October 22, 2008

ரிக்சா-காரேஇங்க

சில நாட்களுக்கு முன் பாரிஸ்சில் உள்ள என் வீட்டிற்கு வந்த என் நண்பர்கள் இருவர் ரொம்ப அதிசியமா பார்த்த விஷயம் இந்த ரிக்சா .....
"டேய் !! இன்னமும் இதெல்லாம் இருக்கா ??"
"ஆமாடா " - நான்
"அடப்பாவி !! இதெல்லாம் எங்க ஏரியா லே பாக்குறதே அதிசயம் .........."
இப்படி இதை பற்றி நிறைய ஊத்துனாங்க .... எத பத்தின்னு நானும் யோசிச்சா நம்ம ரிக்சா பத்தி.... அப்போ தான் அழிஞ்சு வரும் அற்புதம் இதுன்னு புரிஞ்சுது... அதனாலதான் என் முதல் முதல் வலைஎழுத்து ரிக்சாவிற்கு சமர்ப்பணம்...

எனக்கும் ரிக்சாவிற்கும் இருக்கும் தொடர்பு ரொம்ப.. பல பள்ளி குழந்தைகளின் வாழ்க்கையைப் போல என் பள்ளி வாழ்க்கைக்கும் ரிக்சாவிற்கும் தொடர்புகள் நிறைய ... என் அண்ணனுடன் ரிக்சாவில் பள்ளிக்கு போனதில் இருந்து தொடங்குகிறது என் கதை .. என் பள்ளி வாழ்கையும்தான் .5 ரூவா குடுத்து போவோம் நாங்க ரெண்டு பேரும் .. நான் ஒன்னாவது படிக்கும்போது 5 ரூவா இருந்த ரிக்சா காசு .. எங்க வயசு ஒன்னு ஏறும் பொது அதுவும் ஒரு ரூவா ஏறுச்சு... அப்பவே ஏன்மா இப்டி காசு ஏறுதுன்னு கேட்ட அறிவாளி தான் இந்த கடைக்குட்டி .... சரி மேட்டர் கு வருவோம்... இப்டி ஒரு ஒரு ரூவா வா ஏறுன இந்த ரிக்சா காசு ..நான் எட்டாவது படிச்சு முடிச்சு வரும் போது 12 ரூவா ஆச்சு.... ரிக்சால ஸ்கூல் போயிடு வர்றதே ஒரு சந்தோசம் தான் ...

நான் சொல்ல மறந்த ஒன்னு... நான் ஸ்கூல் படிக்கு பொது மாச மாசம் காசு குடுத்து போகல ரிக்சா ல .. தினமும் நாங்களே தான் பேசி வரணும்.. ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு புது அனுபவம் காத்து இருக்கும் .. சில பேரு ரிக்சா நாம உக்காந்து வர்றதுகேய் ரொம்ப நல்ல இருக்கும் .. லோகேஷ் மாமா அப்டியே மயில் இறகு மாதிரி பரந்து வருவார்...சில தாத்தா வண்டி ல ஏறுனா நாம நைட் குள்ள போய்டலாம் ... ரம்பம் ... சில பேரு வண்டி ரம்பம்பம் .....

மழைகாலத்துல ரிக்சால போறதே ஒரு கலை தான் .. ப்ளூ கலர் தார் பாய் ல மூடி வச்சு இருப்பாங்க ரிக்சாவ .. அது குல ஏறி உக்காந்து .. நம்ம போற எடம் வந்ததும் சொல்லணும்.. பச்ச கலர் மசூதி பக்கதுல என்ன வீடு .. அந்த மசூதி வந்துருச்சா இல்லையானு பாக்குதே ஒரு கலை தான்.. சில சமயம் ஏதோ ஒரு பச்ச கலர் வீட்டுகிட்ட எறங்குனதும் ஒரு நியாபகம்..

இப்டி இருந்த ஒரு வாகனம் .. இப்போ அழிஞ்சு வருது .. ஏன்னு தெரியல.. இவ்ளோ பேசுற நானும் ரிக்சாலபொய் ரொம்ப நாள் ஆகுது ... இத படிச்ச பிறகு .. எங்கயாவது ரிக்சா வா பாத்தா ...ரிக்சா-காரேஇங்க daaன்னு போய்டாம ... அந்த ரிக்சா ல போக பாருங்க .. அது தன் இந்த கடைகுட்டிஒட அவா ...

( லேட் ஆ பொய் உங்க காரியம் கேடு போச்சுநா ..... அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லேங்க அண்ணா!!!!)

4 comments:

Ramesh said...

Nice! Welcome to blog world!

Saw you blog address on Divya's blog comment!

கடைக்குட்டி said...

nandri .... !!!

Anonymous said...

வாழ்த்துக்கள்!

செல்வராஜ் said...

வாழ்த்துக்கள்!