March 31, 2009

தமிழ் சினிமாவின் இரட்டை அர்த்த பாடல்கள்

”சின்னத்தாயவள் தந்த ராசாவே...”
 
                     தளபதி படத்தில் வரும் இந்த பாடல்.. சூப்பர் ஸ்டாரை குறிப்பதாக இருந்தாலும்... இளைய ராஜா அவர்களின் தாயாரின் பெயர் சின்னத்தாய் என்பதும்...அவரைத்தான் இந்தப் பாடலில் வாலி அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்பதும் என்னைப் போன்ற யூத்களுக்கு புதுமையன செய்தி.. (என்னப்பா.. பழைய மேட்டரா போட்டு இருக்கியேன்னு பின்னூட்டம் போட்டா.. நீங்க பெருசுங்க லிஸ்ட்ல வந்துருவீங்கங்கோ!!!!)

”ராஜ லஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்... ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்...”

                   தசாவதாரத்தின் ‘கல்லை மட்டும் கண்டால்..’ பாடலில் இடம் பெரும் வரிகள் இவை... கமல் அவர்களின் தாயாரின் பெயர் ராஜ லஷ்மி. (ராஜ் கமல் புரொடக்க்ஷன்ஸ் பெயர் காரணம்.) அவரது தந்த பெயர் ஸ்ரீனிவாசன் என்பதும் அவர்கள் இருவரின் புதல்வர்.. கமல ஹாசன்... பொதுவாக கமல் அவரகள் இது போன்ற சுய விளம்பரத்தை விரும்பாதவர் போல் இருந்தாலும்.. அவரும் சில இடங்களில் இது போன்ற விஷயங்களை கையாண்டுள்ளார்...

“ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜன் தான்...”

                  அதே பாடலில் இடம்பெறும் வரிகள்.. வாலி அவர்களின் இயற்பெயர் “ரங்கராஜன்..”  கெடச்ச கேப்புல எப்பிடி தன்னைப் பற்றி போட்டு இருக்கார் பாருங்க...

”அந்த சிவகாமி மகனிடம்சேதி சொல்லடி....”

                                  சிவகாமி மகனான காமராஜருக்கு கவியரசர் கூறிய சேதி...

கடைக்குட்டி பஞ்ச்:-
 
                     ஏப்ரல் ஒண்ணாம் தேதி .. ஏதோ என்னால முடிஞ்ச மாதிரி டிரை பண்ணேன்.... வண்ணத்துப்பூச்சியார் என்னதான் நெறயா எழுதுங்கன்னு சொன்னாலும்.. இந்த மொக்கய படிக்கிறவங்களோட நேரத்தை வீணாக்ககூடாதுன்னு ஒரு எச்சரிக்கை.. அதனால தான் குட்டி குட்டி பதிவு..  உங்களுக்கு இத படிச்சுட்டு பின்னூட்டம் போடவே நேரம் கரெக்டா இருக்கும்.. என்ன செரிதானே??? 
                        உங்களுக்கு தெரிஞ்ச இது போன்ற பாடல்களை கண்டிப்பாக குறிப்பிடவும்..

ஏன் எழுதவில்ல.. இவ்வளவு நாளா????

2008 அக்டோபரில் தமிழ் வலையுலகை பற்றி அறியாத நிலையில்..  கடைக்குட்டி என்னும் புனைப்பெயருடன் எழுத ஆரம்பிச்சேன்.. ஆன இப்போ கொஞ்ச நாளா (மூணு மாசமா) எழுதுறது இல்ல.. ஏன்...???

அவசரப்பட்டு ஆரம்பித்து விட்டேனோ என்றொருஎண்ணம்....
வலையுலகில் என்னதான் நடக்குதுன்னு கொஞ்சம் ஒதுங்கி இருந்து பார்க்க நெனச்சேன்...
புது நண்பர்களை சேர்க்குரதுக்கு முன்னாடி... மத்தவங்க நட்ப ரசிக்க நெனச்சேன்.. (பரிசலாருக்கும் கார்கிக்கும் கெமிஸ்ட்ரி சூப்பர்..)
இப்போ நான் நெனச்ச மாதிரி ஓரளவு தயாராய்ட்டேன்.. ஸோ.. செக்கண்ட் இன்னிங்ஸ் ஆரம்பம்..


இத இதலாம் எழுதணும்னு எத எதயோ நெனச்சு வச்சு இருக்கேன்..அத அதயெல்லாம் இனிமே நீங்க அப்பப்போ படிக்கலாம்...


March 01, 2009