 

வாட்டர எல்லாருக்கும் குடுத்துட்டுப் போனாங்க...
 “பச்ச தண்ணி தர்றதுல ஏன் இவ்ளோ கஞ்சத்தனம்?”ன்னு சூர்யாம் கேட்க.. 
சிவகுமாரோ.. விமான 
பணிப்பெண்ணை கூப்பிட்டு அந்த வாட்டரை வாங்கிக் குடுத்து “குடி” என்றாராம்.. அதை ஒரு வாய் குடித்டதும் .. சுரீர்ன்னு நாக்குலபட்டு.. குடலே வெளில வர்ற 

மாதிரி ஒரு உணர்வு .. “இது என்னாதுபா ??”

“இதுதாம்பா வோட்கா .. மனுஷன் சந்தோஷம்னாலும் துக்கம்னாலும் இதுலதாம்பா விழுறான்.” அப்படீன்னு சொன்னாராம்...

குடியோட நன்மை தீமைகள விளக்கி சொல்லி இருந்தா ஒருவேள அவர் மாறிப் போயிருக்கலாம்... ஆனா.. அந்த சம்பவம் தந்த அருவெறுப்பு.. இன்னைக்கும் 

அவருக்குள்ள... ( இது எல்லாருக்கும் ஒர்க் அவுட் ஆகுமா ??? )

அடுத்த பதிவு .. சூர்யா--ஜோ காதல் பற்றி...(ஐய்ய்.. ஓட்டுங்க.. அப்போதான் சொல்லுவேன்.. பின்னூட்டத்துல ஓட்டு ஓட்டுனு ஓட்டிடாதீங்கப்பா !!)

April 29, 2009

டி.வி. பெட்டி


பின்னூட்டங்களுக்கு முன்னூட்டம்

(லோகு சொன்னதுக்கு அப்புறம் தான் நானும் யோசிச்சேன் .. i was thinking... ஒருத்தர் பேரு சொல்லி ஒருத்தர் பேர  சொல்லாம விட்டுட்டா என்ன பண்றதுன்னு..
அதான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்...  நான் அடுத்த பதிவு போடுறதுக்குள்ள பின்னூட்டம் போடுறவங்களுக்கு இங்க நன்றி.. இல்லாட்டி அங்க நன்றி.. )

நன்றிகள் பல..

டி.வி. பெட்டி
காசத் தவிர கைல வேறெதும் இல்ல--  சன் டிவி...
காப்பியடிச்சு பழக்கமில்ல --  விஜய் டி.வி ...
காக்கா புடிப்பதே முழுநேர வேல -- ராஜ்டி.வி 
காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவுப்பு -- வஸந்த் டி.வி..

கேவலமான தொகுப்பாளர்கள் -- சன் மியூஸிக்
கேட்பாறற்ற தொகுப்பாளர்கள் -- ராஜ் மியூஸிக்
கேட்வாக் தொகுப்பாளர்கள் --    எஸ்.எஸ். மியூஸிக்


ஜெயா டி.வி. அம்மாவின் ஒரே அஸ்திரம்
ஜெயா பிளஸ் ஜெயா சானல் என்னும் சட்டைக்கு - அங்கவஸ்திரம்

சன் நியூஸ பாத்தா ஒரே கண்ணுவலி...
வயித்துவலிய தவிர மிச்ச எல்லாத்தயும் தருது -- சிரிப்பொலி 

கலைஞர் டி.வி.ன்றது ஒரு காமெடி பீஸு....
சுட்டி டி.வி. வெளிநாட்டு இங்கிலிபீஸ் சானல்களின் மவுத் பீஸூ..
செரி ஆதித்யா ???அடப்போங்க பாஸூ .....

யாரும்  மதிக்காத ஒரு மண்ணுதான்  --ராஜ் டிஜிட்டல்
யப்பா ....மக்கள் தொலைக்காட்சி --ஒரு தமிழ்மிரட்டல்

பெயரத்தவிர வேற எதுவுமில்ல -- தமிழன் டி.வி..
டி.வி.யே பாத்துறுக்குமான்னு தெரியல -- விண்டி.வி ...

இத்தன இருக்குது டி.வி. பொட்டிகுள்ளப்பா...
இன்னும் ஜீ தமிழ் ஏ.எம்.என் இது கூட சானல்தாம்பா


மக்களே தமிழ்நாட்டுல இவ்ளூண்டு சானல்தானப்பா ரிப்பீட்டு ---
மவனே எல்லாச் சானலையும் கலாய்ச்சாச்சு -- அப்பீட்டு ...
ஸோ நான் அப்பீட்டு ....

"இதை மட்டும் வக்கனயா பேசு !!! “ டைரக்டரிடம் திட்டு வாங்கிய சூர்யா




பின்னூட்டத்திற்க்கு என் முன்னூட்டம் ... 

(ஒவ்வொரு பதிவிலும் நான் பதிவிட்ட உடனேயே அதை இடித்தும் ... அடித்தும் . தட்டியும் .. இன்னும் என்னஎன்னவோ செய்யும் நண்பர்களுக்கு பின்னூட்டப்பெட்டியில் மட்டுமே நன்றி சொன்னால்.. பாக்குறாங்களோ என்னவோன்னு ஒரு எண்ணம்.. அதான் இந்த முன்னூட்டக் கலாச்சாரம் .. என்னை ஊக்கப்படுத்திய அவங்களையும் போய் படிங்க.. ஹலோ,, இந்தப் பதிவ படிச்சுட்டுப் போங்க.....) 

நன்றிகள் பல......

 நான் ரொம்பவும் எதிர்பார்த்த தமிழ்நெஞ்சம்,  டாக்டர் sureஷ்  வராதது வருத்தமே.

சரவணன் முதல் சூர்யா வரை --1

சூர்யாவின் இன்றைய அடையாளங்கள்.. சிக்ஸ் பேக்ச் பாடி , துறுதுறு இளைஞர், என்ன கேரக்டர் குடுத்தாலும் செய்வாம்பா...வசீகர சிரிப்பு ... டான்ஸ் கூட முன்னேற்றம்.. ஃபைட்டெல்லாம் கூட அட்டகாசம்... ஸ்கிரீன்ல மூஞ்சிய காமிச்சமாதிரியே அழுவுறாம்பா... இன்னும் சில வருஷத்துல கமலோட இடம் இவருக்குதாம்பா...

ஆனால்...

சூர்யா.. சரவணனாக எக்ஸ்போர்ட்டில் வேலை செய்து கொண்டிடுருந்த போது... அவரின்  அடையாளங்கள்... எட்டு முன் பற்களில் கிளிப் போட்டுக்கொண்டு இருந்ததால் தைரியமாக சிரிக்கக் கூட முடியாது (வசீகர சிரிப்பு..??) .. எந்த வேல குடுத்தாலும் ஊத்திக்குதேன்னு ஒரு எண்ணம் ... துவண்டு ஒடுங்கிய தோள்களோடு ஊட்டச்சத்து கிடைக்காமல்வளர்ந்த குழந்தை போல உடல்வாகு (சிக்ஸ் பேக் ..??) 

எப்படி இருந்த சூர்யா இப்படி ஆகியது எப்படி ???????? அதற்கு காரணம் என்ன ?? 
அவமானங்கள்.. வலிகள்.. காயங்கள்... அப்படி நேர்ந்த ஒரு அவமானம்தான் இன்று நாம் பார்க்கப் போவது ...

நேருக்கு நேர் டூயட் ஷூட்டிங்கிற்காக .... கொல்கத்தா பயணம்.. ‘எங்கெங்கே’ பாடல் .. டான்ஸ் என்றாலே வேப்பங்காய்....நண்பர்கள் முன்னால் கூட ஆடி இராத சூர்யாவை ஆட சொன்னார்கள்.. அதுவும் சிம்ரன் மாதிரி ஒரு பெண் முன்னால்.. சிம்ரனோ “நிறுத்து”ன்னு சொன்னாலும் ஆடிட்டே இருந்தாங்க.. (அவங்களுக்கு தமிழ் தெரியாதுப்பா.. )
ஒரு வழியாக ஓடி ஓடி ஷூட்டிங்கை முடித்தார்கள்.. பாதி பாடல் முடித்தாகி விட்டது...

அன்று இரவு ஏழு மணி வாக்கில்... கல்கத்தாபிரியாணி என்றொரு அய்ட்டம் (சாப்புடுறதுதாங்க,..) சூர்யாவோ வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தாராம்.. (பாவம் .. ஆ(ஓ)டி  கலைச்சுறுப்பாருல்ல..) அங்க வந்த டைரக்டர் வஸந்திடம்.. நேரம் தெரியாமல்.. “ஸார்.. கல்கத்த பிரியாணி சூப்பர்..” என்னு சொல்ல.. “இதை மட்டும் வக்கனையா பேசு .. பர்ஃபாமென்ஸுல கோட்ட விட்டுறு “ னு எல்லார் முன்னாடியும் கத்திட்டார்...

சூர்யாவுகோ.. அங்க இருப்பதா ?? இல்லாட்டி பறந்து போவதா எனத்தெரியவில்லை... அன்னைக்கி நைட் ரூம்ல அழுதாராம்... ”ஏண்டா நடிக்க வந்தோம்னு” நெனச்சு...பின் அவர் நடனப் பயிற்சி எடுத்து ... ஹ்ம்ம்ம்ம்.. கலக்குறார்.. (ஏத்தி ஏத்தி பாடல் இன்றைய தேதியில் அவரின் சிறந்த நடனம் என்று சொல்லலாம்... )

இப்படிக்கு சூர்யா (அல்லயன்ச் பதிப்பகம்) புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு.. என் வழியில் விவரிக்கப்பட்டுள்ளது ...

டிஸ்கி:-

புடிச்சுருந்தா சொல்லுங்க .. தொடரலாம் .. (சிவகுமாரே சூர்யாவை குடிக்க வைத்த கதை தெரியுமா ??? ஐய்ய்ய்.. ஓட்டுப் போடுங்க.. அப்போதான் சொல்லுவேன்..)

April 28, 2009

ஒ(இ)ரு ??? கதை-- உதர்வு



(உதர்வுன்னு ஒரு வார்த்த இருக்கா??? ஏதோ தோனுச்சு வெச்சுட்டேன் .. கதை ஸ்டார்ட்.. கேமரா .. ஆக்‌ஷன்...)

”இது உங்களுக்கு புரியாதுங்க... “ சொன்னான் அவன் ...

“ஏன் ..??” -- அவள்

“மனசுல இருக்குறத அப்பிடியே சொல்லனுமா ??? “ தொடர்ந்தான் அவன் 

“கண்டிப்பா.. “ -- அவள்

“எங்க நீங்க என்னை வேணாம்னு சொல்லிடுவீங்களோன்னுதான் நான் பொய் சொன்னேன் ...” -- தலை குனிந்தான் 

“இத ஏங்க பொய்ன்னு சொல்றீங்க ?? குதிரையேறத் தெரியனும்.. பாட்டுப் பாடத் தெரியனும்.. இதெல்லாம் இந்தக் கதையோட நாயகன் கண்டிப்பா பண்ணி ஆகனும்.. நீங்களும் கண்டிப்பா
 பண்ணாலாம்... ஆறு மாசம் இருக்கு ஷூட்டிங் போக... ஆரஅமர கத்துக்கோங்க.. “ --பகர்ந்தாள் படத்தின் டைரக்டரான அவள்...

“நீங்க தேடுறா ஆள் கண்டிப்பா நான் இல்லீங்க... எனக்கு வாழ்க்கை குடுக்கணும்னு நீங்க உங்க வாழ்க்கைய தொடக்கத்துலேயெ முடிச்சுராதீங்க... “ -- நடக்கலானான்

“இதுதான் உங்க முடிவுனா ...எனக்கும் இந்தப் படம் வேணாம்... “ -- தயாரிப்பாளருக்கு ஃபோன் போட்டாள்..

நடக்க ஆரம்பித்த அவனோ திரும்பி பார்க்கவே இல்லை.. சின்ன வயசுலேர்ந்து நெனச்சது கெடக்கலயேன்னு நெனச்சுக்கிட்டே நடந்தவனுக்கு வழித்துணையாய் அவனது விழிநீர் மட்டும்  ...

“ஸார் .. நான் இந்தப் படம் பண்ணல... ” ஃபோனைக் கட் பண்ணினாள்...

இது இல்லாட்டி இன்னோன்னு நெனச்சுகிறதா  ??? -- இல்ல 
இது இல்லாட்டி மண்ணோடுன்னு நெனச்சுகிறதா ???
அவன் குழப்பத்தில்.......

பின் குறிப்பு :-

வலையுலகிற்கு வந்தது முதல் .. எது செய்தாலும் என்னுடைய வழியில் புதியதாக செய்யனும்னு நெனக்கிறதோட இன்னொரு வெளிப்பாடுதான் இந்தக் கதை... 
ரெண்டு வெவ்வேறு காட்சிகளை ஒரே கதையில சொல்ல முயற்சி பண்ணி இருக்கேங்க....

காட்சி 1 --> ஒரு நடிகன் தன்னால் இயக்குனரின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாதுன்னு வந்த வாய்ப்பை உதர்தல்...

காட்சி 2---> ஒரு காதலன் தன் காதலியை உதர்தல்  (மஞ்சளில் இருக்கும் வரிகளை மட்டும் படிக்க .....)

முதல் முயற்சி .. நல்லா இல்லாட்டி கண்டிப்பா சொல்லிட்டுப் போங்க.. அடுத்த முற பிரிஞ்சு மேஞ்சுறுவோம் ...

நல்லா இருந்தா ஒட்ட குத்திட்டுப் போங்க ...அடுத்த முற இதேமாதிரி மேஞ்சு பிரிச்சுறுவோம்....


April 26, 2009

விஜய் டி.வி.யில் ராத்திரி ஒரு மணிக்கு



என்னத்த சொல்றது...?? ஒரு ஒருவாரம் முன்னாடி தூக்கம் வரல.. செரி டி.வி. பாக்கலாம்னு போட்டா.. ஆதித்யால வழக்கம் போல கவுண்டம்ணி செந்திலை அடிக்கும் காமெடியை 
போட்டுக்கொண்டிருந்தனர்.. என்னாத்த பண்றதுன்னு .. சிரிப்பொலி பக்கம் போனா.. அங்க பாட்டு ஓடிட்டு இருக்கு, (இது 24 மணிநேர சிரிப்பு சானல் இல்லியோ????
(மிட்நைட் மாசாலா மாதிரி மேட்டர தேடி வந்து இருந்தா இப்போவே ஓட்டுப் போட்டுட்டு போயிடுங்க.. :-)  )

விஜய் டி.வி. பக்கம் போனா பதிவுக்கான மேட்டர் மாட்டியது.. ஒருத்தர் நேமாலஜி பத்தி சொல்லிக்கிட்டு இருந்தார்... ;இத பத்தி என்னடா எழுதுறது.. எல்லா இடத்துலயும் 
நடக்குறதுதானேன்னு விட்டுட்டேன்... ( அவர் அமெரிக்காவுல நேமாலஜி படிச்சவராம்.. இந்த அன்பரை பாராட்டி பேச வந்த (சங்கர்)கணேஷ் அவர்களின் பேச்சை போடாமலேயே இருந்துருக்கலாம்.. 
(”நான் 1006 படங்களுக்கு இசையமைச்சு இருக்கேன்,,, எல்லா நடிகைகளோடும் டூயட் பாடி இருக்கேன்.. அதனால நீங்க இவர்கிட்ட வந்து பேர மாத்திக்கங்க...”) இந்தமாதிரி
அவ்ளோ சொதப்பல்...)  அடுத்து வந்த நிகழ்ச்சிதான் கண்ணுல இருந்த கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் காலி பண்ணிடுச்சு...

“சிதம்பர ரகசியம்”ன்னு சொல்லுவாங்கள்ல... அந்த ரகசியம் ஒருத்தருக்கு தெரியுமாம்... ஸாஃப்ட்வேர் சித்த வைத்தியர் என்று பெயர் வேறு... 
கோட்டு போட்டு,.. ஐ.டி.கார்டு மாட்டிக்கிட்டு அவர் பேசியது அலம்பலின் உச்சம்... “சித்தர்களின் சிதம்பர ரகசியம் அவருக்குத் தெரியுமாம்.. ஆனா அதை 
சொல்ல மாட்டாராம் (என்னங்கடா.. விசயாகாந்த்தோட தேர்தல் அறிக்கையை போல பெரிய மேட்டரோ ??) அதை அப்படியே தரவும் முடியாதாம்.. 
மருந்து வழியா தர வழியில்லாததால்,,,  அத ஒரு சிப்ல போட்டுட்டாங்களாம்... அந்த எலக்ட்ரானிக் சிப்ல இந்த சிதம்பர ரகசிய மேட்டர்  உள்ள ஸாஃப்ட்வேர 
லோட் பண்ணிட்டாங்களாம்..  அந்த ஸாஃப்ட்வேர் இருக்குற எல்லா வியாதியையும் குணமாக்கிடுமாம்.(வைரஸ் மட்டும்தான் குணமாகுமா?? அப்போ பாக்டீரியா என்ன ஆகும்ன்னு  கேக்கக் கூடாது...)

அவங்களோட சைட் அட்ரஸ் போட்டாங்க.. நோட் பண்ண மறந்துட்டேன்.. அடுத்த முறை பாத்ததும் இங்க போட்டுட்றேன்..  நேமாலஜி,இந்த-ஆலஜி,அந்த-ஆலஜி,....
இப்படி எவ்ளவோ இருந்தாலும் .. (நான் அதை நம்பாட்டியும்..) அடுத்தவங்க நம்பிக்கையை கேலி பண்ணக் கூடாதுன்னு அத பத்தி பேசக் கூட மாட்டேன்.. ஆனா இதயெல்லாம் நம்புறதா??
இப்படி ஏமாத்துனா?????????

அடப்போங்கடா... இதப்பத்தி யோசிசா அப்புறம் எப்படி தூங்குறது...????????

உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க.. புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க..
நீங்க படிச்சா மட்டும் போதும்..நீங்க படிச்சா மட்டும் போதும்..
       

April 09, 2009

கமல் படத்திலிருந்து நீக்கப்பட்ட பாடல்..-- ப்ரத்யேகமாக.. உங்களுக்காக




அபூர்வ சகோதரர்கள் படம் கமல் அவர்களின் கதை,திரைக்கதையில் வெளிவந்த படம்.. இந்தப் படத்தின் கரு அவருக்கு தோன்றிவிட்டாலும்.. அதை எப்படி எடுப்பது என்பதில் ஒரு குழப்பம்...

இந்த வீடியோ.. முதலில் ஷூட் செய்யப் பட்டது.. இதில் காந்திமதி இவரின் தாயாகவும் ,ஜனகராஜ் குடிகாரராகவும்,சின்னி ஜெயந்த் கமலின் நண்பர்களில் ஒருவராகவும் வருவர்.. இதில் எதுவுமே ஒரிஜினலில் இருக்காது.. எல்லாத்தையும் கமல் மாற்றியிருப்பார்....மனோரமா அவரின் தாயாகவும்.. ஜனகராஜ் போலிசாகவும் (”நீங்க எங்கயோ போய்ட்டீங்க தெய்வமே...)வருவர்.. சின்னி படத்திலேயே இருக்க மாட்டார்...

 படம் ரிலீசான சமயத்தில் இடைவேளையின் போது இந்தக் காட்சிகள் போடப்பட்டதாக சொல்றாங்க.. (தெரிஞ்சவங்க கரெக்டான்னு சொல்லுங்க!!!)
ஏற்கனவே பார்த்தவங்களுக்கு இது பழசா இருந்தாலும்.. என் வயதொத்தவர்களுக்கு இது புதியதாய் இருக்கும்னு நம்புறேன்.

உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க.. புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க..
நீங்க படிச்சா மட்டும் போதும்..நீங்க படிச்சா மட்டும் போதும்..
       

April 08, 2009

அயன் - லாப நஷ்ட கணக்கு!!






மேட்டர்----------------------------------ரூ
சூர்யாவிற்க்கு - - - ----------------------10
படத்தில் தெரியும் ரிச்னஸிற்க்கு-----10
புது ஐடியாக்களுக்கு --------------------15
கதைக் களத்திற்க்கு--------------------10
-----------------------------------------------------------------------
மொத்தம்---------------------------------45
-----------------------------------------------------------------------
 
                                  படம் பார்க்க நான் செலவளிச்சது  ரூ50... கணக்கு பார்த்தா லைட்டா நஷ்டம் மாதிரித்தான் தெரியுது.. நஷ்டம் கொஞ்சம்தாங்கோ.. அதுக்காக ரொம்ப மொக்கையோன்னு நெனச்சுக்காதீங்க...

இந்த மாதிரி விமர்சனங்களில் படத்தின் கதையை  சொல்வது எனக்குப் பிடிக்காது.. நான் போட்ட காசுக்கு படம் என்ன எந்த அளவுக்கு திருப்தி படுத்தி இருக்குன்னு பார்ப்பேன்..

சூர்யா.. சிக்ஸ் பாக் உடம்பென்ன.. ஏர்போட்டில் பீட்டர் விடுவதும்.. வெளியில் வந்ததும் “அய்யே”ன்னு கலாய்ப்பதும்-- ஒரிஜினல் “அயன்”ஆக நிற்கிறார்...

தமன்ணா..தியேட்டரில்  ஜொள்ளு விட உதவினாலும்.. நடிப்புன்றது சுத்தமா வரல.. அவருடைய கோபம் காதல்.. எல்லாமே படு செயற்கை...

நண்டு இனிமே ஒரு ரவுண்டு வருவார்... (இவருக்குள்ள என்னமோஇருந்துருக்கு பாரேன்.!!)பிரபுவும் சூப்பர்..

ஏதோ ஷங்கர் படத்துக்கு வந்த ஒரு ஃபிலிங்.. அவ்ளோ ரிச்னஸ் படத்துல.. பல நாடுகளுக்கு பயணம் செய்தாலும் கதையோட போவதால நம்மால் ரசிக்கமுடிகிறது..

என்னைப் போன்ற அரைவேக்காடுகளே கவனிக்கும் வண்ணம் ஒளிப்பதிவும்..ஆடை வடிவமைப்பும்..(நளினி ஸ்ரீராமா???)சண்டைப் பயிற்சியும் உள்ளது..(அந்த ஆப்பிரிக்கா சண்டை.. யப்பா.. சூப்பர்..)

ஏன் நஷ்டம்??

ஆங்.. இப்போதான் நியபகம் வருது.. ஏன் எனக்கு நஷ்டம்ன்னு...

1-->படத்தில் பல இடங்களில் ஒரு யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது...  பிரச்சனை காண்பிக்கப்படும்.. அடுத்த சீன்ல பிரச்சனை முடிந்துவிடும்.. இதுக்கு அப்புறம் ஏன்னு சொல்லுவாங்க... உதாரணமா.. சூர்யா ஏர்போர்ட்ல மாட்டிப்போறாறுன்னு நாம நெனக்கும்போது.. அசால்டா வெளில வந்துருவார்.. இதுக்கு அப்புறம்..அவர் எப்பிடி தப்பித்தாருன்னு சொல்லுவங்க... முதலில் இது பிடித்திருந்தாலும்.. 
படம் முழுக்க இந்த யுக்தி.. வில்லன், ஹீரோ இருக்கும் வேனை கொளுத்திவிட.. சூர்யா உயிருடன் அடுத்த சீனில்.. எப்பிடின்னு அதுக்கு அடுத்து காண்பிப்பாங்க.... இதே முறை.. கிளைமாக்ஸ் வரை.. யப்பா.. முடியலடா சாமி...

2-->இரண்டாவது காரணம்., படம் முழுதும் யூஸ் பண்ணப்பட்டுள்ள சுஜாதாதனமான ஐடியாஸ்.. முதலில் நல்லா இருந்தாலும்.. சும்மா.. நடக்குறதுகெல்லாம் காரணம் சொல்லிக்கிட்டு இருந்தா கடுப்பா இருக்காதா??? விட்டா... இந்த சீன்ல ஏன் இந்த ஜீன்ஸ் போட்டு வந்தேன்னு காரணம் சொல்லுவாங்க போல...

3-->மூனாவது காரணம்.. அய்யோ அந்த வில்லன்.. பொதுவா ஒரு வில்லன் என்பவர்.. எரிச்சல் ஏற்படுத்த வேண்டும். .. ஸ்கிரீன்ல பார்த்தாலே.. ஏண்டா வர்றாருன்னு தோனணும்... இந்தப் படத்துல வர்ற வில்லனைப் பார்த்தாலும் அப்பிடி தோனுது.. ஆனா ஒரு வித்தியாசம்.. மத்த படத்துல வில்லன் ஹீரோக்கு செய்யும் கொடுமைய பாத்து புடிக்காது.. ஆனா இந்தப் படத்துல இவருடைய ஓவர் ஆக்‌ஷனும்... ‘கோலங்கள்’ ஆதி டைப் டப்பிங் வாய்ஸும்.. கொடுமையின் உச்சம்டா சாமி.. 

;;;ஒரு சாரி;;;;
        நேத்து போட்ட பதிவுல கலெர் மாத்த முடியல.. ஆனா அதையும் பொருட்படுத்தாம படிச்சு பின்னூட்டம் போட்டவங்களுக்கு நன்றி.. முக்கியமா ராகவன் நைஜிரியா அண்ணனுக்கு... இந்தப் படத்தில் தேரும் ‘விழி மூடி’ பாடலை இந்த நல்ல உள்ளங்களுக்கு டெடிக்கேட் செய்கிறேன்... (இப்போலாம் டெடிக்கேட் செய்றதுதாங்கோ பேசன்... :-))


உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க... புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க..
நீங்க படிச்சா மட்டும் போதும்......நீங்க படிச்சா மட்டும் போதும்....

April 07, 2009

உங்க ஊர்க்காரன் என்னும் பதிவருக்கு என் பகிரங்க பதில்...

என்னுடைய முந்தைய பதிவிற்க்கு.. உங்க ஊர்க்காரன் என்னும் பதிவர் பின்னூட்டம் இட்டிருந்தார்.. அவருக்கான பதிலை ஒரு பத்தியில் அடக்க முடியவில்லை.. அதான்...
(முந்தைய பதிவு இங்கே..)
முதலில் அவரின் பின்னூட்டம்...

///
Blogger markkandan unga oorkaran said...

நாங்களும்தான் B.E. படிச்சோம் 
நாங்கள்தான் project செஞ்சோம், ஏதோ எங்க அறிவுக்கு எட்டுன அளவு செஞ்சோம் 
ஆனா வாங்கிட்டு வந்து வச்சவனுங்க அதிக மார்க்கு வாங்கிட்டாங்க 
இருந்தாலும் எங்களுக்கு இருந்த confidence ரிவயு போகும்போது யாருக்கும் இல்ல 
எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வோம் 

முதல்ல அடுத்தவங்கள மாற சொல்றத விட்டுட்டு நாம மாறனும் 
நம்ம ப்ரொஜெக்ட நாம்தான் செய்யணும்கிற எண்ணம் வேணும் 
நாம போயி கேட்டா தான center காரனுங்களுக்கு இந்த திமிர் வருது 

ஏன் உங்களுக்கு மூணு வருஷம் வரைக்கும் தெரியவே தெரியாதா?
நீங்க நாலாம் வருஷம் ப்ராஜெக்ட் பண்ணனும்னு உங்க senoirs ஒவ்வொரு வருஷமும் பண்ணிட்டுதான இருப்பாங்க 
சும்மா கத விடாதீங்க///


அண்ணே.. பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி தயவு செய்து பதிவ முழுசா படிங்க.. நீங்க என்னுடய பதிவ முழுசா படிச்சீங்களாங்கன்னு தெரியல...


//நம்ம ப்ரொஜெக்ட நாம்தான் செய்யணும்கிற எண்ணம் வேணும் //

யார்க்குஅண்ணே இல்ல அந்த எண்ணம்?? எல்லார்க்கும் இருக்கு..அட்டாச்மெண்டோட மெயில் அனுப்பனும்.. அத ஃபோன் மூலமா அனுப்பனும்.. எந்த ஃபோன இருந்தாலும் பரவாயில்ல.. மெயில் போகனும்.. அதுதான் என் ஆச.. இதுக்கு பேஸ் பேப்ப இல்லன்ற ஒரே காரணதால ரிஜெக்ட் பண்ணாங்க.. 


//நாம போயி கேட்டா தான center காரனுங்களுக்கு இந்த திமிர் வருது //

ஆமா.. ஒத்துக்குறோம்.. கேட்டாத்தான் இந்தத் திமிர் வருது.. கேக்காம எப்பிடி பண்றதுன்ற கேள்வியும் வருதே... IEEE பேப்பர் படிச்சு புரிஞ்சுக்க முடியுமா?? ஒரு சராசரி மாணவனால்...??? நமக்கு தோன்றத சொன்னாலும் ரிஜெக்ட் பண்றாங்க.. அப்போ என்ன தான் பண்ண முடியும்??? போய்தான் கேட்டாகனும்...


//ஏதோ எங்க அறிவுக்கு எட்டுன அளவு செஞ்சோம் 

ஆனா வாங்கிட்டு வந்து வச்சவனுங்க அதிக மார்க்கு வாங்கிட்டாங்க 

இருந்தாலும் எங்களுக்கு இருந்த confidence ரிவயு போகும்போது யாருக்கும் இல்ல 
எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வோம் //
நாங்களுந்தான் அண்ணே,.. நீங்க எப்பிடியோ எனக்குத் தெரியாது.. ஆனா.. நாங்க ப்ராஜெக்ட் செண்டர் போய்.. வேலக்கி ஆகாம.. பிப்ரவரில எங்க ப்ராஜெக்ட் செய்ய ஆரம்பிச்சு.. மார்ச்ல முடிச்சோம்.... இந்த மொத்த பதிவும்.. என்னுடைய மற்றும் என் பல கல்லூரி நண்பர்களின் அனுபவம் அண்ணே!!!
நீங்க சொல்றது உண்ம.. நாமளா பண்ணா ரிவ்யூல தெம்பா இருக்கலாம்.. எனக்கு புரியுது.. ஆனா.. எல்லாருக்கும் நாமாளா பண்ற வாய்ப்ப இப்போ உள்ள முறை தரலைங்கிறது என் கருத்து.. பொதிகழுதைத்தனத்தைதான் வளர்க்கிறார்கள்..
//ஏன் உங்களுக்கு மூணு வருஷம் வரைக்கும் தெரியவே தெரியாதா?நீங்க நாலாம் வருஷம் ப்ராஜெக்ட் பண்ணனும்னு உங்க senoirs ஒவ்வொரு வருஷமும் பண்ணிட்டுதான இருப்பாங்க //
தெரியும்.. ஆனா நாங்க நெனச்சு வெச்சு இருக்குறத செய்ய முடியாதுங்கிறுதும்.. அதுக்கு காலேஜ்ல நெறய தட (IEEE.. etc etc ) போடுவாங்கன்றதும் எந்த சீனியரும் சொல்ல மாட்டான்... நான் என் பதிவில் சொன்னது போல் தெளிவாக ஒரு விளக்கம் கண்டிப்பா கெடைக்காதுங்கண்ணே!! அதனாலதான் வருஷத்துக்கு வருஷம் இந்தக் கூட்டம் அதிகமாய்ட்டே  போகுது...

//சும்மா கத விடாதீங்க///

மனசுலேர்ந்து சொல்லி இருக்கேண்ணே!!! பெத்தவங்க காசு வருஷா வருஷம் வீணப்போகுது... இந்த மார்க்கெட்ல வருஷம் மொத்தமா லட்சக்கணக்குல வருமானம்.. இது ஏமாத்து வேல.. அதனால இந்தப் பணமும் கெட்ட பணம்றது என் கருத்து அண்ணே!!!


அண்ணா பல்கலைக்கழகமே... “ஆமா.. மாணவர்கள் வெளியில்தான் ப்ராஜெக்ட் செய்கிறார்கள்.. அதன் மூலம் பணம் வீணாகப் போகிறதென்பதும் தெரியும்.. ஆனா,,, செய்வதற்கொன்றும் இல்லை.. “ (ஹிந்து பத்திரிக்கையில் வந்தது..) அப்படீன்னு சொல்லி இருக்கு...


ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட் பிரிவில் ஆர்வம் இருக்கும் மாணவர்கள் அதை செய்யட்டும்... ஆனா.. எல்லோரும் செய்யனும்னு சொல்றது தப்பில்லயா?? ஆமா. பணம் வீணாகப் போவது தெரியும்.. இருந்தாலும் வேற வழி இல்லன்னுசொல்றது செரியா அண்ணே??? sarathy அண்ணன் பின்னூட்டமெல்லாம் மனசுலேர்ந்து வந்தது... படிச்சுப் பாஅருங்க.. அதான் முக்கால்வாசி பேரின் நிலைமை..


//நாங்களும்தான் B.E. படிச்சோம் 

நாங்கள்தான் project செஞ்சோம்//
அண்ணே.. நீங்க படிச்சீங்க.. ஆனா.. நான் இப்போ கூட காலேக்கு போய்ட்டு வந்துட்டுதான் இந்தப் பதிவ எழுதுறேன்... வித்தியாசத்த உணருங்க..
முடிவா..... :-
                ”உங்க ஊர்க்காரன்” அண்ணே... நான் இந்தப் பதிவ போட்டதே இந்த விஷயத்த அலசனும்ற காரணத்துனாலதான்.. நமக்குள்ள பிரச்சனன்னு கெளப்பி விட்டுற போறாங்கண்ணே!! அடிக்கடி கட பக்கம் வாங்க..(நாளக்கி அயன் விமர்சனம் ..) நானும் வர்றேன்..

April 06, 2009

ஃபைனல் இயர் புராஜக்டும்.. இஞ்ஜினியரிங் பொதிகழுதைகளும்...

குறிப்பு சட்டகம்
1.முன்னுரை
2.ஃபைனல் இயர் புராஜக்டுனா இன்னா???
3.எப்படி செய்ய வேண்டும்??
4.என்னதான் நடக்குது??
5.என்ன தீர்வு???
6.முடிவுரை..

1.முன்னுரை:-

                      சமூகத்திற்க்கு   ஏதாவது பயனுள்ள தகவலை சொல்ல வேண்டும் .. என் கோவத்தை பதிவு செய்ய வேண்டுமென்று ஒரு ஆசை.. அதான் எனக்கு தெரிஞ்ச ஏரியால இறங்கிட்டேன்.. (ஆங்கிலம் தவிர்க்க முடியாதது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க)

2.ஃபைனல் இயர் புராஜக்டுனா இன்னா???

                            ஏழு செமஸ்டர் படிச்சு முட்டுப்புட்டு.. வெளியவரப்போற ஒவ்வொரு இஞ்ஜினியரும் தனியாவோ.. அல்லது குழுவாகவோ(2 ,3அல்லது4 நபர்கள் வரை )சேர்ந்து அவர்களுக்கு புடிச்ச பிரிவில் புராஜக்ட் செய்து காமிக்க வேண்டும் என்பது வழக்கம்.. அதுக்கு 200 மார்க் இருக்கு..

3.எப்படி செய்ய வேண்டும்??
                              தங்களுக்கு புடிச்ச பிரிவில்.. தெரிஞ்ச டெக்னாலஜியில் ( கம்யூட்டர் பிரிவு என்றால் .நெட் அல்லது ஜாவா..) தாங்கள் நினைத்ததை புராஜக்ட்டாக செய்து காட்ட வேண்டும்..  எந்தப் பிரிவில் புராஜக்ட் செய்கிறோமோ அந்தப் பிரிவிலேயே தங்கள் வேலையையும் தேடிக்கொள்ளலாம்.. புடிச்ச பிரிவுல புராஜக்ட் பண்ணி.. அதே துறையில வேலக்கி போனா.. கொஞ்சமாவது வேலைக்கி ஆவற மாதிரி வேல பாக்கலாம்... கரெக்ட் தானே??? ஆனா என்ன நடக்குதுன்னு பாருங்க...


4.என்னதான் நடக்குது??

                                  மூனு வருஷமா புராஜக்ட் பத்தி பேசாத நம்ம லெக்சரர்ஸ் எல்லாம் புதுசா புராஜக்ட்னு ஒன்ன பத்தி சொல்லுவாங்க...செரின்னு நாமளும் .. நம்ம கனவ புராஜக்டா செய்யலாம்னு இறங்கிடுவோம்.. (உதாரணமா.. ஆர்குட்கு போட்டியா ஒரு வெப் சைட்.. பிளக்கருக்கு போட்டியா ஒரு புது கான்செப்ட்... ஒரு புது வகையான எலக்ட்ரானிக் சிப்...  மற்றும் பல பல பல... கனவுகளுக்கு ஏது எல்லை??) ஆனா .. 

இங்க இறங்கும் முதல் இடி..

 IEEE பேப்பர்ஸ் வெச்சுதான் புராஜக்ட் பண்ணனும்னு சொல்லுவாங்க... செரி அதுக்கும் ஓகேன்னு மண்டையாட்டிட்டு.. அதுக்கப்புறம் IEEE பேப்பர்ஸ்னா என்னன்னு நாமளும் தெரிஞ்சுப்போம்... 

அங்க இறங்கும் இடி நம்பர் இரண்டு.. 

IEEE பேப்பர்ஸ் என்பது.. இப்போ.. நம்முடைய துறையில ஒரு பிரச்சைனை இருக்குன்னா.. அத எப்பெடி செரி செய்யுறதுன்னு நாலுஅறிவாளிங்க யோசன சொல்லி இருப்பாங்க... செரிடா.. யோசன தானேன்னு.. படிச்சு புரிஞ்சுக்கலாம்னா... 

இடி நம்பர் த்ரீ வில் ப் வய்ட்டிங் ஃபார்யூ ... 

அந்த பேப்ப்ர்ஸ நாம தனியா எடுத்து படிக்க முடியாது.. அதுக்கு கொஞ்சம் பணம் கட்டி யார் உறுப்பின ஆகுறாங்களோ அவங்க மட்டும் தான் படிக்க முடியும்.. பல காலேஜ் .. அவங்களே உறுப்பினார் ஆகி இருப்பாங்க.. நாம காலேஜ்ல இருந்தே அந்த பேப்பர்ஸ் தேடலாம்.. ஆனா எங்க காலேஜ் மாதிரி கெத்து காலேஜ்ல படிச்சா.. அதுவும் கெடயாது.. நீங்களே பாத்துக்கங்கன்னு சொல்லிடுவாங்க...
கஷ்டப்பட்டு பேப்ப்ரும் எடுத்துட்டா.. 

இடி நம்பர் ஃபோர்..

கண்டிப்பா ஒரு சராசரி மாணவனால படிச்சு புரிஞ்ச்சுக்க முடியாது... அவங்க எத பத்தி சொல்ல வர்றாங்கன்னு புரியுறதுக்கே ஒரு மாசம் ஆய்டும்.. ஆனா ஒரு வாரத்துல புராஜக்ட் டைட்டில் கேப்பாங்க... இந்த இடில இருந்து தப்பிக்க.. நண்பர்களோ அல்லது சி(ப)ல காலேஜில் ஆசிரியர்களோ சில புராஜக்ட் செண்டர்ஸ் அல்லது கம்பெனிகளின் அட்ரெஸ் தரப்படும்... யப்பா.. நம்ம மண்டையல உளுந்த இடியெல்லாம் போய்டுச்சுடான்னா.. அதுதான் இல்ல...  அடுத்த உள்பிரிவுக்கு நீங்க போறீங்க..

4.1  புராஜக்ட் செண்டர்ஸ்:-
                              என்னத்த சொல்றது இவங்களப் பத்தி.. பாவப்பட்ட ஜென்மங்கள்.. நீங்க மொதமொத புராஜக்ட் செண்டர் போனீங்கன்னா.. சும்மா ராஜ மரியாத தான்... ஸார்.. நாங்க அப்பிடி பண்ணித் தருவோம்.. இப்பிடி பண்ணித்தருவோம்.. அது முடியும்.. இது முடியும்.. நீங்க என்ன கேட்டலாலும் ஓகே  பண்ணிடலாம் அப்படீன்னு சொல்லுவாங்க.. நிலாவுக்கு ராக்கெட் அனுப்பணும்னு சொன்னாக்கூட... நீல் ஆம்ஸ்ட்ராங் யூச் பண்ண கோடிங் நெட்ல கெடக்கும்.. நான் அத தரேன்னு சொல்லுவாங்க..

4.2:-புராஜக்ட் செண்டர்ஸ்-- ஆரம்பம்:-
                             IEEE பேப்பர் தர்றதுக்கே.. ஆரம்பத்துல நாம பணம் கட்டனும்.. குறைஞ்சது 500...
நாமளும்... செரிடா.. கெத்து செண்டர்ல சேந்துட்டோம்.. கலக்கப்போறோம்.. அப்படீன்னு நெனச்சுட்டு இருப்போம்.. கிளஸுக்கெல்லாம் தவராம போவோம்...

4.3:-புராஜக்ட் செண்டர்ஸ்--- முதல் நிலை:-
                             நம்ம காலேஜ்ல நம்ம புராஜக்ட நோண்டுறதுக்காகவே ஒரு கொஸ்டின் கோயிந்து இருப்பாரு.. அவர் நம்ம புராஜக்ட பிரிச்சு மேஞ்ச்சுட்டு.. அது தப்பு.. இது தப்பு.. இந்த புராஜக்ட் செல்லாது அப்படீன்னு சொல்லுவாரு.. இந்த கொஸ்டின்ஸ புராஜக்ட் செண்டர்ஸ்ல சொன்னா... “அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லப்பா.. சமாளிச்சுக்கலாம்” அப்படீன்னு மட்டும் சொல்லுவாங்க.. நம்ம இண்ட்ரஸ்ட் கொஞ்சமா கொறையும்...

4.4:-புராஜக்ட் செண்டர்ஸ்--- இரண்டாம் நிலை:-
                             ரிவியூன்னு ஒன்னு வெப்பாங்க நம்ம காலேஜ்ல... அதுக்கு டாக்குமெண்ட் கேட்டு இருப்போம் நாம புராஜக்ட் செண்டர்ஸ்ல.. தர்றோம்.. தர்றோம்ன்னு சொல்லிட்டு.. கடைசி நிமிஷத்துல ஒரு டாக்குமெண்ட் அனுப்புவாங்க.. “அடப்பாவி மக்க.. நாம பண்ணி இருந்தாலே இதவிட நல்லா பண்ணி இருப்போமே. இது என்ன இவ்ளோ கேவலமா இருக்கு”ன்னு கண்டிப்பா ஒவ்வொருத்தனும் நெனப்பான்... 

4.5:-புராஜக்ட் செண்டர்ஸ்--- மூன்றாம் நிலை:-
                             கடைசில புராஜக்ட்ன்ற பேர்ல ஒன்னு தருவாங்க.. ஸார்.. இது இல்ல.. அது இல்லன்னு நாம சொன்னா.. இவ்ளோதாம்பா பண்ண முடியும்னு ஒரு அலட்சியமான பதில்.. முடிஞ்சா நீ பண்ணி பாக்க வேண்டுயதுதானேன்னு நம்ம தெறமய கேவல படுத்துற வார்த்த அடுத்து வரும்... செரி.. புராஜக்ட் தாங்கன்னு கேட்டா.. சுத்தமா தரமாட்டாங்க... நாம கட்ட வேண்டிய 10,000 பணத்துல ஒரு 1,000 ரூபா கட்ட வேண்டியது இருந்தாக்கூட அந்தக் காச வாங்கிட்டுத்தான் தருவாங்க.. புராஜக்ட் வாங்கிட்டு நாம ஓடிடுவோமாம்... (என்னக் கொடும ஆதவா இது??)

                                இதுக்கப்புரம் நாம எது மாத்த சொன்னாலும் மாத்த மாட்டாங்க.. டாக்குமெண்ட்டும் அவங்க இஷ்டமா பண்ணித் தருவாங்க... (’சோதனை மேல் சோதனை...’ அந்த மாணவர்களின் காலர் டியூன்..)

5:-என்னதான்  தீர்வு???:-

               பல படிகளில் மாற்றம் வரவேண்டும்
1--> காலேஜுல .. இரண்டாம் ஆண்டு முதலே புராஜக்ட் பத்தி சொல்லித் தரனும்...

2-->இப்போ இருக்குற சிலபஸ் வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறத ஒத்துகிட்டு.. (என்னதான் ஜாவா , .நெட் எலக்டிவ் எடுத்து படித்தாலும்...) தனியா டெக்னாலஜி கத்துக்கணும்..ஆர்வம் இருக்கனும்...

3-->ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டுல நம்ம காலேஜுக்கு பேர் வரனும்கிறதுக்காக... IEEE பேப்பர் தான் செய்யனும்ற ரூல மாத்தனும்

4--> பசங்கள காலேஜ்ல புராஜக்ட் பண்ண வெச்சா நாம பாத்துக்கனுமேன்றதுக்கு சோம்பேறித்தனம் பட்ட்டுக்கிட்டு.. அவங்கள புராஜக்ட் செண்டர் அனுப்புற (பெரும்பாலான)விரிவுரையாளர்களின் மனப்போக்கு மாறனும்......

5-->பசங்க சிக்கிட்டாங்கன்ற ஒரே காரணத்துகாக.. கண்டதெல்லாம் சொல்லலாம்ற கண்மூடித்தனமான பேமானித்தனம் புராஜக்ட் செண்டர்ஸ்ல மாறனும்...

6-->புராஜக்ட் செண்டர்ஸ்ல தெரியாத விஷயத்த தெரியலன்னு சொல்லனும்..

                       தனியாக புராஜக்ட் பண்ணா அந்த மாணவனுக்கு 5,000... ரெண்டு அல்லது மூனு பேர்  சேந்து பண்ணா ஒரு தலைக்கு 4,000... இதுதான் இப்போ மார்க்கெட் ரேட்.... 

நண்பர்களே!!!

                   இந்த மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு வெளியேறக்கூடிய இஞ்ஜினியர்களின் எண்ணீக்கை பல லட்சங்களைத் தாண்டும்... ஒரு மாணவன் 4,000 ரூபாய் இழக்கிறான் என்றால்...   ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் எவ்ளோ இழப்புன்னு பாருங்க... 

இது என் ஜூனியர்ஸ்க்கு

முடுஞ்ச வரைக்கும் தனியா நீங்களே புராஜக்ட் பண்ணப் பாருங்க.. அப்பிடி செண்டர்ஸ் போனாலும் தப்பில்ல.. கத்துக்கப்பாருங்க.. கத்துக்கவும் முடியலன்னா... புராஜக்ட் கைல வாங்காம முழுப் பணத்தையும் கட்டாதீங்க!!!

முடிவுரை:-

                   இதுக்கு முடிவுரை என் பத்து விரல்கள் மட்டும் எழுத முடியாது...  
அவன் செய்த மாதிரி நானும் புராஜக்ட் செண்டர் போறேன்ற பொதி கழுதைத்தனம் மாறனும்..
வேற என்னத்த சொல்ல??????



 உங்களுக்கு புடிச்சா ஓட்டுப் போடுங்க.. புடிக்காட்டியும் ஓட்டுப் போடுங்க...
நீங்க படிச்சா மட்டும் போதும்.. நீங்க படிச்சா மட்டும் போதும்.. 
(சிவாஜி ‘ரஜினி’ ஸ்டைலில் படிக்கவும்...)