2008 கடைசில பதிவுகள் எழுத ஆரம்பிச்சு கிழிச்சது பெருசா ஒன்னுமில்ல.. 2009 முழுசும் வெட்டியாவே போச்சு... அதுக்கு காரணம் ரெண்டு..
1* என் மனத் தயக்கங்கள்..
2* முதலாவதாக சொன்னதேதான்...
மனத் தயக்கங்கள பட்டியலிடுறேன்... மனசுவிட்டு பேசுனா குறையுதான்னு பாப்போம் மனத்தயக்கம்....
** பின்னுட்ட மேனியா **
எந்த பின்னூட்டத்துக்கு நன்றி சொல்றதுன்னே தெரியலீங்க.. நம்ம பதிவ பிரிச்சு மேயுற.. புதுசா யோசிக்க வைக்குற பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லலாம்.. படிக்காமலேயே பின்னூட்டம் போட்டா அதுக்கும் நன்றி சொல்லி நேரத்த வீணாக்கனுமா???
என்னுடைய தயக்கம் இதுதான்.. பின்னூட்டம் இடுற எல்லாருக்கும் நன்றி சொல்லனுமா?? இது சம்பந்தமா பதிவுலக சட்டம் என்ன சொல்லுது..
*** பதிவுகள் இடைவெளி ***
ஒரு பதிவுக்கும் அடுத்த பதிவுக்கும் குறைந்த பட்ச கால இடைவெளி எவ்ளோங்க??? என்னைப் பொருத்த வரைக்கும் ஏதாவது ஒரு திரட்டில நம்ம பதிவு மொத பக்கத்துல வந்துட்டா.. அப்பா.. ஒலகமே நம்ம இடுகைய படிச்சுடுச்சுடா மக்கான்னு ஒரு சந்தோசம்..
அதாவது என்னுடைய கணக்குப்படி ஓட்டுகள்தான் அடுத்த பதிவ தீர்மானிக்குது..
யாரும் படிச்ச என்ன படிக்காடி என்னன்னு மவனே 2 ,3 தோணுனாலும் அடிச்சு ஆடிடலாமா???
*** தமிழ் மணம் **
நானெல்லாம் தமிழிஷ்ன்னு ஒன்னு ஒருக்குறதாலதான் கொஞ்சமாவது எழுதுறேன்.. டாக்டர் சுரேஷ்கிட்ட கடந்த ஆண்டு முதலே பொலம்பிக்கிட்டுத்தான் இருக்கேன்.. அதுல எப்புடி சேக்குறதுன்னு தெரியலன்னு..
கஷ்டப்பட்டு சேத்தாலும்.. ஒரு ஓட்டு கூட விழல.. ஏன்???
தமிழ்மணத்துல விருதுகள்ளாம் தர்றாங்க.. ஓட்டெல்லாம் போட்டாச்சு.. ஆனா அடுத்த வருஷம் நாமளும் வரணும்ல.. என்ன பண்றது..
***வயது***
இதுதாங்க ரொமப பெரிய தடை.. முக்கியமா பதிவர் சந்திப்புகள்னாலே பயமா இருக்கு.. அதுல இருக்குற எல்லார் மொகத்த பாத்தாலும்.. என்னதான் எழுத்துல கலாய்ச்சாலும்.. சில பேர் நாங்கள்ளாம் யூத்துன்னு சொல்லிக்கிட்டாலும்..
நாம ரொம்ப சின்ன பயலா இருப்போமோ,.. யாரும் மதிக்க மாட்டாங்களோன்னு ஒரு பயம்.. (வயசு 21 ஆனாலும்.. எது அந்த 20க்கு அப்புறம் வருமே அந்த 21ஆ கேட்டுடக் கூடாதில்ல..)அதான் சென்னைலயே இருந்தாலும் பதிவர்களிடம் போனில் கூட பேசியது இல்லை.. சந்திப்புகளுக்கும் போனதில்லை,.,. (ஜெட்லிகூட ஒட்டிக்கிட்டே போய் 2010ல எல்லாரையும் பாக்கலாம்ன்னு ஒரு திட்டம்.. என்ன ஜெட்லி போலாமா???)
**மேட்டர்**
பதிவுக்கானா மேட்டர்.. ரொம்ப ஆழமா ஒரே கருத்தா இருக்கனும்னு நெனப்பேன்.. நேரமிருந்தாலும் சில சமயம் இதெல்லாமா எழுதுவதுன்னு எழுதுவது இல்லை.. (சினிமாவ தவிர மிச்சதெல்லாம் கவனிக்கப் படுவதில்லையோன்ற ஒரு பயம்..)
ஆனா இப்போத்தான் குவியல்,அவியல்,காரச்சட்னின்னு எல்லா அண்ணன்மார்களும் ஏன் எழுதுறாங்கண்னு புரியுது..
நாமளும் அடுத்த வருஷம் முதல் தாக்கிடுவோம்.. ( நல்ல பெயர் சொல்பவர்களுக்கு “ஹண்டர்” பட யூட்யூப் லிங்க் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்...)
மனசுல உள்ளதெல்லாம் கொட்டியாச்சுங்க.. தேறுவேனான்னு சொல்லுங்க..
ரொம்ப ஆசைப்பட்டு துவங்கிய இரண்டு தொடர்கள் “சரவணன் முதல் சூர்யா வரை” மற்றும் ”எஞ்ஞனியா வா” .. 2010க்குள்ள அந்த சூர்யா கதையையும் .. இந்தத் தொடரையும் முடிச்சுர்றேங்க...