December 16, 2008

கிளைக் கதை – சிவாஜி –the B O S S




வேலுவின் ஒர்ருபா!!

ஏற்கனவே சினிமாவுக்காக சரவணண்ற பேர சூர்யான்னு மாத்தியாச்சு.. வேற பட்டம் எதுக்கு??

குமுதம் புக்கில் சூர்யாவின் பேட்டியை படித்துக் கொண்டிருந்த வேலுவின் மேல் அவனுடைய மகன் வந்து விழுந்தான்... ஐந்து வயது இருக்கும்..,,

அப்பா சாக்லேட் வாங்கித் தாங்க “ என்று ஒரே நச்சரிப்பு....

“அந்த சஃபாரிய அயர்ன் பண்ணி வை மா “ என்று அவன் மனைவியிடம் சொல்லிவிட்டு....இருவரும் கிளம்பினர்...

பையனுடன் வெளியில் போகும்போது அவனுக்கு நல்ல உதாரணமா இருக்கனும்னு வேலு நெனப்பான்...அதனால வழியில் பார்த்த பிச்சைக்காரர் ஒருத்தருக்கு ஐந்து ரூபாய் போட்டுவிட்டுச் சென்றான்...அது அவனது வழக்கம்...

கடையில் போய் சாக்லேட் வாங்கித் தந்தான்... கூடவே ஷேவிங் க்ரீம் வாங்கினான்...பில் 112.50 .. அவனிடம் இருந்ததோ 110.. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கு... இது தெரிஞ்ச கடையும் இல்லை.. தெரிஞ்ச ஒரே ஒருத்தர் அந்த பிச்சைக்காரர் மட்டுமே....

வெக்கத்தை விட்டு அவரிடம் கொடுத்த ஐந்து ரூபாயைக் கேட்டே விட்டான்..அவரும் கொடுத்துவிட்டார்...கடையில் கொடுத்து விட்டு நகர்ந்தான்.. மீதி காசில் ஒண்ணாருவாவை பிச்சைக்காரருக்குத் திருப்பிக் கொடுத்து விட்டு அந்த இடத்தில் நிர்க்கப் பிடிக்காமல் வீடு நோக்கி நடக்கலானான் அவனின் மகனுடன்...

கோர்ட்டுக்குப் போவதற்க்காக குளித்துவிட்டு அந்த சஃபாரியை மாட்டிக் கொண்டு மறக்காமல் பர்ஸை எடுத்து வைத்துக் கொண்டான்....கூடவே அந்த பிச்சைக்காரனுக்கு கொடுக்காத ஒரு ரூபாயும்....

பின்குறிப்பு :-

ஆதி சேஷன் , நம்ம தலைவர அவமானப்படுத்த கொடுத்த அந்த ஒரு ரூபா , அவரோட கைத்தடி வேலு கைக்கு எப்படி வந்திருக்கு பாத்தீங்களா....???அந்த சில்லற மட்டும் அவன்கிட்ட இல்லாம இருந்திருந்தா சிவாஜி செகண்ட் ஹாஃப் எங்க?? நம்ம தலைவர் கல்வித் தந்தை ஆவது எங்க....??

வாழ்க அந்த ஒர்ருவா ....

 

 

No comments: