June 26, 2009

ஷாக் ஷாக் ஷாக்.....

<<<<இது மாதிரிஒன்ன ஏற்கனவே படிச்சு இருந்தா நீங்க ஓட்டோ பின்னூட்டமோ போட வேணா... ஆனா முடிக்கம் போது ஷாக் ஆயிட்டா. கண்டிப்பா செய்வீங்க தானே????>>>>>



.....நடைபிணமாய் நடக்கலானான் மறந்தபடியே ...

.....’திட்டிட்டாளே அவ’ குமுறுயது மனசு ...

.....கார்த்தி சொன்னான் ‘விடு மச்சான்’  .....

..... ”இவள்களுக்குத் தேவை லட்சங்கள் சில... கோடிகள் சில... ” .....

.....இனிமேல் ஏது சந்தோஷம் ???.....

.....  இனிமேல் பணம் எதுக்கு??? .....

..... நெருப்பில் நின்றான் .....

..... வெறுப்பில் செத்தான் .....

...... காதலும் திரும்புமோ ??? .....

..... இனி

.....சாதலும் விரும்புமோ ?? ....

.....நடைபிணமாய் நடக்கலானான் மறந்தபடியே ...

டிஸ்கி

இதுல என்னடா ஷாக்னு கேக்குறீங்களா ???

மேலிருந்து படிச்சாச்சுல்ல.. இப்போ கதையோட கடைசி வார்த்தைலேர்ந்து ஒரு ஒரு வார்த்தையா பின்னாடி படிச்சுட்டுப் போங்க..

// மறந்தபடியே நடக்கலானான் நடைபிணமாய்....
     விரும்புமோ  சாதலும்....................//

மேல நீங்க திருப்பியும் கதைய படிச்சு முடிக்கும் போது.. அதே காட்சி வந்து நிக்குதா கண்ணுல... 

எழுத்துக்கு உரம் சேர்க்க பின்னூக்கங்களும்... ஓட்டும் போடலாமே...

June 25, 2009

வயசாய்டிச்சுல்ல....????

ஒருநாள் .. 3:05 a.m.,

"அப்பா நாங்களும் தலையெடுத்தாச்சு... இதுக்கு அப்புறமும் நீங்க உழைக்கனும்னு என்ன தேவ இருக்கு ??” பஞ்சனதனைப் பார்த்து குறைத்தான் ராக்கி... ராக்கி பஞ்சனதனின் செல்ல மகன்...



“நல்லா சொல்லுப்பா... எத்தன தடவ சொன்னாலும் கேக்காம போய்கிட்டு இருக்காரு.. தெனமும் கை வலிக்குது கால் வலிக்குதுன்னு...62 வயசாய்டிச்சுல்ல.. வீட்ல உக்காராம சும்மா....” இவ்ளோ உரிமையா திட்றது இவர் மனைவி பார்வதின்னு சொல்லனுமா என்ன???

“எனக்கு செய்யனும்னு தோணுது .. உங்களுக்கு என்ன??” என்றபடி வேலைக்கு கிளம்பினார் பஞ்சனதன்.

5:56 p.m.

உடல் சோர்வு வாட்ட.. அதை சொல்லவும் முடியாமல்.. செரி செஞ்சு முடிச்சுடுவோம் இன்னும் அரை மணி நேரம்தானேன்னு அன்றைய வேலையையும் முடித்தார் பஞ்சனதன்



ஆறு மாதம் கழித்து

காலெஜ் கட்டடித்த ராக்கியும் நண்பர்களும்... “ ஆண்டவன் ஆட்டம்” படம் பார்த்துவிட்டு வந்தனர்...

“யப்பா.. என்ன ஃபைட்டு.. செம படம்டா.. “ நண்பர்கள் குதூகலத்துடன்..

ஒவ்வொரு நாள் ஷூட்டிங் முடிந்ததும் தன் தந்தை “ட்விங்கிள் ஸ்டார்” ‘பஞ்சனதன் படும் வேதனையை கண்ணால் பார்த்த இவனால் குதூகலிக்க முடியுமோ???

June 23, 2009

நீங்கள் போங்கு பதிவரா??


நீங்கள் போங்கு பதிவரா ?? கீழேயுள்ள கேள்விகளைப் படிக்கவும்

(ஆம் / இல்லை மட்டுந்தான் அலோவ்டு.. )

1 -- > எல்லோரும் பின்னூட்டம் இடுகிறோம். அதுல இது வரைக்கும் யாரோ ஒருத்தர் பண்ண தப்ப.. “நீங்க தப்பு பண்ணி இருக்கீங்கன்னு “ சொல்லி இருக்கீங்களா??

2--> உங்களுக்கு புடிக்காத விஷயங்களை பதிவிட்டிருந்தா புடிக்கலைன்னு பாலிஷா இல்லாம நேரடியா சொல்லி இருக்கீங்களா??


3--> உங்களுக்கு பிடித்த ஒருவரின் இடுகையை உங்கள் நண்பர்களையும் படிக்க சொல்லி இருக்கிறீர்களா??

4--> அனானி கமெண்டுகளை மதித்து .. அதற்கு பின்னூட்டம் போட்டாக் கூட பரவாயில்லை ஆனா தனி பதிவே போடுவீர்களா??

5--> ஒன்னுமே படிக்காம
அருமை
:-)
மிக நல்ல பதிவு
கலக்குங்க etc etc...

இந்த மாதிரி டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவீங்களா???

6--> மெயிலில் வந்த புகைப்படங்களை நீங்க எடுத்ததுன்னு போஸ்டா போட்டு இருக்கீங்களா???

7--> வேற வேற பேர்ல உங்களுக்கு நீங்களே அனானி கமெண்ட்ஸ்.. திரட்டிகளில் ஓட்டும் போட்டு இருக்கீங்களா???

டிஸ்கி

1.2.3 க்கு இல்லை ந்னும்

4,5,6,7, ஆமான்னும் பதில் சொல்லி இருந்தா நீங்கதான் போங்கு பதிவர் ...

இது யாருக்கும் சொல்றதுக்கு இல்ல.. உங்களுக்கு நீங்களே சரி பார்த்துக் கொள்ளுங்கள்:-)

இவ்ளோ தூரம் வந்துப்புட்டு.. ஓட்டும் பின்னூட்டமும் போடாம போனா அதவிட பெரிய போங்கு இருக்கா??? :-)

June 22, 2009

வேலை

”என்ன மாமா.. இப்டியே போனா பிச்சைதான் எடுக்கணும்... “  வாயில் புகையுடன் ரங்கன்...

“அய்யே மாமே.. ஒன்னும் கவல படாத..” என்றபடி பாதிப் புகையை வாங்கினான் காளி என்னும் காளிதஸ்...



“இல்ல மச்சா.. பாரு ஒரு வாரமா சோறு தண்ணி இல்லாம கெடக்குறோம்... ஏதாவது நல்ல சேதி வந்து வேல வரும்னு பாத்தா... “...

“செரி செரி .. கடிக்கிற கொசு பத்தாதுன்னு இடையில நீ வேற..”
காளி

”நம்மகிட்ட என்னடா இல்ல..?? நம்மள மாதிரி வேலக்காரன் கெடக்கிறதுக்கு அவனவன் குடுத்து வெச்சு இருக்கனும்.. ஏதாவது ஒரு பிரச்சனைன்னு வந்தாக் கூட ஓடாமா கடைசி வரைக்கும் நிப்போமேடா... நமக்கு ஏன் மாமே வேலையே கெடக்க மாட்டேங்குது...???”

”--------------”

“டேய்..காளி----------------------த்தா...  இங்க பொலம்பிட்டு இருக்கேன்... அங்க என்னத்தடா பண்ற...” ரங்கன் டென்சனாய்ட்டான்...

”டோப்படிச்சு எவ்ளோ நாளாய்டுச்சு... நாயே சாவடிக்காத நீ வேற...” காளி பரவச நிலையை அடைந்தான்..

இதுக்கு மேல ரங்கன் பொலம்பியது அவனுக்கு கேட்க வில்லை...  ரங்கனுக்கு இந்தப் பழக்கமில்லை.. ஆனால் காளி வழக்கத்துக்கு மாறாக கண்டமேனிக்கி பரவச நிலையில் இருந்ததை ரங்கன் உணர்ந்தான்.. 

‘நாம வாய் விட்டு பொலம்பிட்றோம்.. அவன் புண் பட்ட மனச இப்பிடி ஆத்திக்கிறான் போலன்னு.. எப்போ தூங்குனான்னு தெரியாமலெயே துங்கிட்டான்..

கதைக்கு சுபமான முடிவு வேனுமில்ல???

அடுத்த நாள்

                      ரங்கனுக்கு வேலை கிடைத்தது :-)

டிஸ்கி :-

நெம்ப நாளா பொணமே கெடக்காம இருந்த “வெட்டியான்” ரெங்கன் நண்பன் காளியின் உடலை புதைக்கும் பணியில் இருந்தான் .

June 14, 2009

ஃபைனல் இயர் புராஜக்டும்.. இஞ்ஜினியரிங் பொதிகழுதைகளும்...

வலையுலகுக்கு தனியாளாக வந்து .. இவ்வாரத் தமிழனாகி.. 50 இடுகைகளையும் கடந்து.. இன்று 50 பின்தொடர்பவர்கள்... நண்பர்களுக்கு நன்றி..

குறிப்பு சட்டகம்
1.முன்னுரை
2.ஃபைனல் இயர் புராஜக்டுனா இன்னா???
3.எப்படி செய்ய வேண்டும்??
4.என்னதான் நடக்குது??
5.என்ன தீர்வு???
6.முடிவுரை..

1.முன்னுரை:-

சமூகத்திற்க்கு ஏதாவது பயனுள்ள தகவலை சொல்ல வேண்டும் .. என் கோவத்தை பதிவு செய்ய வேண்டுமென்று ஒரு ஆசை.. அதான் எனக்கு தெரிஞ்ச ஏரியால இறங்கிட்டேன்.. (ஆங்கிலம் தவிர்க்க முடியாதது.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க)



2.ஃபைனல் இயர் புராஜக்டுனா இன்னா???

ஏழு செமஸ்டர் படிச்சு முட்டுப்புட்டு.. வெளியவரப்போற ஒவ்வொரு இஞ்ஜினியரும் தனியாவோ.. அல்லது குழுவாகவோ(2 ,3அல்லது4 நபர்கள் வரை )சேர்ந்து அவர்களுக்கு புடிச்ச பிரிவில் புராஜக்ட் செய்து காமிக்க வேண்டும் என்பது வழக்கம்.. அதுக்கு 200 மார்க் இருக்கு..

3.எப்படி செய்ய வேண்டும்??



தங்களுக்கு புடிச்ச பிரிவில்.. தெரிஞ்ச டெக்னாலஜியில் ( கம்யூட்டர் பிரிவு என்றால் .நெட் அல்லது ஜாவா..) தாங்கள் நினைத்ததை புராஜக்ட்டாக செய்து காட்ட வேண்டும்.. எந்தப் பிரிவில் புராஜக்ட் செய்கிறோமோ அந்தப் பிரிவிலேயே தங்கள் வேலையையும் தேடிக்கொள்ளலாம்.. புடிச்ச பிரிவுல புராஜக்ட் பண்ணி.. அதே துறையில வேலக்கி போனா.. கொஞ்சமாவது வேலைக்கி ஆவற மாதிரி வேல பாக்கலாம்... கரெக்ட் தானே??? ஆனா என்ன நடக்குதுன்னு பாருங்க...


4.என்னதான் நடக்குது??

மூனு வருஷமா புராஜக்ட் பத்தி பேசாத நம்ம லெக்சரர்ஸ் எல்லாம் புதுசா புராஜக்ட்னு ஒன்ன பத்தி சொல்லுவாங்க...செரின்னு நாமளும் .. நம்ம கனவ புராஜக்டா செய்யலாம்னு இறங்கிடுவோம்.. (உதாரணமா.. ஆர்குட்கு போட்டியா ஒரு வெப் சைட்.. பிளக்கருக்கு போட்டியா ஒரு புது கான்செப்ட்... ஒரு புது வகையான எலக்ட்ரானிக் சிப்... மற்றும் பல பல பல... கனவுகளுக்கு ஏது எல்லை??) ஆனா ..

இங்க இறங்கும் முதல் இடி..

IEEE பேப்பர்ஸ் வெச்சுதான் புராஜக்ட் பண்ணனும்னு சொல்லுவாங்க... செரி அதுக்கும் ஓகேன்னு மண்டையாட்டிட்டு.. அதுக்கப்புறம் IEEE பேப்பர்ஸ்னா என்னன்னு நாமளும் தெரிஞ்சுப்போம்...

அங்க இறங்கும் இடி நம்பர் இரண்டு..

IEEE பேப்பர்ஸ் என்பது.. இப்போ.. நம்முடைய துறையில ஒரு பிரச்சைனை இருக்குன்னா.. அத எப்பெடி செரி செய்யுறதுன்னு நாலுஅறிவாளிங்க யோசன சொல்லி இருப்பாங்க... செரிடா.. யோசன தானேன்னு.. படிச்சு புரிஞ்சுக்கலாம்னா...

இடி நம்பர் த்ரீ வில் ப் வய்ட்டிங் ஃபார்யூ ...

அந்த பேப்ப்ர்ஸ நாம தனியா எடுத்து படிக்க முடியாது.. அதுக்கு கொஞ்சம் பணம் கட்டி யார் உறுப்பின ஆகுறாங்களோ அவங்க மட்டும் தான் படிக்க முடியும்.. பல காலேஜ் .. அவங்களே உறுப்பினார் ஆகி இருப்பாங்க.. நாம காலேஜ்ல இருந்தே அந்த பேப்பர்ஸ் தேடலாம்.. ஆனா எங்க காலேஜ் மாதிரி கெத்து காலேஜ்ல படிச்சா.. அதுவும் கெடயாது.. நீங்களே பாத்துக்கங்கன்னு சொல்லிடுவாங்க...
கஷ்டப்பட்டு பேப்ப்ரும் எடுத்துட்டா..

இடி நம்பர் ஃபோர்..

கண்டிப்பா ஒரு சராசரி மாணவனால படிச்சு புரிஞ்ச்சுக்க முடியாது... அவங்க எத பத்தி சொல்ல வர்றாங்கன்னு புரியுறதுக்கே ஒரு மாசம் ஆய்டும்.. ஆனா ஒரு வாரத்துல புராஜக்ட் டைட்டில் கேப்பாங்க... இந்த இடில இருந்து தப்பிக்க.. நண்பர்களோ அல்லது சி(ப)ல காலேஜில் ஆசிரியர்களோ சில புராஜக்ட் செண்டர்ஸ் அல்லது கம்பெனிகளின் அட்ரெஸ் தரப்படும்... யப்பா.. நம்ம மண்டையல உளுந்த இடியெல்லாம் போய்டுச்சுடான்னா.. அதுதான் இல்ல... அடுத்த உள்பிரிவுக்கு நீங்க போறீங்க..

4.1 புராஜக்ட் செண்டர்ஸ்:-
என்னத்த சொல்றது இவங்களப் பத்தி.. பாவப்பட்ட ஜென்மங்கள்.. நீங்க மொதமொத புராஜக்ட் செண்டர் போனீங்கன்னா.. சும்மா ராஜ மரியாத தான்... ஸார்.. நாங்க அப்பிடி பண்ணித் தருவோம்.. இப்பிடி பண்ணித்தருவோம்.. அது முடியும்.. இது முடியும்.. நீங்க என்ன கேட்டலாலும் ஓகே பண்ணிடலாம் அப்படீன்னு சொல்லுவாங்க.. நிலாவுக்கு ராக்கெட் அனுப்பணும்னு சொன்னாக்கூட... நீல் ஆம்ஸ்ட்ராங் யூச் பண்ண கோடிங் நெட்ல கெடக்கும்.. நான் அத தரேன்னு சொல்லுவாங்க..

4.2:-புராஜக்ட் செண்டர்ஸ்-- ஆரம்பம்:-
IEEE பேப்பர் தர்றதுக்கே.. ஆரம்பத்துல நாம பணம் கட்டனும்.. குறைஞ்சது 500...நாமளும்... செரிடா.. கெத்து செண்டர்ல சேந்துட்டோம்.. கலக்கப்போறோம்.. அப்படீன்னு நெனச்சுட்டு இருப்போம்.. கிளஸுக்கெல்லாம் தவராம போவோம்...

4.3:-புராஜக்ட் செண்டர்ஸ்--- முதல் நிலை:-
நம்ம காலேஜ்ல நம்ம புராஜக்ட நோண்டுறதுக்காகவே ஒரு கொஸ்டின் கோயிந்து இருப்பாரு.. அவர் நம்ம புராஜக்ட பிரிச்சு மேஞ்ச்சுட்டு.. அது தப்பு.. இது தப்பு.. இந்த புராஜக்ட் செல்லாது அப்படீன்னு சொல்லுவாரு.. இந்த கொஸ்டின்ஸ புராஜக்ட் செண்டர்ஸ்ல சொன்னா... “அது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லப்பா.. சமாளிச்சுக்கலாம்” அப்படீன்னு மட்டும் சொல்லுவாங்க.. நம்ம இண்ட்ரஸ்ட் கொஞ்சமா கொறையும்...

4.4:-புராஜக்ட் செண்டர்ஸ்--- இரண்டாம் நிலை:-

ரிவியூன்னு ஒன்னு வெப்பாங்க நம்ம காலேஜ்ல... அதுக்கு டாக்குமெண்ட் கேட்டு இருப்போம் நாம புராஜக்ட் செண்டர்ஸ்ல.. தர்றோம்.. தர்றோம்ன்னு சொல்லிட்டு.. கடைசி நிமிஷத்துல ஒரு டாக்குமெண்ட் அனுப்புவாங்க.. “அடப்பாவி மக்க.. நாம பண்ணி இருந்தாலே இதவிட நல்லா பண்ணி இருப்போமே. இது என்ன இவ்ளோ கேவலமா இருக்கு”ன்னு கண்டிப்பா ஒவ்வொருத்தனும் நெனப்பான்...

4.5:-புராஜக்ட் செண்டர்ஸ்--- மூன்றாம் நிலை:-

கடைசில புராஜக்ட்ன்ற பேர்ல ஒன்னு தருவாங்க.. ஸார்.. இது இல்ல.. அது இல்லன்னு நாம சொன்னா.. இவ்ளோதாம்பா பண்ண முடியும்னு ஒரு அலட்சியமான பதில்.. முடிஞ்சா நீ பண்ணி பாக்க வேண்டுயதுதானேன்னு நம்ம தெறமய கேவல படுத்துற வார்த்த அடுத்து வரும்... செரி.. புராஜக்ட் தாங்கன்னு கேட்டா.. சுத்தமா தரமாட்டாங்க... நாம கட்ட வேண்டிய 10,000 பணத்துல ஒரு 1,000 ரூபா கட்ட வேண்டியது இருந்தாக்கூட அந்தக் காச வாங்கிட்டுத்தான் தருவாங்க.. புராஜக்ட் வாங்கிட்டு நாம ஓடிடுவோமாம்... (என்னக் கொடும ஆதவா இது??)

இதுக்கப்புரம் நாம எது மாத்த சொன்னாலும் மாத்த மாட்டாங்க.. டாக்குமெண்ட்டும் அவங்க இஷ்டமா பண்ணித் தருவாங்க... (’சோதனை மேல் சோதனை...’ அந்த மாணவர்களின் காலர் டியூன்..)

5:-என்னதான் தீர்வு???:-

பல படிகளில் மாற்றம் வரவேண்டும்
1--> காலேஜுல .. இரண்டாம் ஆண்டு முதலே புராஜக்ட் பத்தி சொல்லித் தரனும்...

2-->இப்போ இருக்குற சிலபஸ் வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறத ஒத்துகிட்டு.. (என்னதான் ஜாவா , .நெட் எலக்டிவ் எடுத்து படித்தாலும்...) தனியா டெக்னாலஜி கத்துக்கணும்..ஆர்வம் இருக்கனும்...

3-->ரிசர்ச் அண்டு டெவலப்மெண்டுல நம்ம காலேஜுக்கு பேர் வரனும்கிறதுக்காக... IEEE பேப்பர் தான் செய்யனும்ற ரூல மாத்தனும்

4--> பசங்கள காலேஜ்ல புராஜக்ட் பண்ண வெச்சா நாம பாத்துக்கனுமேன்றதுக்கு சோம்பேறித்தனம் பட்ட்டுக்கிட்டு.. அவங்கள புராஜக்ட் செண்டர் அனுப்புற (பெரும்பாலான)விரிவுரையாளர்களின் மனப்போக்கு மாறனும்......

5-->பசங்க சிக்கிட்டாங்கன்ற ஒரே காரணத்துகாக.. கண்டதெல்லாம் சொல்லலாம்ற கண்மூடித்தனமான பேமானித்தனம் புராஜக்ட் செண்டர்ஸ்ல மாறனும்...

6-->புராஜக்ட் செண்டர்ஸ்ல தெரியாத விஷயத்த தெரியலன்னு சொல்லனும்..

தனியாக புராஜக்ட் பண்ணா அந்த மாணவனுக்கு 5,000... ரெண்டு அல்லது மூனு பேர் சேந்து பண்ணா ஒரு தலைக்கு 4,000... இதுதான் இப்போ மார்க்கெட் ரேட்....

நண்பர்களே!!!

இந்த மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கு வெளியேறக்கூடிய இஞ்ஜினியர்களின் எண்ணீக்கை பல லட்சங்களைத் தாண்டும்... ஒரு மாணவன் 4,000 ரூபாய் இழக்கிறான் என்றால்... ஒட்டு மொத்த தமிழ் நாட்டில் எவ்ளோ இழப்புன்னு பாருங்க...

இது என் ஜூனியர்ஸ்க்கு

முடுஞ்ச வரைக்கும் தனியா நீங்களே புராஜக்ட் பண்ணப் பாருங்க.. அப்பிடி செண்டர்ஸ் போனாலும் தப்பில்ல.. கத்துக்கப்பாருங்க.. கத்துக்கவும் முடியலன்னா... புராஜக்ட் கைல வாங்காம முழுப் பணத்தையும் கட்டாதீங்க!!!

முடிவுரை:-

இதுக்கு முடிவுரை என் பத்து விரல்கள் மட்டும் எழுத முடியாது...
அவன் செய்த மாதிரி நானும் புராஜக்ட் செண்டர் போறேன்ற பொதி கழுதைத்தனம் மாறனும்..
வேற என்னத்த சொல்ல??????

(இது ஒரு மீள் பதிவு .... )


June 10, 2009

தமிழர்ஸ் ஓனர் யாரு??

அர்ஜூன் அம்மா யாருன்ற மாதிரி...

இப்போவெல்லாம் இந்தத் திரட்டி இவக நடத்துறாக...

அந்தத் திரட்டி அவக நடத்துறாகன்னு கெளப்பிவிடுறதுதான் fashion ...

எல்ல தளத்த பத்தியும் பிரிச்சு மேய்ஞ்சாச்சு.... அதனால என் பங்குக்கு புது தளமான தமிழர்ஸ் மேலுள்ள சந்தேகங்கள சொல்லிட்றேன்...




 சந்தேகம் நெம்பர் ஒன்னு --> டாக்டர் சுரேஷ்




ஒழுங்கா டாக்டர் தொழில் பாத்துட்டுருந்த இவரு .. ஏண்டா பவித்ராவின் காதல்.. சின்ன வீட்டின் பாடம்ன்னு டார்ச்சர பண்றாருன்னு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்,,,,

ஒரு வேள .. அமைதியா பதிவர் மாதிரி நடிச்சுக்கிட்டு.. பாட்ஷா படம் மாதிரி.. “நான் யாருன்னா...” அப்டீன்னு சொல்வாரோன்னு ஒரு சந்தேகம்...
(பாட்ஷா... டாடட்டடாடடன்..)

 சந்தேகம் நெம்பர் ரெண்டு--> சக்கர சுரேஷ்



அண்ணி ஊருக்கு போயிட்டதால பதிவெழுத ஆரம்பிச்சேன்னு இவரு சொன்னப்பியே ஒரு டவுட்டு.... ஏன்யா.. அண்ணி ஊர்ல இல்லாட்டி சும்மா சமைச்சுட்டு தூங்க வேண்டியதுதானே????  இந்த ஒரு காரணமே இவர் மேலுள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறடுது.
(சக்கர இனிக்கிற சக்கர..)


 சந்தேகம் நெம்பர் மூனு -->  லோகு



நல்லா எழுதிட்டு இருந்த பையன்...திடீர்னு காணாமப் போயிட்டான்... அடிக்கடி டெம்ப்ளேட் மாற்றி அவனுடைய டக்னிக்கல் நாலேட்ஜும் காமிக்கிறான்... ஒரு வேள இவனா இருக்குமோ ???
(ஜன கன மன..)

 



சந்தேகம் நெம்பர் நாலு--> தமிழ் நெஞ்சம்


யப்பா.. இவரு டெக்னிக்கல் புலி... மொதல்ல இருந்தே இவருடைய பதிவுகள் தமிழர்ஸ்ல வந்துக்கிட்டு இருக்கு,,, ஏன்??? அட யாருமே சேராதப்ப கூட இவருடைய பதிவு இருந்துச்சுங்க... இவர்தான்னு 90% கன்ஃபார்ம் பண்ணிட்டேன்.. ஆனா ஏற்கனவே தமிழிஷ்,தமிழ் 10 இதுக்கெல்லாம் இவர்தான் ஓனரோன்ற சந்தேகம் இருக்குறதால இவர உட்ருவோம்...  (benefit of the doubt always given to the accuset)ஸ்பெல்லிங் தெர்லபா...

 சந்தேகம் நெம்பர் 5--> kricons

இதுவும் ஒரு டெக்னிக்கல் புலி... திடீர்னு வந்து புயல் மாதிரி எழுதிக்கிட்டு இருந்த இந்த புலி., திடீர்ன்னு காணாம போயிடுச்சு.. 

கடந்த 3 வாரமா இவரு எழுதல... நல்லா நோட் பண்ணுங்க.. தமிழர்ஸ் ஆரம்பிச்சு 2 வாரம்தான் ஆகுது..  

இவர்தான்.. இவரேதான்..


 சந்தேகம் நெம்பர் 6--> இராகவன் நைஜிரியா


இருமல் தாத்தா “லொக்கு லொக்கு”ன்னு இருமுற மாதிரி இவர் அடிக்கடி.. எனக்கு டெக்னிகலா எதுவும் தெரியாது ..டெக்னிகலா எதுவும் தெரியாது ..ன்னு சொல்லும் போதே சந்தேகம்...

இவர்தானோ ????






 சந்தேகம் நெம்பர் 7--> பார்த்தது கேட்டதும் சித்து ,ஜெட்லி










திடீரென முழைத்துள்ள டெம்ப்ளேட் மாற்றங்கள்... 

திடீரென முழைத்துள்ள ப்ளாக்குகளின் மேல் இவர்களின் அதீத காதல் ....

இள ரத்தம் வேற... இவங்கதானோ???

(அடப்பாவி.. தொடர் பதிவுன்னாலே என்னன்னு நீதானடா சொல்லி குடுத்தன்னு அவங்க ஃபீல் பண்றது புரியுது.. ஆனா கடமைன்னு வந்துட்டா.. யாருன்னு பாக்க மாட்டான் இந்தக் கடைக்குட்டி)

 சந்தேகம் நெம்பர் 8-->  ப்ரியமுடன் வஸந்த்




இந்தவார தமிழன்னு மொத மொத அறிமுகப் படுத்துவாங்களாம்...

அதுல இப்போதான் எழுத வந்த வஸ்ந்த்த கூப்புடுவாங்களாம்... வஸந்த் அண்ணாவுக்கு பொண்ணு பாக்குறாக... பொண்ணு வீட்டுல நாந்தான் கெத்துன்னு சொல்றதுக்காக எல்லா தளத்துலயும் அவர் படத்த வர வெச்சுட்டாரு.. 

(அண்ணா.. மாட்னீங்களா????)

 சந்தேகம் நெம்பர் 9--> வணங்காமுடி








அக்டோபர்ல எழுத வந்துட்டு திடீர்னு காணாம போயிட்டு.. இப்போ திடீர்ர்னு திரும்பி வந்து இருக்காரு.. இவரோ ???

(’நான் இல்ல’ன்ற மாதிரியே பாக்குறாரு )



 சந்தேகம் நெம்பர் 10--> கடைக்குட்டி


கம்ப்யூட்டர் எஞ்சினியர்.

புதுசா ஏதாவது செய்யுறதுல ஆர்வம்...

காசு பாக்கனும்ன்னு வேற எண்ணம்....

அட நானாக்கூட இருக்கலாமோ ???
(இதுதான உன் ஆசை.. இப்போ சந்தோசமா??)


டிஸ்கி 

வாலு , கார்க்கி, தாமிரா போன்ற மூத்த பதிவர்கள் கோச்சுக்க கூடாது.... 

உண்மையான ஓனரே...

உங்க பேர நான் மறந்து இருந்தா.....

நீங்களே வந்து சரண்டர் ஆயிடுங்க... பின்னூட்டத்துல ... :-)


June 09, 2009

சூர்யா -- ஜோதிகா --> காதல் ஸீன் - 2

சரவணன் முதல் சூர்யா வரை -- 5


(50வது பதிவு)

சூர்யா - ஜோதிகா காதல் ஸீன் -- 2


சண்ட போட்டாச்சா ரெண்டு பேரும்.. அட எப்பயா??  இத படிங்க மொதல்ல....





சூர்யா ‘நந்தா’ ஷூட்டிங்க்ல இருந்த நேரம். டைரக்டர் பாலா இவரை அணுஅணுவாக மாற்றிக் கொண்டிருந்தார். ‘திமிரா நட.. மொறப்பா பாரு’ன்னு வேற ஆளா மாத்திட்டு இருந்தார்.  படமும் முடிந்தது.. ஜோவுக்கு சும்மா எஸ்.எம்.எஸ் அனுப்பவதோடு சரி அந்தக் காலகட்டத்தில். சண்டையெல்லாம் மறந்து போச்சுடோய்...

நந்தா முடித்துவிட்டு அடுத்து என்ன செய்வதெனக் கவலை... என்ன மாதிரி படம் செய்யலாம்னு ஒரு குழப்பம்... அப்போ ஜோதிகா கிட்ட இருந்து ஃபோன்

ஜோ :- ஹாய் சூர்யா
சூர் : - சொல்லுங்க...
ஜோ:- கௌதம் ஒரு கதை வெச்சு இருக்காரு... நான் நடிக்கிறேன்.. ஹீரோ செட் ஆகல..நீங்க கதை கேட்டுட்டு சொல்லுங்க
சூர் :- ஓ.கே. :-)



கதை கேட்டு இவருக்கு பிடிச்சா..  தயாரிப்பாளர் கிடைக்கவில்லை... சூர்யாவ வெச்சு இவ்ளோ பெரிய பட்ஜெட்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க... தாணு தயாரிக்க... படம் வளர வளர... இந்தக் காதல் ஜோடியின் காதலும் வளர்ந்தது...
படசெலவு கைமீறிப் போக .. கடைசில கௌதம்,சூர்யா,ஜோ எல்லாரும் கொஞ்சம் கைக்காசப் போட்டு முடுச்சாங்க... படமும் வெற்றி..

சூர்யா அணுஅணுவாக ஜோவை கவனிக்க ஆரம்பிச்சது இந்தக் காலகட்டத்தில்தான்...

அம்மாவும், தங்கையும் சில சொந்தங்களை மட்டும் பார்த்து வளர்ந்த மொக்கை சூர்யாவுக்கு... வரப்போற மனைவியும் இவங்க வரிசைல இருக்கணும்னு ஒரு எண்ணம்...

ஷூட்டிங் ஸ்பாட்ல ..

சூர் :- ஏன் இவ்ளோ அவசர அவசரமா சாப்புட்றீங்க???
ஜோ :- இல்ல .. ப்ரேக் முடியறதுக்குள்ள அசிஸ்டெண்ட்ஸும் சாப்டனுமே..

சூர்யா மெதுவாக சாப்பிடுவார்.. ஒரு நாள் கூட தன் உதவியாளர்களை இப்பிடி கேட்டது கூட இல்லை.. சரி இவங்கள விடுங்க.. அம்மாவக் கூட கேட்டதில்லையேன்னு நெனக்கும் போது , அவமானமா இருந்ததாம்....

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் சூர்யாவின் மனசுக்குள் புகுந்தார் ஜோ.. ஆனா அவர் காட்டிக்கல.. பல நூறு முறை விலகிப் போனாலும் .. புகுந்து புறப்பட்டது காதல்..


எல்லா விஷயங்களிலும் தமிழ் கலாச்சாரம் கலந்து இருக்கும் ஒரு வீட்டில்.. மொழி தெரியாத,வேறு கலாச்சாரத்தில் பிறந்த , சம்பந்தமே இல்லாத சப்பாத்தி பொண்ணு எப்பிடி சேர்ந்தார்..??? 

வீட்டை சூர்யா எப்பிடி அனுகினார்??? எல்லாக் காதலிலுமே , அவர்கள் காதலின் ஆழத்தை , ஆழம் பார்ப்பது எதிர்ப்பு வரும் காலம்தான்.. 

அந்தக் காலம்.... அடுத்தடுத்த பதிவுகளில்....

இதுவரை நான் எழுதிய -->சரவணன் முதல் சூர்யா வரை இங்க போய் படிச்சுக்கங்க...

கவித.. கழுத.. கவுஜ .. தொடர் பதிவு



(டிஸ்கியை கண்டிப்பாக படிக்கவும்)

பாம்பே மாடல்

தெலுங்கு வில்லன்

மலையாளப் படக் கதை

ஹிந்தி தயாரிப்பாளர்

எல்லோரும் சேர்ந்து எடுத்தனர் ---- “தமிழ்ப் படம்”


 ****************************************************************



இறைவன் இருக்கான்னு நெனச்சா

நீ - நம்பிக்க

இல்லன்னு நெனச்சா

நீ - நகுந்துக்க

இவ்ளோதான் லைஃப்ஃபு...

இதுல ஏன் மாமா ஃபைட்டு ???

*******************************************************************





ஆனந்த விகடனுக்கு எழுதினேன் கவிதை.

அதில் வரவில்லை,

அன்பே !! உனக்கென எழுதினேன் அதை,

நீ என்னைத் 

திருப்பித்-தரவில்லை

*******************************************************************






கண்டபடி இப்பிடி டைப்பிட்டேன்

ஒரு டைப்பா இருக்குற இது - என்ன டைப்புன்னு 

கண்டுபுடிக்கிற பொறுப்பை உங்ககிட்ட குடுத்துட்டேன்

********************************************************************
டிஸ்கி

(இந்தப் படைப்புக்கு (??) முதல் பின்னூட்டமிடும் பதிவர் இதைப் போன்றே ஒரு தொடர் கவுஜ (கண்டமேனிக்கி கிருக்கணும்) எழுத கேட்டுக்கொள்கிறேன்)

June 08, 2009

இவ்ளோதானா தமிழ் சினிமா???


அப்பா -- எப்பவுமே திட்டணும் . இல்ல ஃப்ரெண்டா பழகுறேன்ற 
                   பேர்ல  கேனத்தனமா இருக்கனும்.



அம்மா -- கருணை உள்ளம். 




ஹீரோயின் -- கேக்கு
ஹீரோயின் ஃபாமிலி - - பேக்கு


குழந்தைங்க -- செட் ப்ராப்பர்டி
அண்ணி -வேஸ்ட் ப்ராப்பர்டி


தங்கை -  மாசமா இருந்தா ,அவ காலி.
தம்பி - ஹீரோ மாஸ்னா , இவன் காலி.





சினிமா காலேஜ் -  பாண்டி ”மடம்”
சித்தின்னா - பயங்கரமான ”மேடம்”




படத்தின் வில்லன் - ”கடைசி”ல வேலைக்கி ஆகமாட்டான்
ஹீரோவின் நண்பன் - ”கடைசி வரைக்கும்” வேலைக்கி ஆகமாட்டான்.





கிராமத்து பண்ணையார் - ஒரு நம்பியார்
கிராமத்து வாத்தியார் - புடிச்சு வெச்ச புள்ளையார்

எக்ஸ்ட்ரா 

*அண்ணன் தம்பி இருந்தா.. பிரிஞ்சேதான் ஆகணும்,
*அம்மான்னு ஒருத்தி இருந்தா கண்டிப்பா சாகணும்




*வில்லன்னா ஏமாத்தனும்.
*ஹீரோயின் டூபீஸ் -- ஏன் மாத்தனும்??

                                                இதெல்லாம் வெச்சு சும்மா குலுக்கிப் போட்டு “கொஞ்சம் பாட்டு,ஃபைட்டு”ன்னு தூவி ஒரு பாம்பே மாடல் , போட்டு எடுத்தா பின்நவீனத்துவ பக்கா “அக்மார்க் தமிழ் படம்” ரெடி.

எப்புடி நம்ம ஃபார்முலா ?
(இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்கப்பா...)

சுஜாதாவும் -- தமிழர்ஸ்.காமும்





சுஜாதா ஒரு முறை சொல்லியுள்ளார்...

“கலைஞனும் எழுத்தாளனும் ஒரு அம்பை எய்கின்றனர். அது எப்போது எப்படி அடுத்தவரைத் தாக்கும் என்பது தெரியாது...”

 கமல் என்னைக்கோ நடிச்ச நாயகன் படம் இன்னைக்கு டி.வி.ல பாக்குற 10 வயசு பையனை பாதிக்கும்..  சுஜாதாவோட நைலான் கயிறு இன்னைக்கு புதுசா படிக்கிறவங்களையும் ஏதோ ஒரு வகையில ஈர்க்கும்...

 அந்த வகையில இதுவரைக்கும் நான் எழுதுன ஏதாவது ஈர்த்ததோ அல்லது இனிமேயாவது ஒழுங்கா எழுதுடா மக்கான்னு சொல்லவோ நம்மையும் இந்த வார தமிழரா தேர்ந்தெடுத்து இருக்காங்க தமிழர்ஸ்.காம் . அப்டீன்ற செய்தி ஏதோ ஒரு ஃபீலிங்கா இருந்துச்சு..
(நம்மள மொத மொத மதிச்சு இருக்காங்களே .. அதனால)


அவங்களுக்கு நன்றி. 

இப்புடி ஒரே வார்த்தைல சொல்லாம ஒரு பத்தியாவது அவங்க பத்தி சொல்லனும்னு நெனக்கிறேன்.

ஆரம்பிச்சு 2 வாரத்துக்குள்ள நல்ல தரமான ஒரு திரட்டினு பதிவர்கள் மத்தியில பேர் எடுத்து இருக்கு.

5-8 வோட்டுக்கள் பெற்றாலே முதல் பக்கத்திற்க்கு அனுப்பி விடுகிறது.  என் நண்பர்கள் தளத்திலும் பார்வையிட்டேன்.. அவர்களுக்கு தமிழர்சால் கிடைத்த ஹிட்ஸ் நல்லாவே இருந்தது. தனிப்பட்ட முறையில் நம்ம கடைக்கும் வாடிக்கையாளர்கள சேத்ததுல அவங்களுக்கு(ம்) பங்கு உண்டு.

இப்போ அட்வைஸ்

 * நீங்களும் பிற திரட்டிகள பின் பற்றாதீர்கள்.
 * புதுசா ஏதாவது தோணுதா..??கண்டிப்ப செய்ங்க.. ஆதரிக்கவும் குட்டி முன்னேற்றவும் நாங்க இருக்கோம்.


*இதோ.. இந்த வாரத் தமிழர் மாதிரி.. இன்னும் நெறய நெறய எதிர்பாக்குறோம்.
யோசிச்சு செய்ங்க..
(பத்த வெச்சுட்டியே பரட்ட.... :-)

இந்த வார்த் தமிழர்ன்னு அவங்க போடுறதுல அவங்க சைட்டு பக்கம் மக்கள திருப்புனாலும்.. அது மூலயமா நம்ம கடைக்கும் ஆள் சேக்குறாங்க... நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களை வர வைக்கும் முயற்சி. 




* இன்னைக்குத்தான் பாத்தேன் சிறந்த வலைப்பூக்கள்ன்னு இன்னோன்னு.. இதுலயும் ரிஜிஸ்டர் பண்ணுங்க... நல்லா இருக்கு...



“இம்புட்டு செய்யுறதும்..மாஞ்சு மாஞ்சு எழுதுறதும்.... ‘நல்ல இருக்குடா’ன்னு உண்மையா ரசிச்சு சொல்ற ரெண்டு வார்த்தக்குத்தான்.

அப்பிடி நெறயா ரெண்டு வார்த்தைகளைத் தரப்போற தமிழர்ஸின் இந்த முயற்சிக்கு ஒரு ஸலாம்.



இப்போ என் படத்தைப் பற்றி... வலையுலகில் வந்தது முதலே முக்கால்வாசி அண்ணாச்சிகள் வயதைச் சொல்வதற்க்கு தயங்கினர்.. நாங்களும் சின்ன பையந்தான்பா சொல்லிகினாங்க.. அவங்க சின்ன பசங்கனா நாங்களாம் இன்னும் பொறக்கவே இல்லியா?? 

21 வயதே நிறம்பிய வாலிபனின் படத்தை (கடைக்குட்டியாக இருந்தாலும்)  எப்பிடி வெளியிடுவது என்றிருந்தேன். (லேடி ஃபேன்ஸ் தொல்ல ஜாஸ்தி ஆய்டும் யூ நோ??)

தனிப்பட்ட முறையில் யாரிடமும் வழிஞ்சு பேசாமல்.காக்கா புடிக்காமல் இவன் என்னமாவது கிறுக்கி இருப்பான்பான்னு நெனக்கிற அளவுக்கு ஒரு நண்பர்கள் கூட்டம் கெடக்குற வரைக்கும் என் முகத்தைக் காட்டக் கூடாதுன்னு நெனச்சேன்..

இப்போ நெனச்சத அடஞ்சுட்டேன்னு நெனக்குறேன்.... 

அதனால பிடியுங்கள் ”கடைக்குட்டி” அராஃபத்-ன் தரிசனம்.

June 07, 2009

பதிவர்கள் நல்லவர்களா??


நீங்க நல்ல பதிவரா?? கெட்ட பதிவரா?? (நாயகன் ஸ்டைல்ல படிக்கவும் ((அட நம்ம ஜே.கே. அண்ணனின் நாயகன் இல்லைப்பா..)படம் சும்மாப்பா..)

தெரிஞ்சுக்கணுமா??? அடுத்த பத்திய முழுசா படிச்சுட்டு (ஒரு முறை மட்டும்)  அதுக்கடுத்து  வரும் கேள்விக்கு விடையளிக்க...)

டெஸ்ட் ஸ்டார்ட்ஸ்... 

(மஞ்சளில் இருக்கும்வார்த்தைகளை நோட் செய்க)

 “அவன் அந்தத் தெருவில் வலப்புறம் திரும்பி, பின் செல்லும் வழியில் கொள்ளை கொள்ளும் அழகை கொல்லையில் நின்று பார்க்க.. “எந்தக் கொல்லைல போறவனோ பாத்துட்டான்னு” அவ கத்த... அவன் பதறி சிதறி ஓடினால் டி.வி.யில். ஒபாமா.. “i need CHANGE” என்று கேட்டது கலைஞர் அல்ல பக்கத்தில் 100 ரூபாய் நோட்டுடன் ஒருவன்.. கடன்காரர்களை சமாளிக்க சமோசா சாப்பிட்ட அவன் ஆஸ்பத்திரியில் நித்திரை கொள்ளும் வரை 

விடாது கருப்பு

ஓயாது அலை “

படிச்சாச்சா?? திருப்பி படிக்காதீங்க.. கேள்விக்கு போங்க..


1--> இன்னைக்கு எழுத மேட்டரே இல்லாததால நம்ம அண்ணன் ஜே.கே ரித்தீஷ் எம்.பி. அவர்களின் படத்தை மட்டும் போட்டு கைக்கு வந்ததை டைப்பி, பாருங்க மக்கான்னு நான் கூப்பிட்ட ஒரே காரணத்துக்காக வந்திருக்கீக....

நீங்கதாங்க நல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு..

 (இதுக்கு ஓட்டு போட்டு அடுத்தவரை காய உட்றது உங்க இஷ்டம் :-)